ஹதீஸ்கள்
#1990
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெருநாளில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண் ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும். அபூஅப்தில்லாஹ் புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளரான அபூஉபைத் (ரஹ்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும் (இரு விதமாகச்) சொல்வர். இரண்டும் சரிதான்லிஎன்று இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அபூஉபைத் அவர்களின் வாரிசுரிமை இவ்விருவருக்கும் இருந்ததே இதற்குக் காரணம்.) அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن ابي عبيد، مولى ابن ازهر قال شهدت العيد مع عمر بن الخطاب رضى الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم، واليوم الاخر تاكلون فيه من نسككم. قال ابو عبد الله قال ابن عيينة من قال مولى ابن ازهر فقد اصاب ومن قال مولى عبد الرحمن بن عوف فقد اصاب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1990
- Book Index
- 97
Grades
- -
