ஹதீஸ்கள்
#770
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ர-) அவர்களிடம், “(கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக்காட்டிய முறையைப் பின் பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் உன்மையே கூறினீர்கள். ‘உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்’ அல்லது ‘உங்களைப் பற்றி எனது எண்ணமும்’ அதுதான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #770
- Book Index
- 164
Grades
- -