ஹதீஸ்கள்
#3541
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (இரக்கத் துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிராத்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார் கள். அவர்கள் உளூ செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களுடைய இரு தோள்களுக் கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். (நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், “குதிரையின் இரு கண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் ஹம்ஸா (ரஹ்) அவர்கள், “மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது” என்று கூறியுள்ளார்கள்.63 அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد الله، حدثنا حاتم، عن الجعيد بن عبد الرحمن، قال سمعت السايب بن يزيد، قال ذهبت بي خالتي الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان ابن اختي. وقع فمسح راسي ودعا لي بالبركة، وتوضا فشربت من وضويه، ثم قمت خلف ظهره فنظرت الى خاتم بين كتفيه. قال ابن عبيد الله الحجلة من حجل الفرس الذي بين عينيه. قال ابراهيم بن حمزة مثل زر الحجلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3541
- Book Index
- 50
Grades
- -
