ஹதீஸ்கள்
#1567
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ‘தமத்துஉ’ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவினேன். அதற்கு அவர்கள், தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார்கள். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, “ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக்கொள்ளப்பட்டது” எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், “(தமத்துஉவோ) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என்று கூறி, நீர் என்னுடன் தங்கிக்கொள்வீராக! எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உமக்குத் தருகிறேன்” எனக் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நான் நஸ்ர் பின் இம்ரானி டம் கேட்டேன். “நான் கண்ட கனவே காரணம்” என அவர் கூறினார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1567
- Book Index
- 53
Grades
- -