ஹதீஸ்கள்
#1978
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ‘‘இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். முடிவில், ‘‘ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!” என்று கூறினார்கள். மேலும், ‘‘ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். ‘‘இதைவிட அதிகமாக (ஓத) எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். (நான் கேட்கக் கேட்க குறைத்துக்கொண்டே வந்து) முடிவில், ‘‘மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن مغيرة، قال سمعت مجاهدا، عن عبد الله بن عمرو رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " صم من الشهر ثلاثة ايام ". قال اطيق اكثر من ذلك. فما زال حتى قال " صم يوما وافطر يوما " فقال " اقرا القران في شهر ". قال اني اطيق اكثر. فما زال حتى قال في ثلاث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1978
- Book Index
- 85
Grades
- -
