ஹதீஸ்கள்
#4941
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் (புலம்பெயர்ந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் பின் உமைர்’ (ரலி) அவர்களும் ‘இப்னு உம்மி மக்த்தூம்’ (ரலி) அவர்களும்தான். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தரலானார் கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகைய)ôல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவுக்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘‘இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று கூறி (மகிழலாயி)னர். நான், ‘‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வரவில்லை.2 அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرني ابي، عن شعبة، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال اول من قدم علينا من اصحاب النبي صلى الله عليه وسلم مصعب بن عمير وابن ام مكتوم فجعلا يقرياننا القران، ثم جاء عمار وبلال وسعد ثم جاء عمر بن الخطاب في عشرين ثم جاء النبي صلى الله عليه وسلم فما رايت اهل المدينة فرحوا بشىء فرحهم به، حتى رايت الولايد والصبيان يقولون هذا رسول الله قد جاء. فما جاء حتى قرات {سبح اسم ربك الاعلى} في سور مثلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4941
- Book Index
- 462
Grades
- -
