ஹதீஸ்கள்
#639
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப் பட்டுவிட்டபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தாம் தொழும் இடத்தில் (போய்) நின்றதும் (முதல்) ‘தக்பீர்’ சொல்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், (தாம் பெருந்துடக்கிற்காகக் கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) “அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி (தமது இல்லத்திற்கு)ச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும்வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.13 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثنا ابراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن ابي سلمة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم خرج وقد اقيمت الصلاة وعدلت الصفوف، حتى اذا قام في مصلاه انتظرنا ان يكبر انصرف قال " على مكانكم ". فمكثنا على هييتنا حتى خرج الينا ينطف راسه ماء وقد اغتسل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #639
- Book Index
- 36
Grades
- -
