ஹதீஸ்கள்
#631
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ லைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) ஒத்த வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். - (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த (எங்கள் குடும்பத்)தவர் களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரி வித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். (நான் கட்டளையிட்டதைச் செய்யுமாறு) அவர் களை ஏவுங்கள்- என்று கூறி, சில விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். ‘அவற்றை நான் மனனமிட்டுள்ளேன்’ அல்லது ‘அவற்றை நான் மனனமிட வில்லை’- என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால், உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #631
- Book Index
- 28
Grades
- -