ஹதீஸ்கள்
#995
ஸஹீஹ் அல்-புகாரீ - Witr Prayer
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)களில் நான் நீண்ட அத்தியாயங் களை ஓதலாமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுதவற்றை) ஒற்றையாக ஆக்குவார்கள். வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னால் இகாமத் சொல்லும் சப்தம் தமது காதில் விழுவதைப் போன்று (விரைவாக) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழு வார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவது (சுப்ஹுடைய சுன்னத்தில் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) விரைவாக (சுருக்க மாக)த் தொழுவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا حماد بن زيد، قال حدثنا انس بن سيرين، قال قلت لابن عمر ارايت الركعتين قبل صلاة الغداة اطيل فيهما القراءة فقال كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل مثنى مثنى، ويوتر بركعة ويصلي الركعتين قبل صلاة الغداة وكان الاذان باذنيه. قال حماد اى سرعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witr Prayer
- Hadith Index
- #995
- Book Index
- 6
Grades
- -
