ஹதீஸ்கள்
#1983
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், அல்லது இம்ரான் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம், ‘‘இன்னாரே! இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் (ரமளான்) நோன்பை முடித்தவுடன் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நுஅமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தைக் கருத்தில் கொண்டே, ‘இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸல்த் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ரமளானைப் பற்றிய இக்குறிப்பு இடம்பெறவில்லை. ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஷஅபான் மாதத்தின் இறுதியில்' என்று காணப்படுகிறது.47 அத்தியாயம் :
حدثنا الصلت بن محمد، حدثنا مهدي، عن غيلان،. وحدثنا ابو النعمان، حدثنا مهدي بن ميمون، حدثنا غيلان بن جرير، عن مطرف، عن عمران بن حصين رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم. انه ساله او سال رجلا وعمران يسمع فقال " يا ابا فلان اما صمت سرر هذا الشهر ". قال اظنه قال يعني رمضان. قال الرجل لا يا رسول الله. قال " فاذا افطرت فصم يومين ". لم يقل الصلت اظنه يعني رمضان. قال ابو عبد الله وقال ثابث عن مطرف عن عمران عن النبي صلى الله عليه وسلم " من سرر شعبان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1983
- Book Index
- 90
Grades
- -
