ஹதீஸ்கள்
#776
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘உம்முல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை (மட்டும்) ஓதுவார்கள். (ஒரு சில) வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையில் செய்வார் கள்; இவ்வாறே சுப்ஹு தொழுகையிலும் (முதல் ரக்அத்தில்) நீளமாக ஓதுவார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا همام، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان يقرا في الظهر في الاوليين بام الكتاب وسورتين، وفي الركعتين الاخريين بام الكتاب، ويسمعنا الاية، ويطول في الركعة الاولى ما لا يطول في الركعة الثانية، وهكذا في العصر وهكذا في الصبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #776
- Book Index
- 171
Grades
- -
