ஹதீஸ்கள்
#3540
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ஜுஐத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர் களாக, (அந்த வயதிலும்) திடகாத்திர மானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக நான் கண்டேன். அவர்கள், “எனக்குக் கேள்விப் புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யால்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்று சொன்னார்கள்.61 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3540
- Book Index
- 49
Grades
- -