ஹதீஸ்கள்
#4947
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’ ஒன்றுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். உடனே நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவருக்கு எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4947
- Book Index
- 469
Grades
- -