ஹதீஸ்கள்
#1556
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றிருந்தபோது, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். பிறகு அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால், நான் மக்கா வந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவை தவாஃபும், செய்யவில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள் “உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டிக்கொண்டு உம்ராவை விட்டுவிடு” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை ‘தன்யீம்’ எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் (அங்கு இஹ்ராம் கட்டியபின்) உம்ரா செய்தேன். “இது விடுபட்ட உன்னுடைய உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் அப்போது கூறினார்கள். உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒரு முறை (ஹஜ்ஜுக்காக) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒரு முறை மட்டுமே தவாஃப் செய்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1556
- Book Index
- 42
Grades
- -