Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்” எனும் (77:32ஆவது) இறைவசனத் திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர் காலத்திற்காக நாங்கள் எடுத்துவைப்போம். அவற்றுக்கு ‘அல்கஸர்’ எனப் பெயரிட்டு அழைத்துவந்தோம். (77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜிமாலத்துன் ஸுஃப்ர்’ எனும் சொற்றொடர், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவுக்குத் திரிக்கப்படும். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا يحيى، اخبرنا سفيان، حدثني عبد الرحمن بن عابس، سمعت ابن عباس رضى الله عنهما {ترمي بشرر} كنا نعمد الى الخشبة ثلاثة اذرع وفوق ذلك، فنرفعه للشتاء فنسميه القصر. {كانه جمالات صفر} حبال السفن تجمع حتى تكون كاوساط الرجال
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி” (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கிச் சீறிக்கொண்டு வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்)போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். அறிவிப்பாளரான உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது” என்று என் தந்தையிடமிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثني ابراهيم، عن الاسود، عن عبد الله، قال بينما نحن مع النبي صلى الله عليه وسلم في غار اذ نزلت عليه والمرسلات، فانه ليتلوها واني لاتلقاها من فيه وان فاه لرطب بها، اذ وثبت علينا حية فقال النبي صلى الله عليه وسلم " اقتلوها ". فابتدرناها فذهبت فقال النبي صلى الله عليه وسلم " وقيت شركم، كما وقيتم شرها ". قال عمر حفظته من ابي في غار بمنى
அபூசாலிஹ் ஃதக்வான் அஸ் ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரை யும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,) ‘‘(அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(நான் அறியாததற்குப் பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?” என்று கேட்டனர். அதற்கும் ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். பின்னர், ‘‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர! அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் சொன்னார்கள்.2 அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ما بين النفختين اربعون ". قال اربعون يوما قال ابيت. قال اربعون شهرا قال ابيت. قال اربعون سنة قال ابيت. قال " ثم ينزل الله من السماء ماء. فينبتون كما ينبت البقل ليس من الانسان شىء الا يبلى الا عظما واحدا وهو عجب الذنب، ومنه يركب الخلق يوم القيامة
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தமது நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள்போல் (நெருக்கமாகவே) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறக் கேட்டேன். (79:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாம்மா’ (அமளி) எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது’ என்று பொருள். அத்தியாயம் :
حدثنا احمد بن المقدام، حدثنا الفضيل بن سليمان، حدثنا ابو حازم، حدثنا سهل بن سعد رضى الله عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم قال باصبعيه هكذا بالوسطى والتي تلي الابهام " بعثت والساعة كهاتين
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதிவருகின்றவர் இரு மடங்கு நன்மைகளுக்குரியவரைப் போன்றவராவார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا قتادة، قال سمعت زرارة بن اوفى، يحدث عن سعد بن هشام، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم قال " مثل الذي يقرا القران وهو حافظ له مع السفرة الكرام البررة، ومثل الذي يقرا القران وهو يتعاهده وهو عليه شديد، فله اجران
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(அது) அகிலத் தாரின் அதிபதிமுன் மக்களெல்லாரும் நிற்கும் நாள்” எனும் (83:6ஆவது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘‘அன்று தம் இரு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا معن، قال حدثني مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال " {يوم يقوم الناس لرب العالمين} حتى يغيب احدهم في رشحه الى انصاف اذنيه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘‘எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவர் எளிதான முறையில் விசாரணைக் குள்ளாக்கப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ, அவர் அழிந்தார்” என்று கூறினார்கள்.2 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا يحيى، عن عثمان بن الاسود، قال سمعت ابن ابي مليكة، سمعت عايشة رضى الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم. حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابن ابي مليكة، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم. حدثنا مسدد، عن يحيى، عن ابي يونس، حاتم بن ابي صغيرة عن ابن ابي مليكة، عن القاسم، عن عايشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم " ليس احد يحاسب الا هلك ". قالت قلت يا رسول الله جعلني الله فداءك، اليس يقول الله عز وجل {فاما من اوتي كتابه بيمينه * فسوف يحاسب حسابا يسيرا}. قال " ذاك العرض يعرضون، ومن نوقش الحساب هلك
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(84:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபக்கன் அன் தபக்கின்’ எனும் சொற்றொடருக்கு ‘நிச்சயமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது’ என்பது பொருள்” என்று கூறிவிட்டு, ‘‘இந்த வசனம் உங்களுடைய நபி (ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :
حدثنا سعيد بن النضر، اخبرنا هشيم، اخبرنا ابو بشر، جعفر بن اياس عن مجاهد، قال قال ابن عباس {لتركبن طبقا عن طبق} حالا بعد حال، قال هذا نبيكم صلى الله عليه وسلم
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் (புலம்பெயர்ந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் பின் உமைர்’ (ரலி) அவர்களும் ‘இப்னு உம்மி மக்த்தூம்’ (ரலி) அவர்களும்தான். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தரலானார் கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகைய)ôல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவுக்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘‘இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று கூறி (மகிழலாயி)னர். நான், ‘‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வரவில்லை.2 அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرني ابي، عن شعبة، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال اول من قدم علينا من اصحاب النبي صلى الله عليه وسلم مصعب بن عمير وابن ام مكتوم فجعلا يقرياننا القران، ثم جاء عمار وبلال وسعد ثم جاء عمر بن الخطاب في عشرين ثم جاء النبي صلى الله عليه وسلم فما رايت اهل المدينة فرحوا بشىء فرحهم به، حتى رايت الولايد والصبيان يقولون هذا رسول الله قد جاء. فما جاء حتى قرات {سبح اسم ربك الاعلى} في سور مثلها
அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘‘(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத் துவத்திற்குச் சான்றாகப் பாறையிóருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்ற வனையும் நினைவுகூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களிலுள்ள நற்பேறற்ற ஒருவன் முன்வந்தபோது...” எனும் (91:12ஆவது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘‘அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்திற்காக (அதாவது அதைக் கொல்வதற்காக) முன்வந்தான்” என்று சொன்னார்கள்.2 மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காகப்) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு (உடலிலிருந்து பிரியும் துர்)வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) ‘உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?” என்று கேட்டபடி அறிவுரை கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘‘(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் பின் அல்அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூஸம்ஆவைப் போல (செல்வாக்கு மிக்கவனாக) இருந்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا هشام، عن ابيه، انه اخبره عبد الله بن زمعة، انه سمع النبي صلى الله عليه وسلم يخطب وذكر الناقة والذي عقر فقال رسول الله صلى الله عليه وسلم " {اذ انبعث اشقاها} انبعث لها رجل عزيز عارم، منيع في رهطه، مثل ابي زمعة ". وذكر النساء فقال " يعمد احدكم يجلد امراته جلد العبد، فلعله يضاجعها من اخر يومه ". ثم وعظهم في ضحكهم من الضرطة وقال " لم يضحك احدكم مما يفعل ". وقال ابو معاوية حدثنا هشام عن ابيه عن عبد الله بن زمعة قال النبي صلى الله عليه وسلم " مثل ابي زمعة عم الزبير بن العوام
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ‘‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார் கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள். உடனே நான், ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல்உன்ஸா” என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன்.அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர்களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘‘(இப்படித்தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதல் முறையிலுள்ள, ‘‘வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றார்கள்)” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
حدثنا قبيصة بن عقبة، حدثنا سفيان، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، قال دخلت في نفر من اصحاب عبد الله الشام فسمع بنا ابو الدرداء فاتانا فقال افيكم من يقرا فقلنا نعم. قال فايكم اقرا فاشاروا الى فقال اقرا. فقرات {والليل اذا يغشى * والنهار اذا تجلى * والذكر والانثى}. قال انت سمعتها من في صاحبك قلت نعم. قال وانا سمعتها من في النبي صلى الله عليه وسلم وهولاء يابون علينا
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்த) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள். பிறகு, ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘நாங்கள் அனைவரும்தான்” என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா” எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா (ரஹ்) அவர்கள், ‘வஃத்தகரி வல்உன்ஸா’ என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘நான் சாட்சியம் கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்), ‘வமா கலக்கஃத் தக்கர வல்உன்ஸா’ என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :
حدثنا عمر، حدثنا ابي، حدثنا الاعمش، عن ابراهيم، قال قدم اصحاب عبد الله على ابي الدرداء فطلبهم فوجدهم فقال ايكم يقرا على قراءة عبد الله قال كلنا. قال فايكم يحفظ واشاروا الى علقمة. قال كيف سمعته يقرا {والليل اذا يغشى}. قال علقمة {والذكر والانثى}. قال اشهد اني سمعت النبي صلى الله عليه وسلم يقرا هكذا، وهولاء يريدوني على ان اقرا {وما خلق الذكر والانثى} والله لا اتابعهم
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கத் (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத் தின்) வழியை நாம் எளிதாக்குவோம். எவர் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ் வையும்) பொருட்படுத்தாது, (இம் மார்க்கத்திலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கிவிடுகின்றாரோ, அவருக் குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்” எனும் (92:5-10) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.4 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن الاعمش، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن السلمي، عن علي رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في بقيع الغرقد في جنازة فقال " ما منكم من احد الا وقد كتب مقعده من الجنة ومقعده من النار ". فقالوا يا رسول الله افلا نتكل فقال " اعملوا فكل ميسر ". ثم قرا {فاما من اعطى واتقى * وصدق بالحسنى} الى قوله {للعسرى}
حدثنا مسدد، حدثنا عبد الواحد، حدثنا الاعمش، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه قال كنا قعودا عند النبي صلى الله عليه وسلم فذكر الحديث
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ அவருக்கு, எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا بشر بن خالد، اخبرنا محمد بن جعفر، حدثنا شعبة، عن سليمان، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن السلمي، عن علي رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم. انه كان في جنازة فاخذ عودا ينكت في الارض فقال " ما منكم من احد الا وقد كتب مقعده من النار او من الجنة ". قالوا يا رسول الله افلا نتكل قال " اعملوا فكل ميسر {فاما من اعطى واتقى * وصدق بالحسنى} الاية. قال شعبة وحدثني به منصور فلم انكره من حديث سليمان
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’ ஒன்றுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். உடனே நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவருக்கு எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا وكيع، عن الاعمش، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي عليه السلام قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فقال " ما منكم من احد الا وقد كتب مقعده من الجنة ومقعده من النار ". فقلنا يا رسول الله افلا نتكل قال " لا، اعملوا فكل ميسر ". ثم قرا {فاما من اعطى واتقى * وصدق بالحسنى * فسنيسره لليسرى} الى قوله {فسنيسره للعسرى}
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல் ஃகர்கதி’ல் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு ‘‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறுள்ளதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள். ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பேறு பெற்றவரோ அவர் நற்பேறுள்ளவராக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) நற்பேறற்றவரோ அவர் நற்பேறற்றவர் களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن السلمي، عن علي رضى الله عنه قال كنا في جنازة في بقيع الغرقد، فاتانا رسول الله صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله، ومعه مخصرة فنكس، فجعل ينكت بمخصرته ثم قال " ما منكم من احد وما من نفس منفوسة الا كتب مكانها من الجنة والنار، والا قد كتبت شقية او سعيدة ". قال رجل يا رسول الله افلا نتكل على كتابنا وندع العمل فمن كان منا من اهل السعادة فسيصير الى اهل السعادة، ومن كان منا من اهل الشقاء فسيصير الى عمل اهل الشقاوة. قال " اما اهل السعادة فييسرون لعمل اهل السعادة واما اهل الشقاوة فييسرون لعمل اهل الشقاء ". ثم قرا {فاما من اعطى واتقى * وصدق بالحسنى} الاية
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (‘பகீஉல் ஃகர்கத்’ மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொரு வருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகைசெய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழிகாணப்படும்” என்று கூறிவிட்டு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.5 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن الاعمش، قال سمعت سعد بن عبيدة، يحدث عن ابي عبد الرحمن السلمي، عن علي رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم في جنازة فاخذ شييا فجعل ينكت به الارض فقال " ما منكم من احد الا وقد كتب مقعده من النار ومقعده من الجنة ". قالوا يا رسول الله افلا نتكل على كتابنا وندع العمل قال " اعملوا فكل ميسر لما خلق له، اما من كان من اهل السعادة فييسر لعمل اهل السعادة، واما من كان من اهل الشقاء فييسر لعمل اهل الشقاوة ". ثم قرا {فاما من اعطى واتقى * وصدق بالحسنى} الاية
ஜுன்துப் பின் (அப்தில்லாஹ் பின்) சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக்கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை” என்று கூறினாள்.2 அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின்மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.3 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا الاسود بن قيس، قال سمعت جندب بن سفيان رضى الله عنه قال اشتكى رسول الله صلى الله عليه وسلم فلم يقم ليلتين او ثلاثا، فجاءت امراة فقالت يا محمد اني لارجو ان يكون شيطانك قد تركك، لم اره قربك منذ ليلتين او ثلاثا. فانزل الله عز وجل {والضحى * والليل اذا سجى * ما ودعك ربك وما قلى}
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத்தான் வந்துள்ளார் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.4 அப்போதுதான், ‘‘(நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:3ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، غندر حدثنا شعبة، عن الاسود بن قيس، قال سمعت جندبا البجلي، قالت امراة يا رسول الله ما ارى صاحبك الا ابطاك. فنزلت {ما ودعك ربك وما قلى}