ஹதீஸ்கள்
#4536
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிóருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பார்களாக!” எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?” என்று கேட்டேன். உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டு விடுவீராக! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.75 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லது அதைப் போன்று' என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني عبد الله بن ابي الاسود، حدثنا حميد بن الاسود، ويزيد بن زريع، قالا حدثنا حبيب بن الشهيد، عن ابن ابي مليكة، قال قال ابن الزبير قلت لعثمان هذه الاية التي في البقرة {والذين يتوفون منكم ويذرون ازواجا} الى قوله {غير اخراج} قد نسختها الاخرى، فلم تكتبها قال تدعها. يا ابن اخي لا اغير شييا منه من مكانه. قال حميد او نحو هذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4536
- Book Index
- 59
Grades
- -
