ஹதீஸ்கள்
#1644
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது (பத்னுல் மசீல்) ஓடைப் பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.43 உபைதில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தவாஃபின்போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் (சாதாரணமாக) நடந்துதானே செல்வார்கள்?” என நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “ருக்னுல் யமானியில் கூட்டநெரிசல் ஏற்பட்டால் தவிர (சாதாரண மாக) அவர்கள் நடந்து செல்லமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் ருக்னுல் யமானி யைத் தொட்டு முத்தமிடாமல் விடுவ தில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1644
- Book Index
- 126
Grades
- -