ஹதீஸ்கள்
#999
ஸஹீஹ் அல்-புகாரீ - Witr Prayer
சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மக்கா செல்லும் சாலையில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களு டன் சென்றுகொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சிய நான், (எனது ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு அவர் களுடன் (போய்) சேர்ந்துகொண்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(இவ்வளவு நேரம்) எங்கே சென்றிருந்தீர்?” என்று கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சினேன். எனவே, (ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதேன்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக (இருக்கிறது)” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் வித்ர் தொழுதிருக்கிறார்கள்” என்று கூறி னார்கள்.5 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابي بكر بن عمر بن عبد الرحمن بن عبد الله بن عمر بن الخطاب، عن سعيد بن يسار، انه قال كنت اسير مع عبد الله بن عمر بطريق مكة فقال سعيد فلما خشيت الصبح نزلت فاوترت، ثم لحقته فقال عبد الله بن عمر اين كنت فقلت خشيت الصبح، فنزلت فاوترت. فقال عبد الله اليس لك في رسول الله صلى الله عليه وسلم اسوة حسنة فقلت بلى والله. قال فان رسول الله صلى الله عليه وسلم كان يوتر على البعير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witr Prayer
- Hadith Index
- #999
- Book Index
- 10
Grades
- -
