Loading...

Loading...
நூல்கள்
௧௬௦ ஹதீஸ்கள்
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، عن عايشة، ان ابا بكر رضى الله عنه دخل عليها وعندها جاريتان في ايام منى تدففان وتضربان، والنبي صلى الله عليه وسلم متغش بثوبه، فانتهرهما ابو بكر، فكشف النبي صلى الله عليه وسلم عن وجهه، فقال " دعهما يا ابا بكر، فانها ايام عيد، وتلك الايام ايام منى ". وقالت عايشة رايت النبي صلى الله عليه وسلم يسترني، وانا انظر الى الحبشة، وهم يلعبون في المسجد فزجرهم {عمر} فقال النبي صلى الله عليه وسلم " دعهم امنا بني ارفدة ". يعني من الامن
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، عن عايشة، ان ابا بكر رضى الله عنه دخل عليها وعندها جاريتان في ايام منى تدففان وتضربان، والنبي صلى الله عليه وسلم متغش بثوبه، فانتهرهما ابو بكر، فكشف النبي صلى الله عليه وسلم عن وجهه، فقال " دعهما يا ابا بكر، فانها ايام عيد، وتلك الايام ايام منى ". وقالت عايشة رايت النبي صلى الله عليه وسلم يسترني، وانا انظر الى الحبشة، وهم يلعبون في المسجد فزجرهم {عمر} فقال النبي صلى الله عليه وسلم " دعهم امنا بني ارفدة ". يعني من الامن
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பாளர்கள் வசைக்கவி பாடியபோது) இணைவைப்பாளர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களு டன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது) எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவி யெடுப்பதுபோல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி)விடுவேன்” என்று சொன்னார்கள். உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்.51 அவர்கள், “அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثني عثمان بن ابي شيبة، حدثنا عبدة، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت استاذن حسان النبي صلى الله عليه وسلم في هجاء المشركين، قال " كيف بنسبي ". فقال حسان لاسلنك منهم كما تسل الشعرة من العجين. وعن ابيه قال ذهبت اسب حسان عند عايشة فقالت لا تسبه فانه كان ينافح عن النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ' (அழிப்பவர்) ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்' (ஒன்று திரட்டுபவர்) ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்.54 நான் “ஆகிப்' (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني ابراهيم بن المنذر، قال حدثني معن، عن مالك، عن ابن شهاب، عن محمد بن جبير بن مطعم، عن ابيه رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لي خمسة اسماء انا محمد، واحمد، وانا الماحي الذي يمحو الله بي الكفر، وانا الحاشر الذي يحشر الناس على قدمي، وانا العاقب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷி (இறைமறுப்பாளர்)களின் ஏச்சையும், அவர்களின் சாபத்தையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படித் திருப்பிவிடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? (என்னை) “முதம்மம்' (இகழப்படுவர்)' என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; “முதம்மம்' என்று (சொல்óயே) சபிக்கிறார்கள். ஆனால், நானோ “முஹம்மத்' (புகழப்படுபவர்) ஆவேன்.55 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " الا تعجبون كيف يصرف الله عني شتم قريش ولعنهم يشتمون مذمما ويلعنون مذمما وانا محمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் (மற்ற) இறைத்தூதர் களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதை, ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமை யாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டு விட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கல் லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந் தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலானார்கள்.57 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، حدثنا سليم، حدثنا سعيد بن ميناء، عن جابر بن عبد الله رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " مثلي ومثل الانبياء كرجل بنى دارا فاكملها واحسنها، الا موضع لبنة، فجعل الناس يدخلونها ويتعجبون، ويقولون لولا موضع اللبنة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங் கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான்தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதி யானவன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا اسماعيل بن جعفر، عن عبد الله بن دينار، عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " ان مثلي ومثل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فاحسنه واجمله، الا موضع لبنة من زاوية، فجعل الناس يطوفون به ويعجبون له، ويقولون هلا وضعت هذه اللبنة قال فانا اللبنة، وانا خاتم النبيين
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். “சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் இதே போன்ற ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم توفي وهو ابن ثلاث وستين. وقال ابن شهاب واخبرني سعيد بن المسيب مثله
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சந்தையில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர், “அபுல்காசிமே!” என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து, “என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.59 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن حميد، عن انس رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم في السوق فقال رجل يا ابا القاسم. فالتفت النبي صلى الله عليه وسلم فقال " سموا باسمي، ولا تكتنوا بكنيتي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்.60 இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا شعبة، عن منصور، عن سالم، عن جابر رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " تسموا باسمي، ولا تكتنوا بكنيتي
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபுல்காசிம் (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن ايوب، عن ابن سيرين، قال سمعت ابا هريرة، يقول قال ابو القاسم صلى الله عليه وسلم " سموا باسمي، ولا تكتنوا بكنيتي
ஜுஐத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர் களாக, (அந்த வயதிலும்) திடகாத்திர மானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக நான் கண்டேன். அவர்கள், “எனக்குக் கேள்விப் புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யால்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்று சொன்னார்கள்.61 அத்தியாயம் :
حدثني اسحاق، اخبرنا الفضل بن موسى، عن الجعيد بن عبد الرحمن، رايت السايب بن يزيد ابن اربع وتسعين جلدا معتدلا فقال قد علمت ما متعت به سمعي وبصري الا بدعاء رسول الله صلى الله عليه وسلم، ان خالتي ذهبت بي اليه فقالت يا رسول الله ان ابن اختي شاك فادع الله. قال فدعا لي
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (இரக்கத் துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிராத்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார் கள். அவர்கள் உளூ செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களுடைய இரு தோள்களுக் கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். (நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், “குதிரையின் இரு கண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் ஹம்ஸா (ரஹ்) அவர்கள், “மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது” என்று கூறியுள்ளார்கள்.63 அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد الله، حدثنا حاتم، عن الجعيد بن عبد الرحمن، قال سمعت السايب بن يزيد، قال ذهبت بي خالتي الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان ابن اختي. وقع فمسح راسي ودعا لي بالبركة، وتوضا فشربت من وضويه، ثم قمت خلف ظهره فنظرت الى خاتم بين كتفيه. قال ابن عبيد الله الحجلة من حجل الفرس الذي بين عينيه. قال ابراهيم بن حمزة مثل زر الحجلة
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹசன் (ரலி) அவர்களைக் குழந்தைகளுடன் விளை யாடிக்கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக்கொண்டு, “என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கின்றாய்; (உன் தந்தை) அலீ அவர்களைப் போன்று இல்லை” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.64 அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن عمر بن سعيد بن ابي حسين، عن ابن ابي مليكة، عن عقبة بن الحارث، قال صلى ابو بكر رضى الله عنه العصر، ثم خرج يمشي فراى الحسن يلعب مع الصبيان، فحمله على عاتقه وقال بابي شبيه بالنبي لا شبيه بعلي. وعلي يضحك
அபூஜுஹைஃபா (ரலி அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த் திருக்கிறேன். ஹசன் (ரலி) அவர்கள், (தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا اسماعيل، عن ابي جحيفة رضى الله عنه قال رايت النبي صلى الله عليه وسلم وكان الحسن يشبهه
இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான் அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பை எனக்குக் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிறம் கொண்ட தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். எங்களுக்குப் பதின்மூன்று பெண் ஒட்டகங்கள் தரும்படி உத்தரவிட்டார்கள். அதை நாங்கள் கைவசம் பெற்றுக் கொள்வதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.” என்று கூறினார்கள்.65 அத்தியாயம் :
حدثني عمرو بن علي، حدثنا ابن فضيل، حدثنا اسماعيل بن ابي خالد، قال سمعت ابا جحيفة رضى الله عنه قال رايت النبي صلى الله عليه وسلم وكان الحسن بن علي عليهما السلام يشبهه قلت لابي جحيفة صفه لي. قال كان ابيض قد شمط. وامر لنا النبي صلى الله عليه وسلم بثلاث عشرة قلوصا قال فقبض النبي صلى الله عليه وسلم قبل ان نقبضها
அபூஜுஹைஃபா அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக் கிறேன். அவர்களுடைய கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن رجاء، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن وهب ابي جحيفة السوايي، قال رايت النبي صلى الله عليه وسلم ورايت بياضا من تحت شفته السفلى العنفقة
ஹரீஸ் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(நான் அவர்களைப் பார்த்தபோது) அவர்களுடைய கீழுதட்டின் அடியில் (தாடைக்கு மேலே) உள்ள குறுந்தாடியில் வெள்ளை முடிகள் இருந்தன” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عصام بن خالد، حدثنا حريز بن عثمان، انه سال عبد الله بن بسر صاحب النبي صلى الله عليه وسلم قال ارايت النبي صلى الله عليه وسلم كان شيخا قال كان في عنفقته شعرات بيض
ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. மாநிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர் களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர் களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட லாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்துவந்தார்கள்.66 மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்துவந்தார்கள். அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒன்றை (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது. நான் (அது குறித்து, நபியவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, “(நபியவர்கள் பூசிக்கொண்ட) நறுமணப் பொருளின் காரணத்தால் அது சிவப்பாகிவிட்டது” என்று பதிலளிக்கப்பட்டது. அத்தியாயம் :
حدثني ابن بكير، قال حدثني الليث، عن خالد، عن سعيد بن ابي هلال، عن ربيعة بن ابي عبد الرحمن، قال سمعت انس بن مالك، يصف النبي صلى الله عليه وسلم قال كان ربعة من القوم، ليس بالطويل ولا بالقصير، ازهر اللون ليس بابيض امهق ولا ادم، ليس بجعد قطط ولا سبط رجل، انزل عليه وهو ابن اربعين، فلبث بمكة عشر سنين ينزل عليه وبالمدينة عشر سنين، وليس في راسه ولحيته عشرون شعرة بيضاء. قال ربيعة فرايت شعرا من شعره، فاذا هو احمر فسالت فقيل احمر من الطيب
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர் களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. நாற்பது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கி யிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லாத நிலையில் அவர்களை அல்லாஹ் இறக்கச்செய்தான். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك بن انس، عن ربيعة بن ابي عبد الرحمن، عن انس بن مالك رضى الله عنه انه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل الباين ولا بالقصير، ولا بالابيض الامهق، وليس بالادم وليس بالجعد القطط ولا بالسبط، بعثه الله على راس اربعين سنة، فاقام بمكة عشر سنين، وبالمدينة عشر سنين، فتوفاه الله، وليس في راسه ولحيته عشرون شعرة بيضاء