Loading...

Loading...
நூல்கள்
௨௭௩ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ரமளானில்) பிலால் (பின்)இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்காக) தொழுகை அறிவிப்பு செய்யும்வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக வும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، قال اخبرنا ابو اسامة، قال عبيد الله حدثنا عن القاسم بن محمد، عن عايشة،. وعن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال. ح وحدثني يوسف بن عيسى المروزي، قال حدثنا الفضل، قال حدثنا عبيد الله بن عمر، عن القاسم بن محمد، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم انه قال " ان بلالا يوذن بليل، فكلوا واشربوا حتى يوذن ابن ام مكتوم
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடை யில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பிய வருக்கு (அதைத் தொழுதுகொள்ள உரிமை உண்டு)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق الواسطي، قال حدثنا خالد، عن الجريري، عن ابن بريدة، عن عبد الله بن مغفل المزني، ان رسول الله صلى الله عليه وسلم قال " بين كل اذانين صلاة ثلاثا لمن شاء
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்யத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கியமான) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதைத் தடுப்பாக ஆக்கி ‘சுன்னத்’ தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்). இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் சில அறிவிப்புகளில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில்” என்று கூறியுள்ளதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا غندر، قال حدثنا شعبة، قال سمعت عمرو بن عامر الانصاري، عن انس بن مالك، قال كان الموذن اذا اذن قام ناس من اصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون السواري حتى يخرج النبي صلى الله عليه وسلم وهم كذلك يصلون الركعتين قبل المغرب، ولم يكن بين الاذان والاقامة شىء. قال عثمان بن جبلة وابو داود عن شعبة لم يكن بينهما الا قليل
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாவது தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்- முடித்ததும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ரு டைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாவது தொழுகை அறிவிப்பான) ‘இகாமத்’ சொல்(- தொழுகை நடத்து)வதற்காகத் தம்மிடம் முஅத்தின் வரும்வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்திருப்பார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، ان عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا سكت الموذن بالاولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد ان يستبين الفجر، ثم اضطجع على شقه الايمن حتى ياتيه الموذن للاقامة
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை ‘விரும்பியவருக்கு’ என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يزيد، قال حدثنا كهمس بن الحسن، عن عبد الله بن بريدة، عن عبد الله بن مغفل، قال قال النبي صلى الله عليه وسلم " بين كل اذانين صلاة بين كل اذانين صلاة ثم قال في الثالثة لمن شاء
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்துகொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவ ராகவும் மென்மையானவராகவும் இருந் தார்கள்.- (பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச்) செல்ல ஆசைப்படு வதைக் கண்டபோது நபியவர்கள், “நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங் கள்; அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்; தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، قال حدثنا وهيب، عن ايوب، عن ابي قلابة، عن مالك بن الحويرث، اتيت النبي صلى الله عليه وسلم في نفر من قومي فاقمنا عنده عشرين ليلة، وكان رحيما رفيقا، فلما راى شوقنا الى اهالينا قال " ارجعوا فكونوا فيهم وعلموهم وصلوا، فاذا حضرت الصلاة فليوذن لكم احدكم وليومكم اكبركم
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போதும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர் பாங்கு சொல்ல முற்பட்டபோதும் அவரிடம் “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும்வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்.) எந்த அளவுக்கென்றால் மணல்மேடு களு(டைய உயரத்து)க்குச் சமமாக அவற்றின் நிழல் படிந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகி றது” என்று சொன்னார்கள் அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، قال حدثنا شعبة، عن المهاجر ابي الحسن، عن زيد بن وهب، عن ابي ذر، قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فاراد الموذن ان يوذن فقال له " ابرد ". ثم اراد ان يوذن فقال له " ابرد ". ثم اراد ان يوذن. فقال له " ابرد ". حتى ساوى الظل التلول فقال النبي صلى الله عليه وسلم {ان شدة الحر من فيح جهنم}
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும்போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்-ப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، قال حدثنا سفيان، عن خالد الحذاء، عن ابي قلابة، عن مالك بن الحويرث، قال اتى رجلان النبي صلى الله عليه وسلم يريدان السفر فقال النبي صلى الله عليه وسلم " اذا انتما خرجتما فاذنا ثم اقيما ثم ليومكما اكبركما
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ லைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) ஒத்த வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். - (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த (எங்கள் குடும்பத்)தவர் களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரி வித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். (நான் கட்டளையிட்டதைச் செய்யுமாறு) அவர் களை ஏவுங்கள்- என்று கூறி, சில விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். ‘அவற்றை நான் மனனமிட்டுள்ளேன்’ அல்லது ‘அவற்றை நான் மனனமிட வில்லை’- என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால், உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا عبد الوهاب، قال حدثنا ايوب، عن ابي قلابة، قال حدثنا مالك، اتينا الى النبي صلى الله عليه وسلم ونحن شببة متقاربون، فاقمنا عنده عشرين يوما وليلة، وكان رسول الله صلى الله عليه وسلم رحيما رفيقا، فلما ظن انا قد اشتهينا اهلنا او قد اشتقنا سالنا عمن تركنا بعدنا فاخبرناه قال " ارجعوا الى اهليكم فاقيموا فيهم وعلموهم ومروهم وذكر اشياء احفظها او لا احفظها وصلوا كما رايتموني اصلي، فاذا حضرت الصلاة فليوذن لكم احدكم وليومكم اكبركم
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ‘ளஜ்னான்’ எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்’) என்று அறிவித்தார்கள். மேலும், பயணத்தின்போது குளிரான அல்லது மழை பொழியும் இரவில் தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும்போது பாங்கின் இறுதியில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال اخبرنا يحيى، عن عبيد الله بن عمر، قال حدثني نافع، قال اذن ابن عمر في ليلة باردة بضجنان ثم قال صلوا في رحالكم، فاخبرنا ان رسول الله صلى الله عليه وسلم كان يامر موذنا يوذن، ثم يقول على اثره، الا صلوا في الرحال. في الليلة الباردة او المطيرة في السفر
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (மக்காவின் புறநகரில்) ‘அப்தஹ்’ எனுமிடத்தில் கண்டேன். (அங்கு இருந்தபோது தொழுகை நேரம் வந்தது). அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘அப்தஹ்’ எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு, தொழுகைக்காக ‘இகாமத்’ சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، قال اخبرنا جعفر بن عون، قال حدثنا ابو العميس، عن عون بن ابي جحيفة، عن ابيه، قال رايت رسول الله صلى الله عليه وسلم بالابطح فجاءه بلال فاذنه بالصلاة، ثم خرج بلال بالعنزة حتى ركزها بين يدى رسول الله صلى الله عليه وسلم بالابطح واقام الصلاة
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள், பாங்கு சொல்லும்போது (இரு திசைகளிலும் உள்ள மக்களுக்குக் கேட்பதற்காக) தமது வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.10 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، قال حدثنا سفيان، عن عون بن ابي جحيفة، عن ابيه، انه راى بلالا يوذن فجعلت اتتبع فاه ها هنا وها هنا بالاذان
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது (வேகமாக வரும்) சிலரது காலடி ஓசையை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தொழுது முடித்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சலசலப்பு எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங் கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) நிறைவு செய்யுங்கள்” என்று கூறினார்கள்.11 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا شيبان، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم اذ سمع جلبة رجال فلما صلى قال " ما شانكم ". قالوا استعجلنا الى الصلاة. قال " فلا تفعلوا، اذا اتيتم الصلاة فعليكم بالسكينة، فما ادركتم فصلوا وما فاتكم فاتموا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) ‘இகாமத்’ சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்கு(ச் சாதாரணமாக) நடந்தே செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். (அவசரப்பட்டு) ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பின்னர்) நிறைவு செய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا ابن ابي ذيب، قال حدثنا الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم. وعن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا سمعتم الاقامة فامشوا الى الصلاة، وعليكم بالسكينة والوقار ولا تسرعوا، فما ادركتم فصلوا وما فاتكم فاتموا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழுந்திருக்க வேண்டாம்.12 “இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்” என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، قال حدثنا هشام، قال كتب الى يحيى عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اقيمت الصلاة فلا تقوموا حتى تروني
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا شيبان، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اقيمت الصلاة فلا تقوموا حتى تروني وعليكم بالسكينة ". تابعه علي بن المبارك
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப் பட்டுவிட்டபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தாம் தொழும் இடத்தில் (போய்) நின்றதும் (முதல்) ‘தக்பீர்’ சொல்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், (தாம் பெருந்துடக்கிற்காகக் கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) “அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி (தமது இல்லத்திற்கு)ச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும்வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.13 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثنا ابراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن ابي سلمة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم خرج وقد اقيمت الصلاة وعدلت الصفوف، حتى اذا قام في مصلاه انتظرنا ان يكبر انصرف قال " على مكانكم ". فمكثنا على هييتنا حتى خرج الينا ينطف راسه ماء وقد اغتسل
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடன் இருந்தார்கள். (நினைவு வந்தவுடன்) “அப்படியே இருங்கள்” என்று (மக்களிடம்) கூறிவிட்டு, (தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தலையி-ருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، قال حدثنا محمد بن يوسف، قال حدثنا الاوزاعي، عن الزهري، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، قال اقيمت الصلاة فسوى الناس صفوفهم، فخرج رسول الله صلى الله عليه وسلم فتقدم وهو جنب ثم قال " على مكانكم ". فرجع فاغتسل ثم خرج وراسه يقطر ماء فصلى بهم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும்வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியா மற் போய்விட்டது” என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி னார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். (அங்கு) அங்கத் தூய்மை (உளூ) செய்து சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்.14 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا شيبان، عن يحيى، قال سمعت ابا سلمة، يقول اخبرنا جابر بن عبد الله، ان النبي صلى الله عليه وسلم جاءه عمر بن الخطاب يوم الخندق فقال يا رسول الله، والله ما كدت ان اصلي حتى كادت الشمس تغرب، وذلك بعد ما افطر الصايم. فقال النبي صلى الله عليه وسلم " والله ما صليتها " فنزل النبي صلى الله عليه وسلم الى بطحان وانا معه فتوضا ثم صلى يعني العصر بعد ما غربت الشمس، ثم صلى بعدها المغرب
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் இஷா) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும்வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை. அத்தியாயம் :
حدثنا ابو معمر عبد الله بن عمرو، قال حدثنا عبد الوارث، قال حدثنا عبد العزيز بن صهيب، عن انس، قال اقيمت الصلاة والنبي صلى الله عليه وسلم يناجي رجلا في جانب المسجد، فما قام الى الصلاة حتى نام القوم