Loading...

Loading...
நூல்கள்
௧௬௦ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதர் தம்மைத் தம் தந்தையல்லாத வருடன் இணைத்து (நான் அவருடைய மகன் என்று) கூறுவதும், தம் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், அல்லாஹ்வின் தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்.21 இதை வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عياش، حدثنا حريز، قال حدثني عبد الواحد بن عبد الله النصري، قال سمعت واثلة بن الاسقع، يقول قال رسول الله صلى الله عليه وسلم " ان من اعظم الفرى ان يدعي الرجل الى غير ابيه، او يري عينه ما لم تر، او يقول على رسول الله صلى الله عليه وسلم ما لم يقل
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் இந்தக் குடும்பத்தார் ஆவோம். உங்களைச் சந்திக்க விடாமல் “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் எங்களைத் தடை செய்கிறார்கள். ஆகவே, (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) ஒவ்வொரு புனித மாதத்திலும்தான் நாங்கள் உங்களிடம் வந்து சேர முடிகிறது. எனவே, (இப்போது) நீங்கள் எங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களுக்கு அப்பாóருப்ப வர்களிடம் அதை எடுத்துரைப்போம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிட்டு, நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமென்று தடுக்கின்றேன். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை' என்று உறுதிகூறுவது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்குச் செலுத்திவிடுவது ஆகியவைதான் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள். மேலும், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்கள் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை (உபயோகிக்க வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد، عن ابي جمرة، قال سمعت ابن عباس رضى الله عنهما يقول قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله انا من هذا الحى من ربيعة قد حالت بيننا وبينك كفار مضر، فلسنا نخلص اليك الا في كل شهر حرام، فلو امرتنا بامر، ناخذه عنك، ونبلغه من وراءنا. قال " امركم باربع، وانهاكم عن اربع، الايمان بالله شهادة ان لا اله الا الله، واقام الصلاة وايتاء الزكاة، وان تودوا الى الله خمس ما غنمتم، وانهاكم عن الدباء، والحنتم، والنقير، والمزفت
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி, “தெரிந்துகொள்ளுங்கள்: குழப்பம், இங்கே ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்துதான் தோன்றும்” என்று கிழக்குத் திசையை நோக்கிச் சைகை செய்தபடி கூறினார்.23 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، عن سالم بن عبد الله، ان عبد الله بن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو على المنبر " الا ان الفتنة ها هنا يشير الى المشرق من حيث يطلع قرن الشيطان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளும், அன்சாரிகளும், ஜுஹைனா குலத்தாரும், முஸைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் (இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத்தால்) என் பிரத்யேகமான உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن سعد، عن عبد الرحمن بن هرمز، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " قريش والانصار وجهينة ومزينة واسلم وغفار واشجع موالي، ليس لهم مولى دون الله ورسوله
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி,” “ஃகிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப் பானாக! “அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! “உஸய்யா' குலம் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது” என்று சொன்னார்கள்.26 அத்தியாயம் :
حدثني محمد بن غرير الزهري، حدثنا يعقوب بن ابراهيم، عن ابيه، عن صالح، حدثنا نافع، ان عبد الله، اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال على المنبر " غفار غفر الله لها، واسلم سالمها الله، وعصية عصت الله ورسوله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ஃகிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا عبد الوهاب الثقفي، عن ايوب، عن محمد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اسلم سالمها الله، وغفار غفر الله لها
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ அஸத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக உள்ளனவா என்று எனக் குத் தெரிவியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள்), “அவர்கள் நஷ்டமடைந்தார்கள்; இழப்புக்குள்ளானார்கள்” என்று சொன் னார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை;) அவர்கள் (ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள் இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத் தால்), பனூ தமீம், பனூ அசத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகியவர் களைவிடச் சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان،. حدثني محمد بن بشار، حدثنا ابن مهدي، عن سفيان، عن عبد الملك بن عمير، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابيه، قال النبي صلى الله عليه وسلم " ارايتم ان كان جهينة ومزينة واسلم وغفار خيرا من بني تميم وبني اسد، ومن بني عبد الله بن غطفان ومن بني عامر بن صعصعة ". فقال رجل خابوا وخسروا. فقال " هم خير من بني تميم ومن بني اسد، ومن بني عبد الله بن غطفان، ومن بني عامر بن صعصعة
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர் களான அஸ்லம், ஃகிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தான்” என்று கூறினார்கள். -றமற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறியதாக) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் பின் அபீயஅகூப் சந்தேகத் துடன் கூறுகிறார்- நபி (ஸல்) அவர்கள், “பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத், மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய குலங்களைவிட அஸ்லம், ஃகிஃபார், மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தாரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத் மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய) அவர்களைவிடச் சிறந்தவர்களே” என்று சொன்னார்கள். -(அஸ்லம், ஃகிஃபார், முஸைனா குலத்தாருடன்) ஜுஹைனா குலத்தாரையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீயஅகூப் (ரஹ்) கூறுகிறார்-27 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா, ஜுஹைனா ஆகிய குலங் களில் சிலரும்- அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும்28 அல்லாஹ்விடத்தில்- அல்லது மறுமை நாளில்-29 அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள்.30 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن محمد بن ابي يعقوب، قال سمعت عبد الرحمن بن ابي بكرة، عن ابيه، ان الاقرع بن حابس، قال للنبي صلى الله عليه وسلم انما بايعك سراق الحجيج من اسلم وغفار ومزينة واحسبه وجهينة ابن ابي يعقوب شك قال النبي صلى الله عليه وسلم " ارايت ان كان اسلم وغفار ومزينة واحسبه وجهينة خيرا من بني تميم وبني عامر واسد وغطفان، خابوا وخسروا ". قال نعم. قال " والذي نفسي بيده، انهم لخير منهم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஹ்த்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழிநடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.32 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني سليمان بن بلال، عن ثور بن زيد، عن ابي الغيث، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى يخرج رجل من قحطان يسوق الناس بعصاه
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பனுல் முஸ்த்தலிக்) அறப்போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்கள் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார்.34 ஆகவே, அந்த அன்சாரி கடுங்கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, “அன்சாரிகளே!” என்றழைத்தார். முஹாஜிர், “முஹாஜிர் களே!” என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?” என்று கேட்டு விட்டு, “அவ்விருவரின் விவகாரம் என்ன?” என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அறியாமைக் கால அழைப்பைக் கை விடுங்கள். இது அருவருப்பானது” என்று சொன்னார்கள். (நயவஞ்சகர்களின் தலைவரான) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “நமக்கெதிராக (இந்த அகதி களான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா? நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றிவிடுவார் கள்” என்று (விஷமமாகச்) சொன்னார். உடனே உமர் (ரலி) அவர்கள், “இந்தத் தீயவரை நாம் கொன்றுவிட வேண்டாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று அப்துல்லாஹ் பின் உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவரைக்) கொல்ல வேண்டாம். மக்கள், “முஹம்மத் தம் தோழர்களைக்கூட கொல் கிறார்' என்று பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا مخلد بن يزيد، اخبرنا ابن جريج، قال اخبرني عمرو بن دينار، انه سمع جابرا رضى الله عنه يقول غزونا مع النبي صلى الله عليه وسلم وقد ثاب معه ناس من المهاجرين حتى كثروا، وكان من المهاجرين رجل لعاب فكسع انصاريا، فغضب الانصاري غضبا شديدا، حتى تداعوا، وقال الانصاري يا للانصار. وقال المهاجري يا للمهاجرين. فخرج النبي صلى الله عليه وسلم فقال " ما بال دعوى اهل الجاهلية ". ثم قال " ما شانهم ". فاخبر بكسعة المهاجري الانصاري قال فقال النبي صلى الله عليه وسلم " دعوها فانها خبيثة ". وقال عبد الله بن ابى ابن سلول اقد تداعوا علينا، لين رجعنا الى المدينة ليخرجن الاعز منها الاذل. فقال عمر الا نقتل يا رسول الله هذا الخبيث لعبد الله. فقال النبي صلى الله عليه وسلم " لا يتحدث الناس انه كان يقتل اصحابه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني ثابت بن محمد، حدثنا سفيان، عن الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم. وعن سفيان، عن زبيد، عن ابراهيم، عن مسروق، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم " ليس منا من ضرب الخدود، وشق الجيوب، ودعا بدعوى الجاهلية
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கின்திஃப் என்பார்தான் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார்.36 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني اسحاق بن ابراهيم، حدثنا يحيى بن ادم، اخبرنا اسراييل، عن ابي حصين، عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " عمرو بن لحى بن قمعة بن خندف ابو خزاعة
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்பஹீரா' என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். “சாயிபா' என்பது அரபியர் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். ஆகவே, அதன்மீது சுமை எதுவும் ஏற்றப்படாது. மேலும், நபி (ஸல்) அவர்கள், “குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர், நரகத்தில் தமது குடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் முதன்முதலில் “சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்துகொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال سمعت سعيد بن المسيب، قال البحيرة التي يمنع درها للطواغيت ولا يحلبها احد من الناس، والسايبة التي كانوا يسيبونها لالهتهم فلا يحمل عليها شىء. قال وقال ابو هريرة قال النبي صلى الله عليه وسلم " رايت عمرو بن عامر بن لحى الخزاعي يجر قصبه في النار، وكان اول من سيب السوايب
அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள், “சரி (அறிவியுங் கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது “ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டுவா” என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி உண்டு?' என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளை யிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை' என்று கூறினேன். பிறகு தோலால் ஆன (தண்ணீர்) பையையும் கைத் தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக்கொள்ளாமலிருக்கத் தொடங்கி னேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாத தால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் (தாம் தங்க வேண்டிய) தமது வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்” என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்ப தாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்” என்று சொன்னார்கள். நான் அப்போது “இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பி னேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டுவரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பி னேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்வதைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க்கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூதர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்துவைப்பீராக. உமது ஊருக்குத் திரும்பிச் செல்வீராக. நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உமக்கு எட்டும் போது எங்களை நோக்கி வருவீராக” என்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷியர் அங்கே இருந்தனர். நான், “குறைஷி குலத்தாரே! “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை' என்று நான் உறுதி கூறுகின்றேன். “முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகின் றேன்” என்று சொன்னேன். உடனே அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்)கொண்டார்கள். பிறகு குறைஷியரை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் ஃகிஃபார் குலத்தார் வசிக்கு மிடத்தையொட்டித்தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)”38 என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னைவிட்டு விலகிவிட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்துகொண்டதைப் போலவே நடந்துகொண்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்துகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்)கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (இன்றும்) சொன்னார்கள். (இதை அறிவித்தபிறகு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதர்ருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத் தாரும், முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சிலரும் அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலத்தாரைவிட அல்லாஹ்விடம்- அல்லது மறுமை நாளில்- சிறந்தவர்கள் ஆவர். -இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சிலரும்” என்றும் கூறியிருக்கலாம்; (அதற்குப் பதிலாக) “ஜுஹைனா குலத்தாரில் சிலரும்” என்று மட்டுமோ “முஸைனா குலத்தாரில் சிலரும்” என்று மட்டுமோ கூறியிருக்கலாம் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.40 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن محمد، عن ابي هريرة رضى الله عنه قال قال اسلم وغفار وشىء من مزينة وجهينة او قال شىء من جهينة او مزينة خير عند الله او قال يوم القيامة من اسد وتميم وهوازن وغطفان
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் “அல்அன்ஆம்' (எனும் 6ஆவது) அத்தியாயத்தில் நூற்று முப்பதாவது வசனத்திற்குமேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: எவர் அறியாமையாலும் மூடத்தனத்தாலும் தம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அல்லாஹ்வின் மீது பழி சுமத்தித் தங்களுக்கு வழங்கியிருந்த வற்றைத் தாமாகவே தடை செய்து கொண்டார்களோ, அவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய் விட்டார்கள். அவர்கள் நல்வழி பெற்றவர் களாய் இல்லை. (6:140)41 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال اذا سرك ان تعلم جهل العرب فاقرا ما فوق الثلاثين وماية في سورة الانعام {قد خسر الذين قتلوا اولادهم سفها بغير علم} الى قوله {قد ضلوا وما كانوا مهتدين}
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள், “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷி யரின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.44 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا عمرو بن مرة، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال لما نزلت {وانذر عشيرتك الاقربين} جعل النبي صلى الله عليه وسلم ينادي " يا بني فهر، يا بني عدي لبطون قريش
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் குலங்கள் குலங்களாக (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அத்தியாயம் :
وقال لنا قبيصة اخبرنا سفيان، عن حبيب بن ابي ثابت، عن سعيد بن جبير، عن ابن عباس، قال لما نزلت {وانذر عشيرتك الاقربين} جعل النبي صلى الله عليه وسلم يدعوهم قبايل قبايل
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.45 அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் பின் அல்அவ்வாமின் தாயாரே!46 முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ் விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங் கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.)47 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، اخبرنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال " يا بني عبد مناف، اشتروا انفسكم من الله، يا بني عبد المطلب اشتروا انفسكم من الله، يا ام الزبير بن العوام عمة رسول الله، يا فاطمة بنت محمد، اشتريا انفسكما من الله، لا املك لكما من الله شييا، سلاني من مالي ما شيتما
அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: (ஏதோ பேசுவதற்காக ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை(த் தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், “உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஅமான் பின் முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن قتادة، عن انس رضى الله عنه قال دعا النبي صلى الله عليه وسلم الانصار فقال " هل فيكم احد من غيركم ". قالوا لا، الا ابن اخت لنا. فقال رسول الله صلى الله عليه وسلم " ابن اخت القوم منهم
حدثنا زيد هو ابن اخزم قال ابو قتيبة سلم بن قتيبة حدثني مثنى بن سعيد القصير، قال حدثني ابو جمرة، قال لنا ابن عباس الا اخبركم باسلام ابي ذر، قال قلنا بلى. قال قال ابو ذر كنت رجلا من غفار، فبلغنا ان رجلا قد خرج بمكة، يزعم انه نبي، فقلت لاخي انطلق الى هذا الرجل كلمه واتني بخبره. فانطلق فلقيه، ثم رجع فقلت ما عندك فقال والله لقد رايت رجلا يامر بالخير وينهى عن الشر. فقلت له لم تشفني من الخبر. فاخذت جرابا وعصا، ثم اقبلت الى مكة فجعلت لا اعرفه، واكره ان اسال عنه، واشرب من ماء زمزم واكون في المسجد. قال فمر بي علي فقال كان الرجل غريب. قال قلت نعم. قال فانطلق الى المنزل. قال فانطلقت معه لا يسالني عن شىء، ولا اخبره، فلما اصبحت غدوت الى المسجد لاسال عنه، وليس احد يخبرني عنه بشىء. قال فمر بي علي فقال اما نال للرجل يعرف منزله بعد قال قلت لا. قال انطلق معي. قال فقال ما امرك وما اقدمك هذه البلدة قال قلت له ان كتمت على اخبرتك. قال فاني افعل. قال قلت له بلغنا انه قد خرج ها هنا رجل يزعم انه نبي، فارسلت اخي ليكلمه فرجع ولم يشفني من الخبر، فاردت ان القاه. فقال له اما انك قد رشدت، هذا وجهي اليه، فاتبعني، ادخل حيث ادخل، فاني ان رايت احدا اخافه عليك، قمت الى الحايط، كاني اصلح نعلي، وامض انت، فمضى ومضيت معه، حتى دخل ودخلت معه على النبي صلى الله عليه وسلم فقلت له اعرض على الاسلام. فعرضه فاسلمت مكاني، فقال لي " يا ابا ذر اكتم هذا الامر، وارجع الى بلدك، فاذا بلغك ظهورنا فاقبل ". فقلت والذي بعثك بالحق لاصرخن بها بين اظهرهم. فجاء الى المسجد، وقريش فيه فقال يا معشر قريش، اني اشهد ان لا اله الا الله، واشهد ان محمدا عبده ورسوله. فقالوا قوموا الى هذا الصابي. فقاموا فضربت لاموت فادركني العباس، فاكب على ثم اقبل عليهم، فقال ويلكم تقتلون رجلا من غفار، ومتجركم وممركم على غفار. فاقلعوا عني، فلما ان اصبحت الغد رجعت فقلت مثل ما قلت بالامس، فقالوا قوموا الى هذا الصابي. فصنع {بي} مثل ما صنع بالامس وادركني العباس فاكب على، وقال مثل مقالته بالامس. قال فكان هذا اول اسلام ابي ذر رحمه الله