ஹதீஸ்கள்
#3518
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பனுல் முஸ்த்தலிக்) அறப்போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்கள் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார்.34 ஆகவே, அந்த அன்சாரி கடுங்கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, “அன்சாரிகளே!” என்றழைத்தார். முஹாஜிர், “முஹாஜிர் களே!” என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?” என்று கேட்டு விட்டு, “அவ்விருவரின் விவகாரம் என்ன?” என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அறியாமைக் கால அழைப்பைக் கை விடுங்கள். இது அருவருப்பானது” என்று சொன்னார்கள். (நயவஞ்சகர்களின் தலைவரான) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “நமக்கெதிராக (இந்த அகதி களான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா? நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றிவிடுவார் கள்” என்று (விஷமமாகச்) சொன்னார். உடனே உமர் (ரலி) அவர்கள், “இந்தத் தீயவரை நாம் கொன்றுவிட வேண்டாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று அப்துல்லாஹ் பின் உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவரைக்) கொல்ல வேண்டாம். மக்கள், “முஹம்மத் தம் தோழர்களைக்கூட கொல் கிறார்' என்று பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا مخلد بن يزيد، اخبرنا ابن جريج، قال اخبرني عمرو بن دينار، انه سمع جابرا رضى الله عنه يقول غزونا مع النبي صلى الله عليه وسلم وقد ثاب معه ناس من المهاجرين حتى كثروا، وكان من المهاجرين رجل لعاب فكسع انصاريا، فغضب الانصاري غضبا شديدا، حتى تداعوا، وقال الانصاري يا للانصار. وقال المهاجري يا للمهاجرين. فخرج النبي صلى الله عليه وسلم فقال " ما بال دعوى اهل الجاهلية ". ثم قال " ما شانهم ". فاخبر بكسعة المهاجري الانصاري قال فقال النبي صلى الله عليه وسلم " دعوها فانها خبيثة ". وقال عبد الله بن ابى ابن سلول اقد تداعوا علينا، لين رجعنا الى المدينة ليخرجن الاعز منها الاذل. فقال عمر الا نقتل يا رسول الله هذا الخبيث لعبد الله. فقال النبي صلى الله عليه وسلم " لا يتحدث الناس انه كان يقتل اصحابه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3518
- Book Index
- 28
Grades
- -
