ஹதீஸ்கள்
#1652
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (இரு பெருநாள்களிலும் தொழும் திடலுக்கு) எங்கள் இளம் பெண்கள் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அந்தப் பெண் கூறினார்: என் சகோதரி (உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களுடைய தோழர் ஒருவரின் மனைவியாக இருந்தார். அவருடைய கணவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவற்றில் ஆறு போர்களில் என் சகோதரியும் தன் கணவருடன் கலந்துகொண்டார். ஒரு முறை என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் (போர்க் களத்தில்) காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை யளித்து வந்தோம்; நோயாளிகளைக் கவனித்து வந்தோம்; நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருத்திக்கு துப்பட்டா இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?” எனக் கேட்டேன். அதற்கு “அவளுடைய தோழி, தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்; அவள் நன்மை யான காரியங்களிலும் இறைநம்பிக்கை யாளர்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வந்தபோது, அவரிடம் ‘(பெண்களாகிய) நாங்கள் கேட்டோம்’ அல்லது ‘பெண்கள் கேட்டனர்’. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘(அவர்களுக்கு) என் தந்தை அர்ப்பணமாகட்டும்!’ என்று கூறாமல் இருக்கவில்லை. (அதன்படி,) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர், “ஆம்! என் தந்தை அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்: ‘திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களும்’ அல்லது ‘கன்னிப் பெண்களும் திரைக்குள்ளிருக்கும் பெண்களும்’ மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கு கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். (அந்த மாளிகையில் தங்கியிருந்த) அப்பெண்மணி கூறினார்: இதைக் கேட்ட நான், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என (உம்மு அத்தியா விடம்) வினவினேன். அதற்கு “மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபாவுக் கும் (மினா, முஸ்தலிஃபா போன்ற) இன்னின்ன இடங்களுக்கும் செல்வதில் லையா?” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1652
- Book Index
- 133
Grades
- -