ஹதீஸ்கள்
#3547
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. மாநிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர் களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர் களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட லாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்துவந்தார்கள்.66 மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்துவந்தார்கள். அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒன்றை (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது. நான் (அது குறித்து, நபியவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, “(நபியவர்கள் பூசிக்கொண்ட) நறுமணப் பொருளின் காரணத்தால் அது சிவப்பாகிவிட்டது” என்று பதிலளிக்கப்பட்டது. அத்தியாயம் :
حدثني ابن بكير، قال حدثني الليث، عن خالد، عن سعيد بن ابي هلال، عن ربيعة بن ابي عبد الرحمن، قال سمعت انس بن مالك، يصف النبي صلى الله عليه وسلم قال كان ربعة من القوم، ليس بالطويل ولا بالقصير، ازهر اللون ليس بابيض امهق ولا ادم، ليس بجعد قطط ولا سبط رجل، انزل عليه وهو ابن اربعين، فلبث بمكة عشر سنين ينزل عليه وبالمدينة عشر سنين، وليس في راسه ولحيته عشرون شعرة بيضاء. قال ربيعة فرايت شعرا من شعره، فاذا هو احمر فسالت فقيل احمر من الطيب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3547
- Book Index
- 56
Grades
- -
