ஹதீஸ்கள்
#629
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போதும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர் பாங்கு சொல்ல முற்பட்டபோதும் அவரிடம் “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும்வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்.) எந்த அளவுக்கென்றால் மணல்மேடு களு(டைய உயரத்து)க்குச் சமமாக அவற்றின் நிழல் படிந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகி றது” என்று சொன்னார்கள் அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، قال حدثنا شعبة، عن المهاجر ابي الحسن، عن زيد بن وهب، عن ابي ذر، قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فاراد الموذن ان يوذن فقال له " ابرد ". ثم اراد ان يوذن فقال له " ابرد ". ثم اراد ان يوذن. فقال له " ابرد ". حتى ساوى الظل التلول فقال النبي صلى الله عليه وسلم {ان شدة الحر من فيح جهنم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #629
- Book Index
- 26
Grades
- -
