ஹதீஸ்கள்
#4943
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ‘‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார் கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள். உடனே நான், ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல்உன்ஸா” என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன்.அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர்களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘‘(இப்படித்தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதல் முறையிலுள்ள, ‘‘வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றார்கள்)” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4943
- Book Index
- 464
Grades
- -