ஹதீஸ்கள்
#3531
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பாளர்கள் வசைக்கவி பாடியபோது) இணைவைப்பாளர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களு டன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது) எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவி யெடுப்பதுபோல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி)விடுவேன்” என்று சொன்னார்கள். உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்.51 அவர்கள், “அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3531
- Book Index
- 40
Grades
- -