Loading...
Loading...
நூல்கள்
117 ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘உம்முடைய விருந்தின ருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும...
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துல்லாஹ், நீர் பகலெல் லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள...
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டிய...
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தொடர்ந்து நோன்பு நோற்பதாக வும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்கள...
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ‘‘இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன...
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு நீ...
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபுல்மலீஹ் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர்லிரஹ்) அவர்களு டன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்ப...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ‘ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்குமுன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழ...
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது உம்மு சுலைம் அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்...
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், அல்லது இம்ரான் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம், ‘‘இன்னாரே! இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு ந...
முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், ‘ஆம்' என்றார்கள். அதாவது வெள்...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்குமுன் ஒரு நாளைச் சேர்க்காமல், அல்லது அதற்குப்பின் ஒரு நாளைச் சேர்க்காமல் (அன்று மட்டும்) நோன்பு நோற்க வேண்டாம்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்....
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், வெள்ளிக்கிழமை அன்று என்னிடம் வந்தார்கள். அப்போது நான் நோன்பு நோற்றிருந்தேன். அப்போது அவர்கள், ‘‘நேற்று நோன்பு நோற்றா...
அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை (வணக்க வழிபாட்டிற்காக)த் தேர்ந்தெடுத்துக் கொள் வார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘இல்லை; அவர...
உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா?' என்பது குறித்து என்னருகே சிலர் விவாதித்தனர். சிலர் ‘அவர்கள் நோன்பு நோற்றிருக்க...
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பது தொடர்பாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத் தைக் கொடுத்தனுப்...
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெருநாளில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர...
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு தோள்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக்கொள்வதையும், ஓர் ஆட...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் அன்றும், ஹஜ்ஜு பெருநாள் அன்றும் நோன்பு நோற்பதும் பொருளைத் தொடல் (முலாமசா), பொருளை விட்டெறிதல் (முனாபதா) ஆகிய இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள் ளன.52 அத்தியா...
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்லி அந்த மனிதர் ‘‘(அவர்) திங்கட்கிழமை யன்று (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்...