ஹதீஸ்கள்
#1644
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது (பத்னுல் மசீல்) ஓடைப் பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.43 உபைதில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தவாஃபின்போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் (சாதாரணமாக) நடந்துதானே செல்வார்கள்?” என நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “ருக்னுல் யமானியில் கூட்டநெரிசல் ஏற்பட்டால் தவிர (சாதாரண மாக) அவர்கள் நடந்து செல்லமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் ருக்னுல் யமானி யைத் தொட்டு முத்தமிடாமல் விடுவ தில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد بن ميمون، حدثنا عيسى بن يونس، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم اذا طاف الطواف الاول خب ثلاثا ومشى اربعا، وكان يسعى بطن المسيل اذا طاف بين الصفا والمروة. فقلت لنافع اكان عبد الله يمشي اذا بلغ الركن اليماني قال لا. الا ان يزاحم على الركن فانه كان لا يدعه حتى يستلمه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1644
- Book Index
- 126
Grades
- -
