Loading...

Loading...
நூல்கள்
௧௫ ஹதீஸ்கள்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அது (முன்னர்) அவர் தொழுதவற்றை ஒற்றையாக ஆக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، وعبد الله بن دينار، عن ابن عمر، ان رجلا، سال رسول الله صلى الله عليه وسلم عن صلاة الليل فقال رسول الله صلى الله عليه وسلم " صلاة الليل مثنى مثنى، فاذا خشي احدكم الصبح صلى ركعة واحدة، توتر له ما قد صلى
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், வித்ர் தொழும்போது (மூன்று ரக்அத்களில் கடைசி) ஒரு ரக்அத்திற்கும் (முந்தைய) இரு ரக்அத்களுக்கும் இடையே ‘சலாம்’ கொடுப்பார்கள். (அந்த இடைவெளியில்) தம்முடைய சில தேவைகள் பற்றி (தம் ஊழியருக்கு)க் கட்டளையிடுவார்கள். அத்தியாயம் :
وعن نافع، ان عبد الله بن عمر، كان يسلم بين الركعة والركعتين في الوتر، حتى يامر ببعض حاجته
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். நான் ஓர் தலையணை யின் அகலவாட்டில் தலைசாய்த்து உறங்கி னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அத்தலையணையின் நீளவாட்டில் தலைசாய்த்து உறங்கினர். நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்கு நெருக்கமான நேரம்வரை உறங்கினார்கள். அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தம் முகத்தி-ருந்த தூக்க(க் கலக்க)த்தை (தமது கரத்தால்) துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் (கடைசிப்) பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கட்டித் தொங்கவிடப்பட்டி ருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதி-ருந்து தண்ணீர் சரித்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். தமது உளூவைச் செம்மையாகச் செய்துகொண்டபின் அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்ததைப் போன்று நானும் (அங்கத்தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து எனது காதை திருகிப்பிடித்(து என்னைத் தமது வலப் பாகத்தில் நிறுத்திவைத்)தார்கள். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர் தொழுதார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (‘பிலால்’ பாங்கு சொல்-விட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந் தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹு டைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழுகையை (இமாமாக நின்று) தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن مخرمة بن سليمان، عن كريب، ان ابن عباس، اخبره انه، بات عند ميمونة، وهى خالته، فاضطجعت في عرض وسادة، واضطجع رسول الله صلى الله عليه وسلم واهله في طولها، فنام حتى انتصف الليل او قريبا منه، فاستيقظ يمسح النوم عن وجهه، ثم قرا عشر ايات من ال عمران، ثم قام رسول الله صلى الله عليه وسلم الى شن معلقة، فتوضا فاحسن الوضوء، ثم قام يصلي فصنعت مثله فقمت الى جنبه، فوضع يده اليمنى على راسي، واخذ باذني يفتلها، ثم صلى ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم اوتر، ثم اضطجع حتى جاءه الموذن فقام فصلى ركعتين ثم، خرج فصلى الصبح
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! (இரவுத் தொழுகையை) நீர் முடித்துக்கொள்ள விரும்பினால், ஒரு ரக்அத் தொழுது (முடித்துக்)கொள்வீராக! அது, முன்னர் நீர் தொழுததை உமக்கு ஒற்றையாக ஆக்கிவிடும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நமக்கு விவரம் தெரிந்த நாள் முதல் மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதையே நாம் காண்கிறோம். (மூன்று ரக்அத், ஒரு ரக்அத் ஆகியவற்றில்) ஒவ்வொன்றுக்குமே அனுமதி உண்டு. இதில் எதைச் செய்தாலும் தவறாகாது என்றே நான் கருதுகிறேன். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، قال حدثني ابن وهب، قال اخبرني عمرو، ان عبد الرحمن بن القاسم، حدثه عن ابيه، عن عبد الله بن عمر، قال قال النبي صلى الله عليه وسلم " صلاة الليل مثنى مثنى، فاذا اردت ان تنصرف فاركع ركعة توتر لك ما صليت ". قال القاسم وراينا اناسا منذ ادركنا يوترون بثلاث، وان كلا لواسع ارجو ان لا يكون بشىء منه باس
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொன்று ரக்அத்கள் தொழு பவர்களாக இருந்தார்கள். அதுவே அவர் களது தொழுகையாக -அதாவது இரவுத் தொழுகையாக- இருந்தது. அத்தொழு கையில் ஒரு சஜ்தாவை முடித்ததும் தமது தலையை உயர்த்துவதற்குமுன், உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (ஃபஜ்ர்) தொழுகைக்கு (அழைக்க) தம்மிடம் வரும்வரையில் வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، عن عروة، ان عايشة، اخبرته ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي احدى عشرة ركعة، كانت تلك صلاته تعني بالليل فيسجد السجدة من ذلك قدر ما يقرا احدكم خمسين اية قبل ان يرفع راسه، ويركع ركعتين قبل صلاة الفجر، ثم يضطجع على شقه الايمن حتى ياتيه الموذن للصلاة
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)களில் நான் நீண்ட அத்தியாயங் களை ஓதலாமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுதவற்றை) ஒற்றையாக ஆக்குவார்கள். வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னால் இகாமத் சொல்லும் சப்தம் தமது காதில் விழுவதைப் போன்று (விரைவாக) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழு வார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவது (சுப்ஹுடைய சுன்னத்தில் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) விரைவாக (சுருக்க மாக)த் தொழுவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا حماد بن زيد، قال حدثنا انس بن سيرين، قال قلت لابن عمر ارايت الركعتين قبل صلاة الغداة اطيل فيهما القراءة فقال كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل مثنى مثنى، ويوتر بركعة ويصلي الركعتين قبل صلاة الغداة وكان الاذان باذنيه. قال حماد اى سرعة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரவின் எல்லாப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள். (பல சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் நேரத்தில் முடியும். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، قال حدثنا ابي قال، حدثنا الاعمش، قال حدثني مسلم، عن مسروق، عن عايشة، قالت كل الليل اوتر رسول الله صلى الله عليه وسلم وانتهى وتره الى السحر
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னைத் துயிலெழுப்புவார்கள். உடனே நானும் (எழுந்து) வித்ர் தொழுவேன்.4 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، قال حدثنا هشام، قال حدثني ابي، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يصلي، وانا راقدة معترضة على فراشه، فاذا اراد ان يوتر ايقظني فاوترت
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் உங்களது இறுதித் தொழுகை யாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى بن سعيد، عن عبيد الله، حدثني نافع، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " اجعلوا اخر صلاتكم بالليل وترا
சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மக்கா செல்லும் சாலையில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களு டன் சென்றுகொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சிய நான், (எனது ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு அவர் களுடன் (போய்) சேர்ந்துகொண்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(இவ்வளவு நேரம்) எங்கே சென்றிருந்தீர்?” என்று கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சினேன். எனவே, (ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதேன்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக (இருக்கிறது)” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் வித்ர் தொழுதிருக்கிறார்கள்” என்று கூறி னார்கள்.5 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابي بكر بن عمر بن عبد الرحمن بن عبد الله بن عمر بن الخطاب، عن سعيد بن يسار، انه قال كنت اسير مع عبد الله بن عمر بطريق مكة فقال سعيد فلما خشيت الصبح نزلت فاوترت، ثم لحقته فقال عبد الله بن عمر اين كنت فقلت خشيت الصبح، فنزلت فاوترت. فقال عبد الله اليس لك في رسول الله صلى الله عليه وسلم اسوة حسنة فقلت بلى والله. قال فان رسول الله صلى الله عليه وسلم كان يوتر على البعير
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீது அமர்ந்தவாறு வாகனம் செல்லும் திசையில் சைகை செய்து இரவுத் தொழுகையைத் தொழுவார்கள்; ஆனால், கடமையான தொழுகைகளைத் தவிர! மேலும், தமது வாகனத்தின் மீது அமர்ந்தே வித்ர் தொழுவார்கள்.6 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا جويرية بن اسماء، عن نافع، عن ابن عمر، قال كان النبي صلى الله عليه وسلم يصلي في السفر على راحلته، حيث توجهت به، يومي ايماء، صلاة الليل الا الفرايض، ويوتر على راحلته
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் ‘குனூத்’ ஓதினார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “ருகூஉ வுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூஉவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம் அவர்கள் குனூத் ஓதினார்கள்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن محمد، قال سيل انس اقنت النبي صلى الله عليه وسلم في الصبح قال نعم. فقيل له اوقنت قبل الركوع قال بعد الركوع يسيرا
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(ஆம்) குனூத் இருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “ருகூஉவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉ விற்கு முன்புதான்” என்று பதிலளித் தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (குர்ரா) என்று அழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க, அந்த எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான், அவர்களுக்கெதிராகப் பிரார்த்திக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குனூத்’ (இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا عبد الواحد، قال حدثنا عاصم، قال سالت انس بن مالك عن القنوت،. فقال قد كان القنوت. قلت قبل الركوع او بعده قال قبله. قال فان فلانا اخبرني عنك انك قلت بعد الركوع. فقال كذب، انما قنت رسول الله صلى الله عليه وسلم بعد الركوع شهرا اراه كان بعث قوما يقال لهم القراء زهاء سبعين رجلا الى قوم من المشركين دون اوليك، وكان بينهم وبين رسول الله صلى الله عليه وسلم عهد فقنت رسول الله صلى الله عليه وسلم شهرا يدعو عليهم
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாத காலம் ‘குனூத்’ (எனும் இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். (அதில் இணைவைப்பாளர்களான) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
اخبرنا احمد بن يونس، قال حدثنا زايدة، عن التيمي، عن ابي مجلز، عن انس، قال قنت النبي صلى الله عليه وسلم شهرا يدعو على رعل وذكوان
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) குனூத் (இடர் காலப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலுமே (நடைமுறையில்) இருந்தது.8 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل، قال حدثنا خالد، عن ابي قلابة، عن انس، قال كان القنوت في المغرب والفجر