Loading...

Loading...
நூல்கள்
௨௭௩ ஹதீஸ்கள்
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா அத்தி யாயத்தையும் (அவ்விரு ரக்அத்கள் ஒவ்வொன்றிலும்) மற்றோர் அத்தியாத் தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، عن هشام، عن يحيى بن ابي كثير، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال كان النبي صلى الله عليه وسلم يقرا في الركعتين من الظهر والعصر بفاتحة الكتاب، وسورة سورة، ويسمعنا الاية احيانا
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ‘வல்முர்சலாத்தி உர்ஃபன்’ எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப் போது அவர்கள், “என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகை யில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிட மிருந்து செவியுற்றதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابن عباس رضى الله عنهما انه قال ان ام الفضل سمعته وهو يقرا {والمرسلات عرفا} فقالت يا بنى والله لقد ذكرتني بقراءتك هذه السورة، انها لاخر ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرا بها في المغرب
மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.50 அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، عن ابن ابي مليكة، عن عروة بن الزبير، عن مروان بن الحكم، قال قال لي زيد بن ثابت ما لك تقرا في المغرب بقصار، وقد سمعت النبي صلى الله عليه وسلم يقرا بطول الطوليين
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابن شهاب، عن محمد بن جبير بن مطعم، عن ابيه، قال سمعت رسول الله صلى الله عليه وسلم قرا في المغرب بالطور
அபூராஃபிஉ (நுஃபைஉ பின் ராஃபிஉ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகை தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (அதில் சஜ்தா (21ஆவது) வசனம் வந்ததும்) சஜ்தா (ஓதலுக்குரிய சிரவணக்கம்) செய்தார்கள். ஆகவே, அது குறித்து நான் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள், அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் சஜ்தா செய்திருக்கிறேன். நான் அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) நான் அ(தை ஓதுவ)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا معتمر، عن ابيه، عن بكر، عن ابي رافع، قال صليت مع ابي هريرة العتمة فقرا {اذا السماء انشقت} فسجد فقلت له قال سجدت خلف ابي القاسم صلى الله عليه وسلم فلا ازال اسجد بها حتى القاه
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا شعبة، عن عدي، قال سمعت البراء، ان النبي صلى الله عليه وسلم كان في سفر فقرا في العشاء في احدى الركعتين بالتين والزيتون
அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியா யத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார் கள். ஆகவே, நான் (அவர்களிடம்), “என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத் திற்காக சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின் னால் (தொழுதபோது) இ(ந்த அத்தி யாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்திருக்கி றேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும்)வரை அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يزيد بن زريع، قال حدثني التيمي، عن بكر، عن ابي رافع، قال صليت مع ابي هريرة العتمة فقرا {اذا السماء انشقت} فسجد فقلت ما هذه قال سجدت بها خلف ابي القاسم صلى الله عليه وسلم فلا ازال اسجد بها حتى القاه
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட ‘அழகிய குர-ல்’ அல்லது ‘அழகிய ஓதல் முறையில்’ வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை. அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، قال حدثنا مسعر، قال حدثنا عدي بن ثابت، سمع البراء، رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرا {والتين والزيتون} في العشاء، وما سمعت احدا احسن صوتا منه او قراءة
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ர-) அவர்களிடம், “(கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக்காட்டிய முறையைப் பின் பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் உன்மையே கூறினீர்கள். ‘உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்’ அல்லது ‘உங்களைப் பற்றி எனது எண்ணமும்’ அதுதான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن ابي عون، قال سمعت جابر بن سمرة، قال قال عمر لسعد لقد شكوك في كل شىء حتى الصلاة. قال اما انا فامد في الاوليين، واحذف في الاخريين، ولا الو ما اقتديت به من صلاة رسول الله صلى الله عليه وسلم. قال صدقت، ذاك الظن بك، او ظني بك
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையை சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடி(யிலுள்ள தமது வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறி னார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்து வதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தமது அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவுக்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹு தொழுகையின்) ‘இரு ரக்அத்களில்’ அல்லது ‘அவற்றில் ஒன்றில்’ அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.51 அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، قال حدثنا سيار بن سلامة، قال دخلت انا وابي، على ابي برزة الاسلمي فسالناه عن وقت الصلوات، فقال كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر حين تزول الشمس، والعصر ويرجع الرجل الى اقصى المدينة والشمس حية، ونسيت ما قال في المغرب، ولا يبالي بتاخير العشاء الى ثلث الليل ولا يحب النوم قبلها، ولا الحديث بعدها، ويصلي الصبح فينصرف الرجل فيعرف جليسه، وكان يقرا في الركعتين او احداهما ما بين الستين الى الماية
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை நாங்களும் உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாங்களும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل بن ابراهيم، قال اخبرنا ابن جريج، قال اخبرني عطاء، انه سمع ابا هريرة رضى الله عنه يقول في كل صلاة يقرا، فما اسمعنا رسول الله صلى الله عليه وسلم اسمعناكم، وما اخفى عنا اخفينا عنكم، وان لم تزد على ام القران اجزات، وان زدت فهو خير
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்தி களுக்கும் இடையே திரையிடப்பட்டு (அவற்றை அவர்கள் கேட்க முடியாமல் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள்மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக் கும் எங்களுக்கும் இடையே திரையிடப் பட்டுவிட்டது; எங்கள்மீது விண்கொள்ளி கள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலளித் தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும் பரவிச்) சென்று நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள இ(ந்தச் சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்” என்றனர். அவ்வாறே திஹாமா நோக்கிச் சென்ற அந்த ஷைத்தான்கள் (எல்லாத் திசைகளை யும் ஆராய்ந்தபடி) நபி (ஸல்) அவர்களி டம் திரும்பிச் சென்றனர். அப்போது ‘உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனும் இடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத் தான்கள் கவனமாகச் செவி கொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்), “அல்லாஹ்வின் மீதாணையாக! வான் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே, அதை நாங்கள் நம்புகிறோம் (இனி) ஒருபோதும் நம் இறைவனுக்கு நாங்கள் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு, “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான். ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹீ’ மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال انطلق النبي صلى الله عليه وسلم في طايفة من اصحابه عامدين الى سوق عكاظ، وقد حيل بين الشياطين وبين خبر السماء، وارسلت عليهم الشهب، فرجعت الشياطين الى قومهم. فقالوا ما لكم فقالوا حيل بيننا وبين خبر السماء، وارسلت علينا الشهب. قالوا ما حال بينكم وبين خبر السماء الا شىء حدث، فاضربوا مشارق الارض ومغاربها، فانظروا ما هذا الذي حال بينكم وبين خبر السماء فانصرف اوليك الذين توجهوا نحو تهامة الى النبي صلى الله عليه وسلم وهو بنخلة، عامدين الى سوق عكاظ وهو يصلي باصحابه صلاة الفجر، فلما سمعوا القران استمعوا له فقالوا هذا والله الذي حال بينكم وبين خبر السماء. فهنالك حين رجعوا الى قومهم وقالوا يا قومنا {انا سمعنا قرانا عجبا * يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا} فانزل الله على نبيه صلى الله عليه وسلم {قل اوحي الى} وانما اوحي اليه قول الجن
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமக்கு (அல்லாஹ்வால்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள்; தமக்குப் பிறப்பிக் கப்பட்ட உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) மெதுவாக ஓதினார்கள். (ஏனெனில்,) “உம் இறைவன் மறப்பவன் அல்லன்” (19:64) என்று அல்லாஹ் கூறு கின்றான். “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு” (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.52 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل، قال حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، قال قرا النبي صلى الله عليه وسلم فيما امر، وسكت فيما امر {وما كان ربك نسيا} {لقد كان لكم في رسول الله اسوة حسنة}
وقال عبيد الله عن ثابت، عن انس رضى الله عنه كان رجل من الانصار يومهم في مسجد قباء، وكان كلما افتتح سورة يقرا بها لهم في الصلاة مما يقرا به افتتح ب {قل هو الله احد} حتى يفرغ منها، ثم يقرا سورة اخرى معها، وكان يصنع ذلك في كل ركعة، فكلمه اصحابه فقالوا انك تفتتح بهذه السورة، ثم لا ترى انها تجزيك حتى تقرا باخرى، فاما ان تقرا بها واما ان تدعها وتقرا باخرى. فقال ما انا بتاركها، ان احببتم ان اومكم بذلك فعلت، وان كرهتم تركتكم. وكانوا يرون انه من افضلهم، وكرهوا ان يومهم غيره، فلما اتاهم النبي صلى الله عليه وسلم اخبروه الخبر فقال " يا فلان ما يمنعك ان تفعل ما يامرك به اصحابك وما يحملك على لزوم هذه السورة في كل ركعة ". فقال اني احبها. فقال " حبك اياها ادخلك الجنة
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் நேற்றிரவு ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன்” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் (பொருள் கொண்ட) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்” என்று கூறிவிட்டு, அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.55 அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، عن عمرو بن مرة، قال سمعت ابا وايل، قال جاء رجل الى ابن مسعود فقال قرات المفصل الليلة في ركعة. فقال هذا كهذ الشعر لقد عرفت النظاير التي كان النبي صلى الله عليه وسلم يقرن بينهن فذكر عشرين سورة من المفصل سورتين في كل ركعة
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘உம்முல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை (மட்டும்) ஓதுவார்கள். (ஒரு சில) வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையில் செய்வார் கள்; இவ்வாறே சுப்ஹு தொழுகையிலும் (முதல் ரக்அத்தில்) நீளமாக ஓதுவார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا همام، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان يقرا في الظهر في الاوليين بام الكتاب وسورتين، وفي الركعتين الاخريين بام الكتاب، ويسمعنا الاية، ويطول في الركعة الاولى ما لا يطول في الركعة الثانية، وهكذا في العصر وهكذا في الصبح
அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கப்பாப் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகை யிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதுவார் களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நாங்கள், “(அதை) நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அவர்களது தாடி அசைவதை வைத்துத்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا جرير، عن الاعمش، عن عمارة بن عمير، عن ابي معمر، قلت لخباب اكان رسول الله صلى الله عليه وسلم يقرا في الظهر والعصر قال نعم. قلنا من اين علمت قال باضطراب لحيته
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும் அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தைவிட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا الاوزاعي، حدثني يحيى بن ابي كثير، حدثني عبد الله بن ابي قتادة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان يقرا بام الكتاب وسورة معها في الركعتين الاوليين من صلاة الظهر وصلاة العصر، ويسمعنا الاية احيانا، وكان يطيل في الركعة الاولى
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். சுப்ஹு தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا هشام، عن يحيى بن ابي كثير، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان يطول في الركعة الاولى من صلاة الظهر، ويقصر في الثانية، ويفعل ذلك في صلاة الصبح
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், யார் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابن شهاب، عن سعيد بن المسيب، وابي، سلمة بن عبد الرحمن انهما اخبراه عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " اذا امن الامام فامنوا فانه من وافق تامينه تامين الملايكة غفر له ما تقدم من ذنبه ". وقال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول " امين