ஹதீஸ்கள்
#1646
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)” எனக் கேட்டோம். அதற்கு “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை சுற்றிவந்தார்கள்: பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரு ரக்அத்கள் தொழுதார்கள்: பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு முறை சயீ செய்தார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1646
- Book Index
- 127
Grades
- -