Loading...

Loading...
நூல்கள்
௨௬௦ ஹதீஸ்கள்
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘துல் ஹுலைஃபா’வில் ‘சுப்ஹு’ தொழுதவுடன், தமது ஊர்தி ஒட்டகத்தை(ப் பயணத்திற்கு)த் தயாராக்கும்படி கட்டளையிடுவார்கள். அவ்வாறே தயார் செய்யப்படும். பிறகு அவர்கள் (அதில்) ஏறி, ஒட்டகம் நிலைக்கு வந்ததும் நேராக (அமர்ந்து) ‘கிப்லா’வை முன்னோக்குவார்கள். பின்னர் ‘தல்பியா’ கூறத் தொடங்குவார் கள். புனித (ஹரம்) எல்லை வரும்வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறகு ‘தூத்துவா’ எனுமிடத்தை அடையும் போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும்வரை தங்குவார்கள். சுப்ஹு தொழுதுவிட்டு (அங்கேயே) குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்த தாகவும் கூறுவார்கள். இது, இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது அறிவிப்பில் குளித்தது உள்ளிட்ட சில தகவல்களே இடம்பெறுகின்றன. அத்தியாயம் :
وقال ابو معمر حدثنا عبد الوارث، حدثنا ايوب، عن نافع، قال كان ابن عمر رضى الله عنهما اذا صلى بالغداة بذي الحليفة امر براحلته فرحلت ثم ركب، فاذا استوت به استقبل القبلة قايما، ثم يلبي حتى يبلغ المحرم، ثم يمسك حتى اذا جاء ذا طوى بات به حتى يصبح، فاذا صلى الغداة اغتسل، وزعم ان رسول الله صلى الله عليه وسلم فعل ذلك. تابعه اسماعيل عن ايوب في الغسل
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஹஜ் மற்றும் உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால், நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார்கள். பிறகு ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசலுக் குச் சென்று, (அதிகாலைத் தொழுகையைத்) தொழுவார்கள். பிறகு (தமது வாகனத்தில்) ஏறுவார்கள். அவர்களின் ஊர்தி ஒட்டகம் நேராக நிலைக்கு வந்தபின் இஹ்ராம் கட்டுவார்கள். “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் கண்டேன்” எனக் கூறு வார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن داود ابو الربيع، حدثنا فليح، عن نافع، قال كان ابن عمر رضى الله عنهما اذا اراد الخروج الى مكة ادهن بدهن ليس له رايحة طيبة، ثم ياتي مسجد الحليفة فيصلي ثم يركب، واذا استوت به راحلته قايمة احرم، ثم قال هكذا رايت النبي صلى الله عليه وسلم يفعل
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது மக்கள், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அப்போது ஒருவர், “அவனுடைய இரு கண்களுக்கு மத்தியில் ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் இதைக் கேள்விப்படவில்லை; மாறாக, ‘மூசா (அலை) அவர்கள் ‘தல்பியா’ கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் இப்போதும் காண்பதைப் போன்று உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதையே நான் கேட்டிருக்கிறேன்” என்றார்கள்.11 அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثني ابن ابي عدي، عن ابن عون، عن مجاهد، قال كنا عند ابن عباس رضى الله عنهما فذكروا الدجال انه قال " مكتوب بين عينيه كافر ". فقال ابن عباس لم اسمعه ولكنه قال " اما موسى كاني انظر اليه اذ انحدر في الوادي يلبي
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றிருந்தபோது, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். பிறகு அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால், நான் மக்கா வந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவை தவாஃபும், செய்யவில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள் “உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டிக்கொண்டு உம்ராவை விட்டுவிடு” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை ‘தன்யீம்’ எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் (அங்கு இஹ்ராம் கட்டியபின்) உம்ரா செய்தேன். “இது விடுபட்ட உன்னுடைய உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் அப்போது கூறினார்கள். உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒரு முறை (ஹஜ்ஜுக்காக) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒரு முறை மட்டுமே தவாஃப் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم في حجة الوداع، فاهللنا بعمرة ثم قال النبي صلى الله عليه وسلم " من كان معه هدى فليهل بالحج مع العمرة، ثم لا يحل حتى يحل منهما جميعا " فقدمت مكة وانا حايض، ولم اطف بالبيت ولا بين الصفا والمروة، فشكوت ذلك الى النبي صلى الله عليه وسلم فقال " انقضي راسك وامتشطي، واهلي بالحج، ودعي العمرة ". ففعلت فلما قضينا الحج ارسلني النبي صلى الله عليه وسلم مع عبد الرحمن بن ابي بكر الى التنعيم فاعتمرت فقال " هذه مكان عمرتك ". قالت فطاف الذين كانوا اهلوا بالعمرة بالبيت وبين الصفا والمروة، ثم حلوا، ثم طافوا طوافا واحدا بعد ان رجعوا من منى، واما الذين جمعوا الحج والعمرة فانما طافوا طوافا واحدا
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர்கள் கட்டியிருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இது தொடர்பாக (‘இது உங்களுக்கு மட்டுமா, அல்லது அனைவருக்கும் பொதுவானதா?’ என) சுராக்கா (ரலி) அவர்கள் (கேட்க, “எப்போதைக்கும் உரியதே; அனைவருக்கும் பொதுவானதே” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த அந்தச்) செய்தியையும் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீர் இப்போது இருப்பதைப் போன்றே, இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்தபின்) குர்பானி கொடுப்பீராக!” என்று கூறியதாகக் கூடுதல் தகவல் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، عن ابن جريج، قال عطاء قال جابر رضى الله عنه امر النبي صلى الله عليه وسلم عليا رضى الله عنه ان يقيم على احرامه، وذكر قول سراقة
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜுக்காக) யமனிலிருந்து திரும் பிய அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எதற்காக இஹ்ராம் கட்டினீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?” என்று கேட்டார் கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள் “நீங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا الحسن بن علي الخلال الهذلي، حدثنا عبد الصمد، حدثنا سليم بن حيان، قال سمعت مروان الاصفر، عن انس بن مالك رضى الله عنه قال قدم علي رضى الله عنه على النبي صلى الله عليه وسلم من اليمن فقال " بما اهللت ". قال بما اهل به النبي صلى الله عليه وسلم. فقال " لولا ان معي الهدى لاحللت ". وزاد محمد بن بكر عن ابن جريج قال له النبي صلى الله عليه وسلم " بما اهللت يا علي ". قال بما اهل به النبي صلى الله عليه وسلم قال " فاهد وامكث حراما كما انت
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தாரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல் பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் எதற்கு இஹ்ராம் கட்டினீர்கள்? (ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்காக மட்டுமா?)” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே இஹ்ராம் கட்டினேன்” என்றேன். “உம்மிடம் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, நான், “இல்லை” என்றேன். அப்போது இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருமாறும் ஸஃபா-மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுமாறும் அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் என்னைப் பணித்தார்கள். அதன்படி நான் செய்தேன். அதற்குப் பிறகு நான் என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். ‘அவள் எனக்கு தலைவாரிவிட்டாள்’ அல்லது ‘எனது தலையை அவள் கழுவினாள்’. உமர் (ரலி) அவர்கள் (பதவிக்கு) வந்தபோது கூறினார்கள்: நாம் இறைவேதத்தின்படி நடப்ப தெனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196) எனும் வசனத்தின்படி ‘ஹஜ், உம்ரா இரண்டையும் முழுமையாக நிறைவேற்று மாறு அது நமக்குக் கட்டளையிடுகின்றது. நாம் நபிவழியின்படி நடப்பதென்றாலும், அவர்கள் குர்பானிப் பிராணியை அறுக் கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை (அதாவது இரண்டையும் சேர்த்தே செய்தார்கள்.)12 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن قيس بن مسلم، عن طارق بن شهاب، عن ابي موسى رضى الله عنه قال بعثني النبي صلى الله عليه وسلم الى قوم باليمن فجيت وهو بالبطحاء فقال " بما اهللت ". قلت اهللت كاهلال النبي صلى الله عليه وسلم قال " هل معك من هدى ". قلت لا. فامرني فطفت بالبيت وبالصفا والمروة ثم امرني فاحللت فاتيت امراة من قومي فمشطتني، او غسلت راسي، فقدم عمر رضى الله عنه فقال ان ناخذ بكتاب الله فانه يامرنا بالتمام قال الله {واتموا الحج والعمرة} وان ناخذ بسنة النبي صلى الله عليه وسلم فانه لم يحل حتى نحر الهدى
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் மாதத்தில், ஹஜ் நாட்களில், ஹஜ்ஜின் புனித கிரியைகளில் புறப்பட்டு ‘ஸரிஃப்’ எனுமிடத்தில் இறங்கி னோம். நபி (ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர் களிடம் வந்து, “உங்களில் யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தமது இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக் கொள்ள விரும்பினால், அவ்வாறே செய்து கொள்ளட்டும்; யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்” என்றார்கள். தோழர் களில் சிலர் இதன்படி செய்தார்கள்; சிலர் இதன்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடனும் அவர்களுடனிருந்த வசதி படைத்த தோழர்களில் சிலருடனும் குர்பானிப் பிராணி இருந்ததால் அவர் களால் உம்ரா(வை மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட) முடியவில்லை. இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுதுகொண்டிருந்தேன். “ஏய்! ஏன் அழுகிறாய்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் தோழர்களுக்குக் கூறியதைக் கேட்டேன்; நான் உம்ரா செய்ய முடியாம லாகிவிட்டது” என்றேன். “உனக்கு என்னவாயிற்று?” எனக் கேட்டார்கள். “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். “அதனால் உனக்குப் பாதிப்பில்லை. ஆதமின் பெண் மக்களில் நீயும் ஒருத்தி! எனவே, இறைவன் அவர்களுக்கு விதியாக்கிய ஒன்றைத்தான் உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்துகொண்டிரு! அல்லாஹ் உனக்கு உம்ரா செய்யும் வாய்ப்பையும் தரலாம்” என்றார்கள். நாங்கள் அந்த ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவை அடைந்தபோது நான் தூய்மையானேன். பிறகு மினாவிலிருந்து சென்று கஅபாவை தவாஃப் செய்தேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்த கடைசிக் கூட்டத்தினரோடு புறப்பட்டு ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்களுடனேயே தங்கினேன். அப்போது (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “உம்முடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துச் சென்று உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து இருவரும் உம்ராவை முடியுங்கள். பிறகு இதே இடத்திற்குத் திரும்பி வாருங்கள். நீங்கள் வரும்வரை உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டோம். தவாஃபை முடித்து ஸஹருடைய நேரத் தில் நபியவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (“உம்ராவை) முடித்துவிட்டீர்களா?” எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புறப்பட அனுமதித்தார்கள். மக்கள் அனைவரும் புறப்பட்டதும் மதீனாவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.14 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثني ابو بكر الحنفي، حدثنا افلح بن حميد، سمعت القاسم بن محمد، عن عايشة رضى الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في اشهر الحج، وليالي الحج وحرم الحج، فنزلنا بسرف قالت فخرج الى اصحابه فقال " من لم يكن منكم معه هدى فاحب ان يجعلها عمرة فليفعل، ومن كان معه الهدى فلا ". قالت فالاخذ بها والتارك لها من اصحابه قالت فاما رسول الله صلى الله عليه وسلم ورجال من اصحابه فكانوا اهل قوة، وكان معهم الهدى، فلم يقدروا على العمرة قالت فدخل على رسول الله صلى الله عليه وسلم وانا ابكي فقال " ما يبكيك يا هنتاه ". قلت سمعت قولك لاصحابك فمنعت العمرة. قال " وما شانك ". قلت لا اصلي. قال " فلا يضيرك، انما انت امراة من بنات ادم كتب الله عليك ما كتب عليهن، فكوني في حجتك، فعسى الله ان يرزقكيها ". قالت فخرجنا في حجته حتى قدمنا منى فطهرت، ثم خرجت من منى فافضت بالبيت قالت ثم خرجت معه في النفر الاخر حتى نزل المحصب، ونزلنا معه فدعا عبد الرحمن بن ابي بكر فقال " اخرج باختك من الحرم، فلتهل بعمرة ثم افرغا، ثم ايتيا ها هنا، فاني انظركما حتى تاتياني ". قالت فخرجنا حتى اذا فرغت، وفرغت من الطواف ثم جيته بسحر فقال " هل فرغتم ". فقلت نعم. فاذن بالرحيل في اصحابه، فارتحل الناس فمر متوجها الى المدينة. ضير من ضار يضير ضيرا، ويقال ضار يضور ضورا وضر يضر ضرا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அது ஹஜ் மட்டும்தான் என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் மக்காவை வந்த டைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்ததால் தவாஃப் செய்யவில்லை. ‘அல்முஹஸ்ஸப்’ (எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால், நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “நாம் மக்காவை வந்தடைந்த இரவுகளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். “அப்படியானால் உன் சகோதரருடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.16 (நபியவர்களின் மற்றொரு மனைவி யான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நானும் மக்களின் பயணத்தைத் தடுத்துவிட்டதாக உணர்கி றேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) துல்ஹஜ் பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்துவிட்டேன்’ என்றார். “பரவாயில்லை; புறப்படு!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நான் குன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்; அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந் தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன். அத்தியாயம் :
حدثنا عثمان، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها خرجنا مع النبي صلى الله عليه وسلم ولا نرى الا انه الحج، فلما قدمنا تطوفنا بالبيت، فامر النبي صلى الله عليه وسلم من لم يكن ساق الهدى ان يحل، فحل من لم يكن ساق الهدى، ونساوه لم يسقن فاحللن، قالت عايشة رضى الله عنها فحضت فلم اطف بالبيت، فلما كانت ليلة الحصبة قالت يا رسول الله، يرجع الناس بعمرة وحجة وارجع انا بحجة قال " وما طفت ليالي قدمنا مكة ". قلت لا. قال " فاذهبي مع اخيك الى التنعيم، فاهلي بعمرة ثم موعدك كذا وكذا ". قالت صفية ما اراني الا حابستهم. قال " عقرى حلقى، اوما طفت يوم النحر ". قالت قلت بلى. قال " لا باس، انفري ". قالت عايشة رضى الله عنها فلقيني النبي صلى الله عليه وسلم وهو مصعد من مكة، وانا منهبطة عليها، او انا مصعدة وهو منهبط منها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காகவும் (தமத்துஉ), சிலர் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்காகவும் (கிரான்), சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் (இஃப்ராத்) இஹ்ராம் கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக் கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் கட்டியவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي الاسود، محمد بن عبد الرحمن بن نوفل عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها انها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حجة الوداع، فمنا من اهل بعمرة، ومنا من اهل بحجة وعمرة، ومنا من اهل بالحج واهل رسول الله صلى الله عليه وسلم بالحج، فاما من اهل بالحج او جمع الحج والعمرة لم يحلوا حتى كان يوم النحر
மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ‘தமத்துஉ’ முறை ஹஜ்ஜையும் (‘கிரான்’ முறையில்) உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற் கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடப்போவதில்லை” எனக் கூறினார்கள்.17 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن الحكم، عن علي بن حسين، عن مروان بن الحكم، قال شهدت عثمان وعليا رضى الله عنهما وعثمان ينهى عن المتعة وان يجمع بينهما. فلما راى علي، اهل بهما لبيك بعمرة وحجة قال ما كنت لادع سنة النبي صلى الله عليه وسلم لقول احد
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக் கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு மறைந்து, காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்பவர் உம்ரா செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக (மக்கா நகருக்கு) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள்.18 இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமி லிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு “(தடை செய்யப்படாத) அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ابن طاوس، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما قال كانوا يرون ان العمرة في اشهر الحج من افجر الفجور في الارض، ويجعلون المحرم صفرا ويقولون اذا برا الدبر، وعفا الاثر، وانسلخ صفر، حلت العمرة لمن اعتمر. قدم النبي صلى الله عليه وسلم واصحابه صبيحة رابعة مهلين بالحج، فامرهم ان يجعلوها عمرة فتعاظم ذلك عندهم فقالوا يا رسول الله اى الحل قال " حل كله
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டுவராததால் உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا غندر، حدثنا شعبة، عن قيس بن مسلم، عن طارق بن شهاب، عن ابي موسى رضى الله عنه قال قدمت على النبي صلى الله عليه وسلم. فامره بالحل
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமைக் களையக் கூடாது” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك،. وحدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن ابن عمر، عن حفصة رضى الله عنهم زوج النبي صلى الله عليه وسلم انها قالت يا رسول الله، ما شان الناس حلوا بعمرة ولم تحلل انت من عمرتك قال " اني لبدت راسي، وقلدت هديي فلا احل حتى انحر
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ‘தமத்துஉ’ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவினேன். அதற்கு அவர்கள், தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார்கள். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, “ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், “(தமத்துஉவோ) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என்று கூறி, நீர் என்னுடன் தங்கிக்கொள்வீராக! எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உமக்குத் தருகிறேன்” எனக் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நான் நஸ்ர் பின் இம்ரானி டம் கேட்டேன். “நான் கண்ட கனவே காரணம்” என அவர் கூறினார். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، اخبرنا ابو جمرة، نصر بن عمران الضبعي قال تمتعت فنهاني ناس، فسالت ابن عباس رضى الله عنهما فامرني، فرايت في المنام كان رجلا يقول لي حج مبرور وعمرة متقبلة، فاخبرت ابن عباس فقال سنة النبي صلى الله عليه وسلم فقال لي اقم عندي، فاجعل لك سهما من مالي. قال شعبة فقلت لم فقال للرويا التي رايت
அபூஷிஹாப் மூசா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் (அதாவது துல்ஹஜ் ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம், “இப்போது உமது ஹஜ் (தமத்துஉ செய்வதால்) மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும் (குறைந்த நன்மைகளே கிடைக்கும்”) என்றனர்.19 நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி விளக்கம் கேட்டேன். அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் குர்பானி ஒட்டகங்களை ஓட்டிவந்த நாளில் நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். அப்போது மக்கள் அனை வரும் ஹஜ்ஜுக்காக மட்டுமே தனியாக இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம், “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தி யில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங் கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக் கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிடில், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்ததால், அது அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை (அங்கு அதை குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயலாற்றினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளரான அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள் இதைத் தவிர வேறு (மர்ஃபூஆன) ஹதீஸ்கள் அறிவிக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا ابو شهاب، قال قدمت متمتعا مكة بعمرة فدخلنا قبل التروية بثلاثة ايام، فقال لي اناس من اهل مكة تصير الان حجتك مكية. فدخلت على عطاء استفتيه فقال حدثني جابر بن عبد الله رضى الله عنهما انه حج مع النبي صلى الله عليه وسلم يوم ساق البدن معه، وقد اهلوا بالحج مفردا، فقال لهم " احلوا من احرامكم بطواف البيت وبين الصفا والمروة، وقصروا ثم اقيموا حلالا، حتى اذا كان يوم التروية فاهلوا بالحج، واجعلوا التي قدمتم بها متعة ". فقالوا كيف نجعلها متعة وقد سمينا الحج فقال " افعلوا ما امرتكم، فلولا اني سقت الهدى لفعلت مثل الذي امرتكم، ولكن لا يحل مني حرام حتى يبلغ الهدى محله ". ففعلوا. قال ابو عبد الله ابو شهاب ليس له مسند الا هذا
சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் ‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் ‘தமத்துஉ’ ஹஜ் தொடர்பாக கருத்து வேற்றுமை கொண்டனர். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்றைத் தடுக்கவே நீங்கள் எண்ணுகிறீர்கள் (போலும்)” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டு, ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا حجاج بن محمد الاعور، عن شعبة، عن عمرو بن مرة، عن سعيد بن المسيب، قال اختلف علي وعثمان رضى الله عنهما وهما بعسفان في المتعة، فقال علي ما تريد الا ان تنهى عن امر فعله النبي صلى الله عليه وسلم. فلما راى ذلك علي اهل بهما جميعا
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகச்) சென்றோம். அப்போது ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்’ (உன் அழைப்பை ஏற்றோம். இறைவா! ஹஜ்ஜுக்கான உன் அழைப்பை ஏற்றோம்) எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; நாங்கள் அவ்வாறே அதை உம்ராவாக ஆக்கினோம். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد بن زيد، عن ايوب، قال سمعت مجاهدا، يقول حدثنا جابر بن عبد الله رضى الله عنهما قدمنا مع رسول الله صلى الله عليه وسلم ونحن نقول لبيك اللهم لبيك بالحج. فامرنا رسول الله صلى الله عليه وسلم فجعلناها عمرة
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தமத்துஉ’ செய்தோம். குர்ஆனும் (அதை அனுமதித்தே) இறங்கியது. ஆனால், ஒரு மனிதர் (உமர் (ரலி) அவர்கள்), தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.20 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن قتادة، قال حدثني مطرف، عن عمران رضى الله عنه قال تمتعنا على عهد رسول الله صلى الله عليه وسلم فنزل القران قال رجل برايه ما شاء
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ ஹஜ் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘விடைபெறும் ஹஜ்ஜின்போது, முஹாஜிர்களும் அன்சாரிகளும் நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் (ஹஜ்ஜுக் காக) இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் கட்டினோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியைக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார்கள். நாங்கள் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடி, மனைவியருடன் தாம்பத்தியஉறவு கொண்டு (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்துகொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்மோடு குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள், பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை (குர்பானி கொடுக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” எனக் கட்டளையிட் டார்கள். பிறகு எட்டாம் நாள் மாலையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற கிரியை களை முடித்துவிட்டு வந்து தவாஃப் செய்தோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடினோம். அத்துடன் எங்களது ஹஜ் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், நாங்கள் குர்பானி கொடுக்க வேண்டியிருந்தது. “யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் ‘தமத்துஉ’ முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்). அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்” (2:196) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். குர்பானி கொடுப்பதற்கு ஆடு போதும். எனவே மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமைகளையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகள் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ், “இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்)” (2:196) என்று கூறுகின்றான். மேலும், அல்லாஹ் (2:197ஆவது வசனத்தில்) குறிப்பிடும் ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா, துல்ஹிஜ்ஜா ஆகியனவாகும். இம்மாதங்களில் யார் ‘தமத்துஉ’ செய்கிறாரோ அவர்மீது பலியிடல், அல்லது நோன்பு கடமையாகும். (அந்த வசனத்தின் (2:197) மூலத்தில் இடம்பெறும்) ‘அர்ரஃபஸ்’ என்பது தாம்பத்திய உறவையும், ‘அல்ஃபுசூக்’ என்பது பாவங்களையும், ‘அல்ஜிதால்’ என்பது தர்க்கம் புரிவதையும் குறிக்கும். அத்தியாயம் :
وقال ابو كامل فضيل بن حسين البصري حدثنا ابو معشر، حدثنا عثمان بن غياث، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما انه سيل عن متعة الحج، فقال اهل المهاجرون والانصار وازواج النبي صلى الله عليه وسلم في حجة الوداع واهللنا، فلما قدمنا مكة قال رسول الله صلى الله عليه وسلم " اجعلوا اهلالكم بالحج عمرة الا من قلد الهدى ". فطفنا بالبيت وبالصفا والمروة واتينا النساء، ولبسنا الثياب وقال " من قلد الهدى فانه لا يحل له حتى يبلغ الهدى محله ". ثم امرنا عشية التروية ان نهل بالحج، فاذا فرغنا من المناسك جينا فطفنا بالبيت وبالصفا والمروة فقد تم حجنا، وعلينا الهدى كما قال الله تعالى {فما استيسر من الهدى فمن لم يجد فصيام ثلاثة ايام في الحج وسبعة اذا رجعتم} الى امصاركم. الشاة تجزي، فجمعوا نسكين في عام بين الحج والعمرة، فان الله تعالى انزله في كتابه وسنه نبيه صلى الله عليه وسلم واباحه للناس غير اهل مكة، قال الله {ذلك لمن لم يكن اهله حاضري المسجد الحرام} واشهر الحج التي ذكر الله تعالى شوال وذو القعدة وذو الحجة، فمن تمتع في هذه الاشهر فعليه دم او صوم، والرفث الجماع، والفسوق المعاصي، والجدال المراء