ஹதீஸ்கள்
#4948
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல் ஃகர்கதி’ல் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு ‘‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறுள்ளதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள். ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பேறு பெற்றவரோ அவர் நற்பேறுள்ளவராக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) நற்பேறற்றவரோ அவர் நற்பேறற்றவர் களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4948
- Book Index
- 470
Grades
- -