ஹதீஸ்கள்
#1638
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிப் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! பிறகு இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்!” எனக் கூறினார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் எங்கள் ஹஜ்ஜை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு அனுப்பிவைத்தார்கள். நான் (அங்கு போய்) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது (விடுபட்ட) உன் உம்ராவுக்குப் பகரமாகும்” எனக் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் தவாஃப் செய்து விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பிறகு (ஹஜ்ஜுக்காக மற்றொரு இஹ்ராம் கட்டி) மினாவிலிருந்து திரும்பிய பிறகு (ஹஜ்ஜிற்காக) மற்றொரு தவாஃப் செய்தார் கள். ஆனால், ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்தவர்கள் ஒரே தவாஃப் தான் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع، فاهللنا بعمرة، ثم قال " من كان معه هدى فليهل بالحج والعمرة ثم لا يحل حتى يحل منهما ". فقدمت مكة، وانا حايض، فلما قضينا حجنا ارسلني مع عبد الرحمن الى التنعيم، فاعتمرت، فقال صلى الله عليه وسلم " هذه مكان عمرتك ". فطاف الذين اهلوا بالعمرة، ثم حلوا، ثم طافوا طوافا اخر، بعد ان رجعوا من منى، واما الذين جمعوا بين الحج والعمرة طافوا طوافا واحدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1638
- Book Index
- 121
Grades
- -
