ஹதீஸ்கள்
#1973
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக்கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்.40 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தொட்டதில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நறு மணத்தைவிட நல்ல கஸ்தூரியையோ அம்பரையோ நான் முகர்ந்ததுமில்லை. அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا ابو خالد الاحمر، اخبرنا حميد، قال سالت انسا رضى الله عنه عن صيام النبي صلى الله عليه وسلم فقال ما كنت احب ان اراه من الشهر صايما الا رايته ولا مفطرا الا رايته، ولا من الليل قايما الا رايته، ولا نايما الا رايته، ولا مسست خزة ولا حريرة الين من كف رسول الله صلى الله عليه وسلم، ولا شممت مسكة ولا عبيرة اطيب رايحة من رايحة رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1973
- Book Index
- 80
Grades
- -
