ஹதீஸ்கள்
#3521
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்பஹீரா' என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். “சாயிபா' என்பது அரபியர் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். ஆகவே, அதன்மீது சுமை எதுவும் ஏற்றப்படாது. மேலும், நபி (ஸல்) அவர்கள், “குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர், நரகத்தில் தமது குடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் முதன்முதலில் “சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்துகொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال سمعت سعيد بن المسيب، قال البحيرة التي يمنع درها للطواغيت ولا يحلبها احد من الناس، والسايبة التي كانوا يسيبونها لالهتهم فلا يحمل عليها شىء. قال وقال ابو هريرة قال النبي صلى الله عليه وسلم " رايت عمرو بن عامر بن لحى الخزاعي يجر قصبه في النار، وكان اول من سيب السوايب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3521
- Book Index
- 31
Grades
- -
