ஹதீஸ்கள்
#1557
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர்கள் கட்டியிருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இது தொடர்பாக (‘இது உங்களுக்கு மட்டுமா, அல்லது அனைவருக்கும் பொதுவானதா?’ என) சுராக்கா (ரலி) அவர்கள் (கேட்க, “எப்போதைக்கும் உரியதே; அனைவருக்கும் பொதுவானதே” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த அந்தச்) செய்தியையும் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீர் இப்போது இருப்பதைப் போன்றே, இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்தபின்) குர்பானி கொடுப்பீராக!” என்று கூறியதாகக் கூடுதல் தகவல் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، عن ابن جريج، قال عطاء قال جابر رضى الله عنه امر النبي صلى الله عليه وسلم عليا رضى الله عنه ان يقيم على احرامه، وذكر قول سراقة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1557
- Book Index
- 43
Grades
- -
