Loading...

Loading...
நூல்கள்
௨௬௦ ஹதீஸ்கள்
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் நோய்வாய்பட்டுள்ளேன்” என முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ வாகனத்தில் அமர்ந்து மக்களுக்குப் பின்னால் (இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا مالك، عن محمد بن عبد الرحمن بن نوفل، عن عروة، عن زينب ابنة ام سلمة، عن ام سلمة رضى الله عنها قالت شكوت الى رسول الله صلى الله عليه وسلم اني اشتكي. فقال " طوفي من وراء الناس وانت راكبة ". فطفت ورسول الله صلى الله عليه وسلم يصلي الى جنب البيت، وهو يقرا بالطور وكتاب مسطور
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக ‘மினா’வுடைய (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا ابو ضمرة، حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال استاذن العباس بن عبد المطلب رضى الله عنه رسول الله صلى الله عليه وسلم ان يبيت بمكة ليالي منى من اجل سقايته، فاذن له
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (தம் புதல்வர்) ஃபள்ல் (ரலி) அவர்களிடம் “ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவரிடமுள்ள குடிதண்ணீரை கொண்டுவந்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடு” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்” எனக் கேட்க, அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் கரங்களை இதனுள் போடுகின்றார்கள்” என்று கூறினார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை!) இந்தத் தண்ணீரையே கொடுங்கள்” என்று கூறினார்கள். இறுதியாக அதிலிருந்தே தண்ணீர் அருந்தினார்கள். பிறகு ஸம்ஸம் கிணற்றிற்கு வந்தார்கள். அங்கு சிலர், தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், “செய்யுங்கள்! நீங்கள் நல்ல சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள்“ எனக் கூறிவிட்டு, “மக்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள் என்றில்லாவிட்டால், (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நானும் இதில் கயிற்றை வை(த்து தண்ணீர் சும)ப்பேன்” என்று கூறி, தமது தோளைச் சுட்டிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا خالد، عن خالد الحذاء، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم جاء الى السقاية، فاستسقى، فقال العباس يا فضل اذهب الى امك، فات رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها. فقال " اسقني ". قال يا رسول الله انهم يجعلون ايديهم فيه. قال " اسقني ". فشرب منه، ثم اتى زمزم، وهم يسقون ويعملون فيها، فقال " اعملوا، فانكم على عمل صالح ثم قال لولا ان تغلبوا لنزلت حتى اضع الحبل على هذه ". يعني عاتقه واشار الى عاتقه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி எனது நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு இறைநம்பிக்கையும் ஞானமும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டு வந்து, அதிலுள்ளதை என் நெஞ்சில் நிரப்பி, நெஞ்சை மூடினார். பிறகு என் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு ஏற்றிச் சென்றார். முதல் வானத்தின் காவலரிடம் ‘திறப்பீராக!’ என்றார். “யார் அது?” என அக்காவலர் கேட்க, ‘ஜிப்ரீல்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وقال عبدان اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، قال انس بن مالك كان ابو ذر رضى الله عنه يحدث ان رسول الله صلى الله عليه وسلم قال " فرج سقفي وانا بمكة، فنزل جبريل عليه السلام ففرج صدري، ثم غسله بماء زمزم، ثم جاء بطست من ذهب ممتلي حكمة وايمانا، فافرغها في صدري، ثم اطبقه، ثم اخذ بيدي فعرج الى السماء الدنيا. قال جبريل لخازن السماء الدنيا افتح. قال من هذا قال جبريل
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் அருந்தக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா (ரஹ்) அவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள் என ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். அத்தியாயம் :
حدثنا محمد هو ابن سلام اخبرنا الفزاري، عن عاصم، عن الشعبي، ان ابن عباس رضى الله عنهما حدثه قال سقيت رسول الله صلى الله عليه وسلم من زمزم فشرب وهو قايم. قال عاصم فحلف عكرمة ما كان يوميذ الا على بعير
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிப் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! பிறகு இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்!” எனக் கூறினார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் எங்கள் ஹஜ்ஜை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு அனுப்பிவைத்தார்கள். நான் (அங்கு போய்) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது (விடுபட்ட) உன் உம்ராவுக்குப் பகரமாகும்” எனக் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் தவாஃப் செய்து விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பிறகு (ஹஜ்ஜுக்காக மற்றொரு இஹ்ராம் கட்டி) மினாவிலிருந்து திரும்பிய பிறகு (ஹஜ்ஜிற்காக) மற்றொரு தவாஃப் செய்தார் கள். ஆனால், ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்தவர்கள் ஒரே தவாஃப் தான் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع، فاهللنا بعمرة، ثم قال " من كان معه هدى فليهل بالحج والعمرة ثم لا يحل حتى يحل منهما ". فقدمت مكة، وانا حايض، فلما قضينا حجنا ارسلني مع عبد الرحمن الى التنعيم، فاعتمرت، فقال صلى الله عليه وسلم " هذه مكان عمرتك ". فطاف الذين اهلوا بالعمرة، ثم حلوا، ثم طافوا طوافا اخر، بعد ان رجعوا من منى، واما الذين جمعوا بين الحج والعمرة طافوا طوافا واحدا
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் செல்ல) வாகனம் வீட்டில் தயாராக இருந்தது. அப்போது அப்துல்லாஹ், “நிச்சயமாக, இவ்வாண்டு மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்; எனவே, உங்களை மக்கள் கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பார்கள். அதனால் நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கேயே தங்கிவிட்டால் (நல்லது”) எனக் கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவுக்காகப்) புறப்பட்டபோது, கஅபாவுக்குச் செல்ல விடாமல் அவர்களை குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்தனர். எனவே, நான் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டாலும் நபி (ஸல்) அவர்கள் (அன்று) செய்ததைப் போன்றே நானும் செய்வேன். ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.’ நான் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டுகிறேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள். பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தவாஃப் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابن علية، عن ايوب، عن نافع، ان ابن عمر رضى الله عنهما دخل ابنه عبد الله بن عبد الله، وظهره في الدار، فقال اني لا امن ان يكون العام بين الناس قتال، فيصدوك عن البيت، فلو اقمت. فقال قد خرج رسول الله صلى الله عليه وسلم فحال كفار قريش بينه وبين البيت، فان حيل بيني وبينه افعل كما فعل رسول الله صلى الله عليه وسلم {لقد كان لكم في رسول الله اسوة حسنة} ثم قال اشهدكم اني قد اوجبت مع عمرتي حجا. قال ثم قدم فطاف لهما طوافا واحدا
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில், இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.40 அப்போது அவர்களிடம், “மக்களி டையே போர் மூண்டுள்ளது; எனவே, ஹஜ் செய்ய விடாமல் உங்களை அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகின் றோம்” எனக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது எனவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்” எனக் கூறினார்கள். பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டு ‘பைதா’ எனுமிடத்தின் பிரதான பகுதிக்கு வந்ததும், “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றேதான்; (எனவே) நான் எனது உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டி யுள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், ‘குதைத்’ எனுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டுசென்றார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. குர்பானி கொடுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை அவர்கள் பலியிடவில்லை; இஹ்ராம் கட்டியிருக்கும்போது விலக்கப் பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை; தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (குர்பானிப் பிராணியை) பலியிட்டுவிட்டுத் தலை முடியை மழித்தார்கள். முதலில் தாம் நிறைவேற்றிய தவாஃபே, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்றும் அவர்கள் கருதினார்கள். மேலும், “இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن نافع، ان ابن عمر رضى الله عنهما اراد الحج عام نزل الحجاج بابن الزبير. فقيل له ان الناس كاين بينهم قتال، وانا نخاف ان يصدوك. فقال {لقد كان لكم في رسول الله اسوة حسنة} اذا اصنع كما صنع رسول الله صلى الله عليه وسلم، اني اشهدكم اني قد اوجبت عمرة. ثم خرج حتى اذا كان بظاهر البيداء قال ما شان الحج والعمرة الا واحد، اشهدكم اني قد اوجبت حجا مع عمرتي. واهدى هديا اشتراه بقديد ولم يزد على ذلك، فلم ينحر، ولم يحل من شىء حرم منه، ولم يحلق ولم يقصر حتى كان يوم النحر، فنحر وحلق، وراى ان قد قضى طواف الحج، والعمرة بطوافه الاول. وقال ابن عمر رضى الله عنهما كذلك فعل رسول الله صلى الله عليه وسلم
முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (தவாஃபுல் குதூம் செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபடுவது குறித்துக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அது பற்றி என்னிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பிறகு கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள்; பிறகு உம்ராவுக்காக(த் தனியாகத் தவாஃப்) செய்யவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அன்னாரும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் தான் செய்தார்கள். பிறகு உம்ராவுக்கென்று (தவாஃப் ஏதும்) செய்யவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவ்வாறேதான் செய்தார்கள். (அடுத்து உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்களும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்ததை நான் பார்த்தேன். அவர்கள் உம்ராவுக்காக (தவாஃப் ஏதும்) செய்ய வில்லை. பிறகு முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகி யோரும் ஹஜ் செய்துள்ளனர். என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவர்களும் முதன்முதலாக கஅபாவை தவாஃப் செய்தார்கள். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தனியாக தவாஃப் ஏதும்) செய்யவில்லை. முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ் வாறே செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃப்) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு செய்த தைப் பார்த்தேன். அவர்கள் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களிடம் அவர்கள் கேட்கமாட்டார்களா? ஆக, முன்சென்றவர்களில் யாரும் (மக்காவில்) பாதம் பதித்ததும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்யாமல் இருந்ததில்லை. பிறகு (அந்த தவாஃபோடு) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. என் தாயாரும் (அஸ்மா) என் சிறிய தாயாரும் (ஆயிஷா) மக்கா வந்ததும் தவாஃப் செய்வதற்குமுன் வேறு எதையும் செய்வதில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை. அத்தியாயம் :
حدثنا احمد بن عيسى، حدثنا ابن وهب، قال اخبرني عمرو بن الحارث، عن محمد بن عبد الرحمن بن نوفل القرشي، انه سال عروة بن الزبير فقال قد حج النبي صلى الله عليه وسلم فاخبرتني عايشة رضى الله عنها انه اول شىء بدا به حين قدم انه توضا ثم طاف بالبيت ثم لم تكن عمرة، ثم حج ابو بكر رضى الله عنه فكان اول شىء بدا به الطواف بالبيت ثم لم تكن عمرة. ثم عمر رضى الله عنه مثل ذلك. ثم حج عثمان رضى الله عنه فرايته اول شىء بدا به الطواف بالبيت ثم لم تكن عمرة، ثم معاوية وعبد الله بن عمر، ثم حججت مع ابي الزبير بن العوام، فكان اول شىء بدا به الطواف بالبيت، ثم لم تكن عمرة، ثم رايت المهاجرين والانصار يفعلون ذلك، ثم لم تكن عمرة، ثم اخر من رايت فعل ذلك ابن عمر ثم لم ينقضها عمرة، وهذا ابن عمر عندهم فلا يسالونه، ولا احد ممن مضى، ما كانوا يبدءون بشىء حتى يضعوا اقدامهم من الطواف بالبيت، ثم لا يحلون، وقد رايت امي وخالتي، حين تقدمان لا تبتديان بشىء اول من البيت، تطوفان به، ثم لا تحلان. وقد اخبرتني امي، انها اهلت هي واختها والزبير وفلان وفلان بعمرة، فلما مسحوا الركن حلوا
முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (தவாஃபுல் குதூம் செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபடுவது குறித்துக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அது பற்றி என்னிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பிறகு கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள்; பிறகு உம்ராவுக்காக(த் தனியாகத் தவாஃப்) செய்யவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அன்னாரும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் தான் செய்தார்கள். பிறகு உம்ராவுக்கென்று (தவாஃப் ஏதும்) செய்யவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவ்வாறேதான் செய்தார்கள். (அடுத்து உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்களும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்ததை நான் பார்த்தேன். அவர்கள் உம்ராவுக்காக (தவாஃப் ஏதும்) செய்ய வில்லை. பிறகு முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகி யோரும் ஹஜ் செய்துள்ளனர். என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவர்களும் முதன்முதலாக கஅபாவை தவாஃப் செய்தார்கள். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தனியாக தவாஃப் ஏதும்) செய்யவில்லை. முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ் வாறே செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃப்) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு செய்த தைப் பார்த்தேன். அவர்கள் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களிடம் அவர்கள் கேட்கமாட்டார்களா? ஆக, முன்சென்றவர்களில் யாரும் (மக்காவில்) பாதம் பதித்ததும் முதல் வேலையாக கஅபாவை தவாஃப் செய்யாமல் இருந்ததில்லை. பிறகு (அந்த தவாஃபோடு) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. என் தாயாரும் (அஸ்மா) என் சிறிய தாயாரும் (ஆயிஷா) மக்கா வந்ததும் தவாஃப் செய்வதற்குமுன் வேறு எதையும் செய்வதில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை. அத்தியாயம் :
حدثنا احمد بن عيسى، حدثنا ابن وهب، قال اخبرني عمرو بن الحارث، عن محمد بن عبد الرحمن بن نوفل القرشي، انه سال عروة بن الزبير فقال قد حج النبي صلى الله عليه وسلم فاخبرتني عايشة رضى الله عنها انه اول شىء بدا به حين قدم انه توضا ثم طاف بالبيت ثم لم تكن عمرة، ثم حج ابو بكر رضى الله عنه فكان اول شىء بدا به الطواف بالبيت ثم لم تكن عمرة. ثم عمر رضى الله عنه مثل ذلك. ثم حج عثمان رضى الله عنه فرايته اول شىء بدا به الطواف بالبيت ثم لم تكن عمرة، ثم معاوية وعبد الله بن عمر، ثم حججت مع ابي الزبير بن العوام، فكان اول شىء بدا به الطواف بالبيت، ثم لم تكن عمرة، ثم رايت المهاجرين والانصار يفعلون ذلك، ثم لم تكن عمرة، ثم اخر من رايت فعل ذلك ابن عمر ثم لم ينقضها عمرة، وهذا ابن عمر عندهم فلا يسالونه، ولا احد ممن مضى، ما كانوا يبدءون بشىء حتى يضعوا اقدامهم من الطواف بالبيت، ثم لا يحلون، وقد رايت امي وخالتي، حين تقدمان لا تبتديان بشىء اول من البيت، تطوفان به، ثم لا تحلان. وقد اخبرتني امي، انها اهلت هي واختها والزبير وفلان وفلان بعمرة، فلما مسحوا الركن حلوا
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக ‘ஸஃபா’வும் ‘மர்வா’வும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்ற மன்று” (2:158) எனும் இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருவர் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரா விட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமன்று என்றிருந்தால்தான் நீர் கூறும் கருத்து வரும். (‘சுற்றிவருவது குற்றமன்று’ என்றே இவ்வசனம் கூறுகின்றது.) ஆனால், இவ்வசனம் அன்சாரிகள் தொடர்பாக அருளப்பெற்றதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் தாம் வழிபட்டுவந்த ‘முஷல்லல்’ எனும் குன்றில் உள்ள ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, இப்போது (இஸ் லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா-மர்வா வைச் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றி, ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா - மர்வாவைச் சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகின்றோம்’ எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், “நிச்சயமாக, ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை ஆகும்” (2:158) எனும் வசனத்தை அருளினான். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்கு மிடையே சுற்றி வருவதை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள். எனவே, அவ்விரண்டிற்குமிடையே சுற்றி வருவதைக் கைவிடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை” எனக் கூறினார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: பிறகு நான் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் இது பற்றித் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் கேள்விப்படாத விளக்கமாகும் இது. மக்களில் ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஸஃபா-மர்வாவுக் கிடையே ஓடிக்கொண்டிருந்தார்கள். குர்ஆனில் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வர வேண்டும் என்று கூறிய அல்லாஹ், ஸஃபா-மர்வா பற்றிக் குறிப்பிடாததால் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா- மர்வாவுக்கிடையே சுற்றிக்கொண்டிருந் தோம். அல்லாஹ்வோ ஸஃபாவைப் பற்றிக் கூறாமல் கஅபாவை தவாஃப் செய்வது பற்றிக் கூறுகிறானே? ஸஃபா-மர்வாவுக் கிடையே நாங்கள் ஓடுவது எங்கள் மீது குற்றமாகுமா” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும்” (2:158) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று பல அறிஞர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். நான், இந்த வசனம் இரண்டு சாரார் தொடர்பாகவும் அருளப்பெற்றது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாரார், அறியாமைக் காலத்தில் ஸஃபா-மர்வாவைச் சுற்றிவந்ததைப் பாவமாகக் கருதியவர்கள். மற்றொரு சாரார், ஏற்கெனவே அவ்வாறு சுற்றி வந்துகொண்டிருந்துவிட்டு, இஸ்லாத்தில் நுழைந்த பின்பும் ஸஃபா-மர்வா இடையே சுற்றுவதைப் பாவமாகக் கருதியவர்கள். அல்லாஹ் கஅபாவை தவாஃப் செய்வது பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, ஸஃபாவைக் குறிப்பிடாமல் இருந்ததே இதற்குக் காரணம். இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வது பற்றி (22:29ஆவது வசனத்தில்) கூறிய பிறகே, (இடைவெளி விட்டு) ஸஃபா-மர்வா பற்றி (2:158ஆவது வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டான். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது (பத்னுல் மசீல்) ஓடைப் பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.43 உபைதில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தவாஃபின்போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் (சாதாரணமாக) நடந்துதானே செல்வார்கள்?” என நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “ருக்னுல் யமானியில் கூட்டநெரிசல் ஏற்பட்டால் தவிர (சாதாரண மாக) அவர்கள் நடந்து செல்லமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் ருக்னுல் யமானி யைத் தொட்டு முத்தமிடாமல் விடுவ தில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد بن ميمون، حدثنا عيسى بن يونس، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم اذا طاف الطواف الاول خب ثلاثا ومشى اربعا، وكان يسعى بطن المسيل اذا طاف بين الصفا والمروة. فقلت لنافع اكان عبد الله يمشي اذا بلغ الركن اليماني قال لا. الا ان يزاحم على الركن فانه كان لا يدعه حتى يستلمه
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)” எனக் கேட்டோம். அதற்கு “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை சுற்றிவந்தார்கள்: பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரு ரக்அத்கள் தொழுதார்கள்: பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு முறை சயீ செய்தார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو بن دينار، قال سالنا ابن عمر رضى الله عنه عن رجل، طاف بالبيت في عمرة، ولم يطف بين الصفا والمروة اياتي امراته فقال قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا، وصلى خلف المقام ركعتين، فطاف بين الصفا والمروة سبعا {لقد كان لكم في رسول الله اسوة حسنة}. وسالنا جابر بن عبد الله رضى الله عنهما فقال لا يقربنها حتى يطوف بين الصفا والمروة
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)” எனக் கேட்டோம். அதற்கு “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை சுற்றிவந்தார்கள்: பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரு ரக்அத்கள் தொழுதார்கள்: பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு முறை சயீ செய்தார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو بن دينار، قال سالنا ابن عمر رضى الله عنه عن رجل، طاف بالبيت في عمرة، ولم يطف بين الصفا والمروة اياتي امراته فقال قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا، وصلى خلف المقام ركعتين، فطاف بين الصفا والمروة سبعا {لقد كان لكم في رسول الله اسوة حسنة}. وسالنا جابر بن عبد الله رضى الله عنهما فقال لا يقربنها حتى يطوف بين الصفا والمروة
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்தபின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா-மர்வாவுக் கிடையே ஓடினார்கள்” என்று கூறி னார்கள். இதை அறிவித்த பிறகு, “நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்ற இறைவசனத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، عن ابن جريج، قال اخبرني عمرو بن دينار، قال سمعت ابن عمر رضى الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم مكة، فطاف بالبيت، ثم صلى ركعتين، ثم سعى بين الصفا والمروة، ثم تلا {لقد كان لكم في رسول الله اسوة حسنة}
ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடுவதை (அன்சாரிகளான) நீங்கள் வெறுக்கக்கூடியவர்களாக இருந்தீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! ஏனெனில், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்ற மன்று” (2:158) எனும் இறைவசனம் அருளப்பெறும்வரை அவ்விரண்டும் (எங்கள் பழைய நம்பிக்கைப்படி) அறியாமைக் காலச் சின்னங்களாகவே இருந்தன” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا عاصم، قال قلت لانس بن مالك رضى الله عنه اكنتم تكرهون السعى بين الصفا والمروة قال نعم. لانها كانت من شعاير الجاهلية، حتى انزل الله {ان الصفا والمروة من شعاير الله فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما}
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வரும்போது தொங்கோட்டம் ஓடியது, இணைவைப்பாளர் களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو بن دينار، عن عطاء، عن ابن عباس رضى الله عنهما قال انما سعى رسول الله صلى الله عليه وسلم بالبيت وبين الصفا والمروة ليري المشركين قوته. زاد الحميدي حدثنا سفيان، حدثنا عمرو، سمعت عطاء، عن ابن عباس، مثله
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவு மில்லை. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், “ஹஜ்ஜு செய்பவர் செய்வதைப் போன்றே நீயும் செய்! ஆயினும் நீ தூய்மையடையாத வரை இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யாதே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة رضى الله عنها انها قالت قدمت مكة وانا حايض، ولم اطف بالبيت، ولا بين الصفا والمروة، قالت فشكوت ذلك الى رسول الله صلى الله عليه وسلم قال " افعلي كما يفعل الحاج غير ان لا تطوفي بالبيت حتى تطهري
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) அவர்கள் மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்க வில்லை. யமனிலிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து தலை முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் ‘மினா’வுக்குச் செல்ல வேண்டுமா? என்று பேசிக்கொண்டார்கள்.45 இச்செய்தி, நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்கள், “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்வது செல்லும் என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், குர்பானி(ப் பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் என்னுடன் கொண்டு வந்திருக்கவில்லையாயின், இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” எனக் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறை வேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எல்லாரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்கள். நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேனே” எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின் உம்ராவையும் நிறைவேற்றினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب،. قال وقال لي خليفة حدثنا عبد الوهاب، حدثنا حبيب المعلم، عن عطاء، عن جابر بن عبد الله رضى الله عنهما قال اهل النبي صلى الله عليه وسلم هو واصحابه بالحج، وليس مع احد منهم هدى، غير النبي صلى الله عليه وسلم وطلحة، وقدم علي من اليمن، ومعه هدى فقال اهللت بما اهل به النبي صلى الله عليه وسلم. فامر النبي صلى الله عليه وسلم اصحابه ان يجعلوها عمرة، ويطوفوا، ثم يقصروا ويحلوا، الا من كان معه الهدى، فقالوا ننطلق الى منى، وذكر احدنا يقطر، فبلغ النبي صلى الله عليه وسلم فقال " لو استقبلت من امري ما استدبرت ما اهديت، ولولا ان معي الهدى لاحللت ". وحاضت عايشة رضى الله عنها فنسكت المناسك كلها، غير انها لم تطف بالبيت، فلما طهرت طافت بالبيت. قالت يا رسول الله تنطلقون بحجة وعمرة، وانطلق بحج فامر عبد الرحمن بن ابي بكر ان يخرج معها الى التنعيم، فاعتمرت بعد الحج
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (இரு பெருநாள்களிலும் தொழும் திடலுக்கு) எங்கள் இளம் பெண்கள் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அந்தப் பெண் கூறினார்: என் சகோதரி (உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களுடைய தோழர் ஒருவரின் மனைவியாக இருந்தார். அவருடைய கணவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவற்றில் ஆறு போர்களில் என் சகோதரியும் தன் கணவருடன் கலந்துகொண்டார். ஒரு முறை என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் (போர்க் களத்தில்) காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை யளித்து வந்தோம்; நோயாளிகளைக் கவனித்து வந்தோம்; நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருத்திக்கு துப்பட்டா இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?” எனக் கேட்டேன். அதற்கு “அவளுடைய தோழி, தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்; அவள் நன்மை யான காரியங்களிலும் இறைநம்பிக்கை யாளர்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வந்தபோது, அவரிடம் ‘(பெண்களாகிய) நாங்கள் கேட்டோம்’ அல்லது ‘பெண்கள் கேட்டனர்’. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘(அவர்களுக்கு) என் தந்தை அர்ப்பணமாகட்டும்!’ என்று கூறாமல் இருக்கவில்லை. (அதன்படி,) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர், “ஆம்! என் தந்தை அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்: ‘திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களும்’ அல்லது ‘கன்னிப் பெண்களும் திரைக்குள்ளிருக்கும் பெண்களும்’ மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கு கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். (அந்த மாளிகையில் தங்கியிருந்த) அப்பெண்மணி கூறினார்: இதைக் கேட்ட நான், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என (உம்மு அத்தியா விடம்) வினவினேன். அதற்கு “மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபாவுக் கும் (மினா, முஸ்தலிஃபா போன்ற) இன்னின்ன இடங்களுக்கும் செல்வதில் லையா?” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا مومل بن هشام، حدثنا اسماعيل، عن ايوب، عن حفصة، قالت كنا نمنع عواتقنا ان يخرجن، فقدمت امراة فنزلت قصر بني خلف، فحدثت ان اختها كانت تحت رجل من اصحاب رسول الله صلى الله عليه وسلم قد غزا مع رسول الله صلى الله عليه وسلم ثنتى عشرة غزوة، وكانت اختي معه في ست غزوات، قالت كنا نداوي الكلمى ونقوم على المرضى. فسالت اختي رسول الله صلى الله عليه وسلم فقالت هل على احدانا باس ان لم يكن لها جلباب ان لا تخرج قال " لتلبسها صاحبتها من جلبابها، ولتشهد الخير، ودعوة المومنين ". فلما قدمت ام عطية رضى الله عنها سالنها او قالت سالناها فقالت وكانت لا تذكر رسول الله صلى الله عليه وسلم الا قالت بابي. فقلنا اسمعت رسول الله صلى الله عليه وسلم يقول كذا وكذا قالت نعم بابي. فقال " لتخرج العواتق ذوات الخدور او العواتق وذوات الخدور والحيض، فيشهدن الخير، ودعوة المسلمين، ويعتزل الحيض المصلى ". فقلت الحايض. فقالت او ليس تشهد عرفة، وتشهد كذا وتشهد كذا
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال عروة سالت عايشة رضى الله عنها فقلت لها ارايت قول الله تعالى {ان الصفا والمروة من شعاير الله فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما} فوالله ما على احد جناح ان لا يطوف بالصفا والمروة. قالت بيس ما قلت يا ابن اختي ان هذه لو كانت كما اولتها عليه كانت لا جناح عليه ان لا يتطوف بهما، ولكنها انزلت في الانصار، كانوا قبل ان يسلموا يهلون لمناة الطاغية التي كانوا يعبدونها عند المشلل، فكان من اهل يتحرج ان يطوف بالصفا والمروة، فلما اسلموا سالوا رسول الله صلى الله عليه وسلم عن ذلك قالوا يا رسول الله، انا كنا نتحرج ان نطوف بين الصفا والمروة، فانزل الله تعالى {ان الصفا والمروة من شعاير الله} الاية. قالت عايشة رضى الله عنها وقد سن رسول الله صلى الله عليه وسلم الطواف بينهما، فليس لاحد ان يترك الطواف بينهما. ثم اخبرت ابا بكر بن عبد الرحمن، فقال ان هذا لعلم ما كنت سمعته، ولقد سمعت رجالا من اهل العلم، يذكرون ان الناس الا من ذكرت عايشة ممن كان يهل بمناة، كانوا يطوفون كلهم بالصفا والمروة، فلما ذكر الله تعالى الطواف بالبيت، ولم يذكر الصفا والمروة في القران قالوا يا رسول الله كنا نطوف بالصفا والمروة، وان الله انزل الطواف بالبيت، فلم يذكر الصفا فهل علينا من حرج ان نطوف بالصفا والمروة فانزل الله تعالى {ان الصفا والمروة من شعاير الله} الاية. قال ابو بكر فاسمع هذه الاية نزلت في الفريقين كليهما في الذين كانوا يتحرجون ان يطوفوا بالجاهلية بالصفا والمروة، والذين يطوفون ثم تحرجوا ان يطوفوا بهما في الاسلام من اجل ان الله تعالى امر بالطواف بالبيت، ولم يذكر الصفا حتى ذكر ذلك بعد ما ذكر الطواف بالبيت