ஹதீஸ்கள்
#771
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையை சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடி(யிலுள்ள தமது வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறி னார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்து வதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தமது அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவுக்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹு தொழுகையின்) ‘இரு ரக்அத்களில்’ அல்லது ‘அவற்றில் ஒன்றில்’ அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.51 அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، قال حدثنا سيار بن سلامة، قال دخلت انا وابي، على ابي برزة الاسلمي فسالناه عن وقت الصلوات، فقال كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر حين تزول الشمس، والعصر ويرجع الرجل الى اقصى المدينة والشمس حية، ونسيت ما قال في المغرب، ولا يبالي بتاخير العشاء الى ثلث الليل ولا يحب النوم قبلها، ولا الحديث بعدها، ويصلي الصبح فينصرف الرجل فيعرف جليسه، وكان يقرا في الركعتين او احداهما ما بين الستين الى الماية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #771
- Book Index
- 165
Grades
- -
