ஹதீஸ்கள்
#625
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்யத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கியமான) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதைத் தடுப்பாக ஆக்கி ‘சுன்னத்’ தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்). இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் சில அறிவிப்புகளில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில்” என்று கூறியுள்ளதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا غندر، قال حدثنا شعبة، قال سمعت عمرو بن عامر الانصاري، عن انس بن مالك، قال كان الموذن اذا اذن قام ناس من اصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون السواري حتى يخرج النبي صلى الله عليه وسلم وهم كذلك يصلون الركعتين قبل المغرب، ولم يكن بين الاذان والاقامة شىء. قال عثمان بن جبلة وابو داود عن شعبة لم يكن بينهما الا قليل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #625
- Book Index
- 22
Grades
- -
