Loading...

Loading...
நூல்கள்
௧௧௭ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமை யாக நோன்பு நோற்கமாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விடவே மாட்டார்கள்!” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! இனிமேல் நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد، عن ابن عباس رضى الله عنهما قال ما صام النبي صلى الله عليه وسلم شهرا كاملا قط غير رمضان، ويصوم حتى يقول القايل لا والله لا يفطر، ويفطر حتى يقول القايل لا والله لا يصوم
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டு விடுவார்கள்; அறவே இந்த மாதம் நோன்பை அவர்கள் அறவே விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள். அவர்களை இரவில் தொழும் நிலையில் நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்; அவர்களை (இரவில்) உறங்கக்கூடியவர்களாக நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய். நோன்பு தொடர்பாக இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبد العزيز بن عبد الله، قال حدثني محمد بن جعفر، عن حميد، انه سمع انسا رضى الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم يفطر من الشهر، حتى نظن ان لا يصوم منه، ويصوم حتى نظن ان لا يفطر منه شييا، وكان لا تشاء تراه من الليل مصليا الا رايته، ولا نايما الا رايته. وقال سليمان عن حميد انه سال انسا في الصوم
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக்கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்.40 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தொட்டதில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நறு மணத்தைவிட நல்ல கஸ்தூரியையோ அம்பரையோ நான் முகர்ந்ததுமில்லை. அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا ابو خالد الاحمر، اخبرنا حميد، قال سالت انسا رضى الله عنه عن صيام النبي صلى الله عليه وسلم فقال ما كنت احب ان اراه من الشهر صايما الا رايته ولا مفطرا الا رايته، ولا من الليل قايما الا رايته، ولا نايما الا رايته، ولا مسست خزة ولا حريرة الين من كف رسول الله صلى الله عليه وسلم، ولا شممت مسكة ولا عبيرة اطيب رايحة من رايحة رسول الله صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘உம்முடைய விருந்தின ருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது” என்றார்கள். ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வருடத்தில் பாதி நாட்கள்” என் றார்கள்.41 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا هارون بن اسماعيل، حدثنا علي، حدثنا يحيى، قال حدثني ابو سلمة، قال حدثني عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما قال دخل على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث يعني " ان لزورك عليك حقا، وان لزوجك عليك حقا ". فقلت وما صوم داود قال " نصف الدهر
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துல்லாஹ், நீர் பகலெல் லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இனி) அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமான தாகும். ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்.” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்” என்றார்கள். ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று நான் கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாட்கள்’ என்றார்கள். ‘‘அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்தபின் ‘நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்” என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.42 அத்தியாயம் :
حدثنا ابن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا الاوزاعي، قال حدثني يحيى بن ابي كثير، قال حدثني ابو سلمة بن عبد الرحمن، قال حدثني عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما قال لي رسول الله صلى الله عليه وسلم " يا عبد الله الم اخبر انك تصوم النهار وتقوم الليل ". فقلت بلى يا رسول الله. قال " فلا تفعل، صم وافطر، وقم ونم، فان لجسدك عليك حقا، وان لعينك عليك حقا، وان لزوجك عليك حقا، وان لزورك عليك حقا، وان بحسبك ان تصوم كل شهر ثلاثة ايام، فان لك بكل حسنة عشر امثالها، فان ذلك صيام الدهر كله ". فشددت، فشدد على، قلت يا رسول الله، اني اجد قوة. قال " فصم صيام نبي الله داود عليه السلام ولا تزد عليه ". قلت وما كان صيام نبي الله داود عليه السلام قال " نصف الدهر ". فكان عبد الله يقول بعد ما كبر يا ليتني قبلت رخصة النبي صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘‘என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், ‘‘இது உம்மால் முடியாது. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்” என்றார்கள். நான், ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இதுதான் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்” என்றார்கள். நான் ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سعيد بن المسيب، وابو سلمة بن عبد الرحمن ان عبد الله بن عمرو، قال اخبر رسول الله صلى الله عليه وسلم اني اقول والله لاصومن النهار، ولاقومن الليل، ما عشت. فقلت له قد قلته بابي انت وامي. قال " فانك لا تستطيع ذلك، فصم وافطر، وقم ونم، وصم من الشهر ثلاثة ايام، فان الحسنة بعشر امثالها، وذلك مثل صيام الدهر ". قلت اني اطيق افضل من ذلك. قال " فصم يوما وافطر يومين ". قلت اني اطيق افضل من ذلك. قال " فصم يوما وافطر يوما، فذلك صيام داود عليه السلام وهو افضل الصيام ". فقلت اني اطيق افضل من ذلك. فقال النبي صلى الله عليه وسلم " لا افضل من ذلك
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தொடர்ந்து நோன்பு நோற்பதாக வும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் உறங்காமல் தொழுவதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளதே! எனவே, (சில நாள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்கு (நீர்) அளிக்கவேண்டிய பங்கு உண்டு; உம(து உடலு)க்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டிய பங்கும் உண்டு” என்று கூறினார்கள். நான் ‘‘இதற்கு எனக்குச் சக்தி உள்ளது” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட்டேன். ‘‘தாவூத் (அலை) அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; ஒருநாள் விட்டுவிடுவார்கள்; மேலும், (போர் முனையில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்?” என்றேன். ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன்; என்றாலும் ‘காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்’ என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது)” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، اخبرنا ابو عاصم، عن ابن جريج، سمعت عطاء، ان ابا العباس الشاعر، اخبره انه، سمع عبد الله بن عمرو رضى الله عنهما بلغ النبي صلى الله عليه وسلم اني اسرد الصوم واصلي الليل، فاما ارسل الى، واما لقيته، فقال " الم اخبر انك تصوم ولا تفطر، وتصلي ولا تنام، فصم وافطر، وقم ونم، فان لعينك عليك حظا، وان لنفسك واهلك عليك حظا ". قال اني لاقوى لذلك. قال " فصم صيام داود عليه السلام ". قال وكيف قال " كان يصوم يوما ويفطر يوما، ولا يفر اذا لاقى ". قال من لي بهذه يا نبي الله قال عطاء لا ادري كيف ذكر صيام الابد، قال النبي صلى الله عليه وسلم " لا صام من صام الابد ". مرتين
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ‘‘இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். முடிவில், ‘‘ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!” என்று கூறினார்கள். மேலும், ‘‘ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். ‘‘இதைவிட அதிகமாக (ஓத) எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். (நான் கேட்கக் கேட்க குறைத்துக்கொண்டே வந்து) முடிவில், ‘‘மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن مغيرة، قال سمعت مجاهدا، عن عبد الله بن عمرو رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " صم من الشهر ثلاثة ايام ". قال اطيق اكثر من ذلك. فما زال حتى قال " صم يوما وافطر يوما " فقال " اقرا القران في شهر ". قال اني اطيق اكثر. فما زال حتى قال في ثلاث
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும்; உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராகமாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றார்கள். அதற்கு ‘‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا حبيب بن ابي ثابت، قال سمعت ابا العباس المكي وكان شاعرا وكان لا يتهم في حديثه قال سمعت عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما قال قال لي النبي صلى الله عليه وسلم " انك لتصوم الدهر، وتقوم الليل ". فقلت نعم. قال " انك اذا فعلت ذلك هجمت له العين ونفهت له النفس، لا صام من صام الدهر، صوم ثلاثة ايام صوم الدهر كله ". قلت فاني اطيق اكثر من ذلك. قال " فصم صوم داود عليه السلام كان يصوم يوما ويفطر يوما، ولا يفر اذا لاقى
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபுல்மலீஹ் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர்லிரஹ்) அவர்களு டன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) அறி வித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப் பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்து வைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. அப்போது, ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக என்னால் நோன்பு நோற்க இயலும்)” என்றேன்; அவர்கள் ‘‘(மாதத்தில்) ஐந்து நாட்கள்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே...!” என்றேன்; ‘‘ஒன்பது நாட்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ‘‘பதினொன்று நாட்கள்” என்றார்கள். பிறகு, ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்குமேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق الواسطي، حدثنا خالد، عن خالد، عن ابي قلابة، قال اخبرني ابو المليح، قال دخلت مع ابيك على عبد الله بن عمرو فحدثنا ان رسول الله صلى الله عليه وسلم ذكر له صومي فدخل على، فالقيت له وسادة من ادم، حشوها ليف، فجلس على الارض، وصارت الوسادة بيني وبينه. فقال " اما يكفيك من كل شهر ثلاثة ايام ". قال قلت يا رسول الله. قال " خمسا ". قلت يا رسول الله. قال " سبعا ". قلت يا رسول الله. قال " تسعا ". قلت يا رسول الله. قال " احدى عشرة ". ثم قال النبي صلى الله عليه وسلم " لا صوم فوق صوم داود عليه السلام شطر الدهر، صم يوما، وافطر يوما
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ‘ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்குமுன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.44 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا ابو التياح، قال حدثني ابو عثمان، عن ابي هريرة رضى الله عنه قال اوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة ايام من كل شهر، وركعتى الضحى، وان اوتر قبل ان انام
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது உம்மு சுலைம் அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழத்தை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்றார்கள்.45 பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத (கூடுதல்) தொழுகையைத் தொழுதார்கள், உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவருடைய குடும்பத் தாருக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உரியதொன்று உள்ளது” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது என்ன?” என்று கேட்டார்கள். ‘‘உங்கள் ஊழியர் அனஸ்தான்” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை, மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித் தார்கள். ‘‘இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு வளம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்சாரிகளிலேயே அதிக செல்வம் உள்ளவனாக இருக்கிறேன். என் (மூத்த) மகள் உமைனா என்னிடம் தெரிவித்தார்: எனக்குப் பிறந்த நூற்று இருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர். அது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (இராக்கிலுள்ள) பஸ்ராவுக்கு வந்த காலமாகும்.46 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثني خالد هو ابن الحارث حدثنا حميد، عن انس رضى الله عنه دخل النبي صلى الله عليه وسلم على ام سليم، فاتته بتمر وسمن، قال " اعيدوا سمنكم في سقايه، وتمركم في وعايه، فاني صايم ". ثم قام الى ناحية من البيت، فصلى غير المكتوبة، فدعا لام سليم، واهل بيتها، فقالت ام سليم يا رسول الله، ان لي خويصة، قال " ما هي ". قالت خادمك انس. فما ترك خير اخرة ولا دنيا الا دعا لي به قال " اللهم ارزقه مالا وولدا وبارك له ". فاني لمن اكثر الانصار مالا. وحدثتني ابنتي امينة انه دفن لصلبي مقدم حجاج البصرة بضع وعشرون وماية. حدثنا ابن ابي مريم، اخبرنا يحيى، قال حدثني حميد، سمع انسا رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், அல்லது இம்ரான் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம், ‘‘இன்னாரே! இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் (ரமளான்) நோன்பை முடித்தவுடன் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நுஅமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தைக் கருத்தில் கொண்டே, ‘இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸல்த் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ரமளானைப் பற்றிய இக்குறிப்பு இடம்பெறவில்லை. ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஷஅபான் மாதத்தின் இறுதியில்' என்று காணப்படுகிறது.47 அத்தியாயம் :
حدثنا الصلت بن محمد، حدثنا مهدي، عن غيلان،. وحدثنا ابو النعمان، حدثنا مهدي بن ميمون، حدثنا غيلان بن جرير، عن مطرف، عن عمران بن حصين رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم. انه ساله او سال رجلا وعمران يسمع فقال " يا ابا فلان اما صمت سرر هذا الشهر ". قال اظنه قال يعني رمضان. قال الرجل لا يا رسول الله. قال " فاذا افطرت فصم يومين ". لم يقل الصلت اظنه يعني رمضان. قال ابو عبد الله وقال ثابث عن مطرف عن عمران عن النبي صلى الله عليه وسلم " من سرر شعبان
முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், ‘ஆம்' என்றார்கள். அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் தனியாக நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்லிஎன்று அறிவிப்பாளர் அபூஆஸிம் (ரஹ்) அல்லாத மற்றவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளனர். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، عن عبد الحميد بن جبير، عن محمد بن عباد، قال سالت جابرا رضى الله عنه نهى النبي صلى الله عليه وسلم عن صوم يوم الجمعة قال نعم. زاد غير ابي عاصم ان ينفرد بصوم
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்குமுன் ஒரு நாளைச் சேர்க்காமல், அல்லது அதற்குப்பின் ஒரு நாளைச் சேர்க்காமல் (அன்று மட்டும்) நோன்பு நோற்க வேண்டாம்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا ابو صالح، عن ابي هريرة رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا يصومن احدكم يوم الجمعة، الا يوما قبله او بعده
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், வெள்ளிக்கிழமை அன்று என்னிடம் வந்தார்கள். அப்போது நான் நோன்பு நோற்றிருந்தேன். அப்போது அவர்கள், ‘‘நேற்று நோன்பு நோற்றாயா?” என்று கேட்டார்கள். நான் ‘‘இல்லை” என்றேன். ‘‘நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கும் ‘‘இல்லை” என்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால் நோன்பை முறித்துவிடு!” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாத் பின் அல்ஜஅத் என்பாரின் அறிவிப்பில், ‘‘நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை விட்டு விட்டேன்” என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، ح. وحدثني محمد، حدثنا غندر، حدثنا شعبة، عن قتادة، عن ابي ايوب، عن جويرية بنت الحارث رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم دخل عليها يوم الجمعة وهى صايمة فقال " اصمت امس ". قالت لا. قال " تريدين ان تصومي غدا ". قالت لا. قال " فافطري ". وقال حماد بن الجعد سمع قتادة حدثني ابو ايوب ان جويرية حدثته فامرها فافطرت
அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை (வணக்க வழிபாட்டிற்காக)த் தேர்ந்தெடுத்துக் கொள் வார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘இல்லை; அவர்களின் வழிபாடு (அமல்) நிரந்தரமானதாக இருக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யாரால்தான் செய்ய முடியும்?” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن سفيان، عن منصور، عن ابراهيم، عن علقمة، قلت لعايشة رضى الله عنها هل كان رسول الله صلى الله عليه وسلم يختص من الايام شييا قالت لا، كان عمله ديمة، وايكم يطيق ما كان رسول الله صلى الله عليه وسلم يطيق
உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா?' என்பது குறித்து என்னருகே சிலர் விவாதித்தனர். சிலர் ‘அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள்' என்று கூறினர். வேறுசிலர் ‘நோன்பு நோற்றிருக்கவில்லை' என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் அருந்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن مالك، قال حدثني سالم، قال حدثني عمير، مولى ام الفضل ان ام، الفضل حدثته ح وحدثنا عبد الله بن يوسف اخبرنا مالك عن ابي النضر مولى عمر بن عبيد الله عن عمير مولى عبد الله بن العباس عن ام الفضل بنت الحارث ان ناسا تماروا عندها يوم عرفة في صوم النبي صلى الله عليه وسلم فقال بعضهم هو صايم. وقال بعضهم ليس بصايم. فارسلت اليه بقدح لبن وهو واقف على بعيره فشربه
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பது தொடர்பாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத் தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல் லாரும் பார்த்துக்கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثنا ابن وهب او قري عليه قال اخبرني عمرو، عن بكير، عن كريب، عن ميمونة رضى الله عنها ان الناس، شكوا في صيام النبي صلى الله عليه وسلم يوم عرفة، فارسلت اليه بحلاب وهو واقف في الموقف، فشرب منه، والناس ينظرون
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெருநாளில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண் ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும். அபூஅப்தில்லாஹ் புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளரான அபூஉபைத் (ரஹ்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும் (இரு விதமாகச்) சொல்வர். இரண்டும் சரிதான்லிஎன்று இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அபூஉபைத் அவர்களின் வாரிசுரிமை இவ்விருவருக்கும் இருந்ததே இதற்குக் காரணம்.) அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن ابي عبيد، مولى ابن ازهر قال شهدت العيد مع عمر بن الخطاب رضى الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم، واليوم الاخر تاكلون فيه من نسككم. قال ابو عبد الله قال ابن عيينة من قال مولى ابن ازهر فقد اصاب ومن قال مولى عبد الرحمن بن عوف فقد اصاب