Loading...

Loading...
நூல்கள்
௧௭௨ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் சுவரில் (காறி உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய்மைப்படுத்தி)னார்கள். பிறகு, “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமது முகத்துக்கு எதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; தமது இடப் புறமோ பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال اخبرنا ابراهيم بن سعد، اخبرنا ابن شهاب، عن حميد بن عبد الرحمن، ان ابا هريرة، وابا، سعيد حدثاه ان رسول الله صلى الله عليه وسلم راى نخامة في جدار المسجد، فتناول حصاة فحكها فقال " اذا تنخم احدكم فلا يتنخمن قبل وجهه ولا عن يمينه، وليبصق عن يساره او تحت قدمه اليسرى
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் சுவரில் (காறி உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய்மைப்படுத்தி)னார்கள். பிறகு, “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமது முகத்துக்கு எதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; தமது இடப் புறமோ பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال اخبرنا ابراهيم بن سعد، اخبرنا ابن شهاب، عن حميد بن عبد الرحمن، ان ابا هريرة، وابا، سعيد حدثاه ان رسول الله صلى الله عليه وسلم راى نخامة في جدار المسجد، فتناول حصاة فحكها فقال " اذا تنخم احدكم فلا يتنخمن قبل وجهه ولا عن يمينه، وليبصق عن يساره او تحت قدمه اليسرى
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய் மைப்படுத்தி)னார்கள். பின்னர், “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட் டால், தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; இடப் புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، ان ابا هريرة، وابا، سعيد اخبراه ان رسول الله صلى الله عليه وسلم راى نخامة في حايط المسجد، فتناول رسول الله صلى الله عليه وسلم حصاة فحتها ثم قال " اذا تنخم احدكم فلا يتنخم قبل وجهه ولا عن يمينه، وليبصق عن يساره، او تحت قدمه اليسرى
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய் மைப்படுத்தி)னார்கள். பின்னர், “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட் டால், தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; இடப் புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، ان ابا هريرة، وابا، سعيد اخبراه ان رسول الله صلى الله عليه وسلم راى نخامة في حايط المسجد، فتناول رسول الله صلى الله عليه وسلم حصاة فحتها ثم قال " اذا تنخم احدكم فلا يتنخم قبل وجهه ولا عن يمينه، وليبصق عن يساره، او تحت قدمه اليسرى
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்கு முன்புறமோ தமக்கு வலப் புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும், தமக்கு இடப் புறமோ காலுக் கடியிலோ (துப்பலாம்). இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا شعبة، قال اخبرني قتادة، قال سمعت انسا، قال قال النبي صلى الله عليه وسلم " لا يتفلن احدكم بين يديه ولا عن يمينه، ولكن عن يساره او تحت رجله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளர் தொழுதுகொண்டிருக்கும்போது தம் இறைவனுடன் தான் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்புறத்திலும் உமிழ வேண்டாம்; தமக்கு வலப் பக்கத்தி லும் உமிழ வேண்டாம்.. எனினும், இடப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழட்டும். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، قال حدثنا قتادة، قال سمعت انس بن مالك، قال قال النبي صلى الله عليه وسلم " ان المومن اذا كان في الصلاة فانما يناجي ربه، فلا يبزقن بين يديه ولا عن يمينه، ولكن عن يساره او تحت قدمه
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் கிப்லா திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றால் அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)னார்கள். பிறகு “(தொழுகையி-ருக்கும்) ஒருவர் தமக்கு முன்புறமோ அல்லது வலப் புறமோ துப்பக் கூடாது எனத் தடை விதித்துவிட்டு, “எனினும், அவர் தமது இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற் குக் கீழேயோ உமிழட்டும்” என்று சொன் னார்கள். (இதன் மூன்றாவது அறிவிப்பாளரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இரண்டாவது அறிவிப்பாளர்) ஹுமைத் (ரஹ்) அவர்களிடம் நேரடியாகவும் இந்த ஹதீஸ் போன்றதைக் கேட்டுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا علي، قال حدثنا سفيان، حدثنا الزهري، عن حميد بن عبد الرحمن، عن ابي سعيد،. ان النبي صلى الله عليه وسلم ابصر نخامة في قبلة المسجد فحكها بحصاة، ثم نهى ان يبزق الرجل بين يديه او عن يمينه، ولكن عن يساره او تحت قدمه اليسرى. وعن الزهري سمع حميدا عن ابي سعيد نحوه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்கான பரிகாரமாகும். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، قال حدثنا قتادة، قال سمعت انس بن مالك، قال قال النبي صلى الله عليه وسلم " البزاق في المسجد خطيية، وكفارتها دفنها
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில், அவர் தொழுகை யில் இருக்கும்வரை அல்லாஹ்வுடன் தான் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டி ருக்கிறார். (அவ்வாறே) அவர் தமக்கு வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமக்கு இடப் புறமோ அல்லது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்துவிட்டு, அதை (மண்ணுக்குள்) புதைத்து விடட்டும்.31 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، قال حدثنا عبد الرزاق، عن معمر، عن همام، سمع ابا هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا قام احدكم الى الصلاة فلا يبصق امامه، فانما يناجي الله ما دام في مصلاه، ولا عن يمينه، فان عن يمينه ملكا، وليبصق عن يساره او تحت قدمه، فيدفنها
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லா திசையில் (உள்ள சுவரில்) சளியைக் கண்டார்கள். (இதைக் கண்ட) உடன் ‘நபி (ஸல்) அவர்களிடம் வெறுப்பு காணப்பட்டது’ அல்லது ‘இந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதும் அதன் மீது அவர்கள் காட்டிய கடுமையும் நேரடியாகத் தெரிந்தது.’ அப்போது அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது ‘தம் இறை வனுடனேயே உரையாடுகிறார்’. அல்லது ‘அவருக்கும் அவரது கிப்லாவுக்கும் இடையில் அவருடைய இறைவன் இருக்கிறான்’. எனவே, அவர் தமது கிப்லா திசையில் கட்டாயமாக உமிழ வேண்டாம்.. எனினும், அவர் தமக்கு இடப் புறமோ அல்லது வலப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். பிறகு, “தமது மேல்துண்டின் ஓர் ஓரத்தைப் பிடித்து அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் தேய்த்துக்காட்டி, “அல்லது அவர் இவ்வாறு செய்துகொள்ளலாம்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، قال حدثنا زهير، قال حدثنا حميد، عن انس، ان النبي صلى الله عليه وسلم راى نخامة في القبلة فحكها بيده، وريي منه كراهية او ريي كراهيته لذلك وشدته عليه وقال " ان احدكم اذا قام في صلاته فانما يناجي ربه او ربه بينه وبين قبلته فلا يبزقن في قبلته، ولكن عن يساره او تحت قدمه ". ثم اخذ طرف ردايه فبزق فيه، ورد بعضه على بعض، قال " او يفعل هكذا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதுதான் என் கிப்லா திசை (என்பதால் எனக்குப் பின்னால் நின்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக்கொண்டி ருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பணிதலும் (சஜ்தாவும்) உங்களது குனிதலும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى على خشوعكم ولا ركوعكم، اني لاراكم من وراء ظهري
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். பின்னர் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி தொழுகையைப் பற்றியும் (அதன் முக்கிய நிலைகளில் ஒன்றான) ருகூஉ (குனிதல்) பற்றியும் (அவற்றைக் குறைவின்றி நிறைவேற்றுமாறு) கூறினார்கள். அப்போது, “(உங்களை முன்புறமாக) நான் காண்பதைப் போன்றே, எனது முதுகுக்குப் பின்புற மாகவும் உங்களை நான் காண்கிறேன்” என்று கூறினார்கள்.32 அத்தியாயம் :
حدثنا يحيى بن صالح، قال حدثنا فليح بن سليمان، عن هلال بن علي، عن انس بن مالك، قال صلى بنا النبي صلى الله عليه وسلم صلاة ثم رقي المنبر، فقال في الصلاة وفي الركوع " اني لاراكم من ورايي كما اراكم
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே ‘ஹஃப்யா’ எனும் இடத்தி-ருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘ஸனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்றாகும். மெ-யவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே அந்த ‘ஸனிய்யத்துல் வதா’வி-ருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல்வரை பந்தயம் வைத்தார்கள். (இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இந்தப் பந்தயங்களில் கலந்துகொண்ட வர்களில் ஒருவராக இருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم سابق بين الخيل التي اضمرت من الحفياء، وامدها ثنية الوداع، وسابق بين الخيل التي لم تضمر من الثنية الى مسجد بني زريق، وان عبد الله بن عمر كان فيمن سابق بها
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனி-ருந்து (கணிசமான) நிதி கொண்டுவரப் பட்டது. நபி (ஸல்) அவர்கள், “இதைப் பள்ளிவாச-ல் கொட்டிவையுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வங்களிலேயே அதிகமானதாக இருந்தது.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப்பார்க்காமல் தொழுகைக் காகச் சென்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு அந்தச் செல்வம் நோக்கி வந்து (அதன் அருகில்) அமர்ந்துகொண்டு ஒருவர் விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ர் போரில் தங்களால் கைது செய்யப்பட்டபின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப்போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் செல்ல முனைந்தார்கள். அவர் களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை எனக்கு இதைத் தூக்கிவிடச் சொல்லுங் கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (நான் யாரிடமும் சொல்லமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீங்களாவது என் (தோள்)மீது தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள். பிறகு அதி-ருந்து சிறிதளவைக் கொட்டிவிட்டு. பிறகு அதைத் தூக்கிச் செல்ல முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை.) எனவே, (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கி விடுமாறு இவர்களில் ஒருவரிடம் கூறுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (கூறமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். “நீங்களாவது என் (தோள்)மீது இதைத் தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள். பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதி-ருந்து இன்னும் சிறிதளவைக் கீழே கொட்டிவிட்டு, அதைத் தூக்கி தம் தோள்கள்மீது வைத்துக்கொண்டு நடக்கலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசை யைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார்கள அங்கு அந்த நிதியி-ருந்து ஒரேயொரு திர்ஹம்கூட எஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இடத்தைவிட்டு எழுந்தார்கள். அத்தியாயம் :
وقال ابراهيم عن عبد العزيز بن صهيب، عن انس رضى الله عنه قال اتي النبي صلى الله عليه وسلم بمال من البحرين فقال " انثروه في المسجد ". وكان اكثر مال اتي به رسول الله صلى الله عليه وسلم، فخرج رسول الله صلى الله عليه وسلم الى الصلاة، ولم يلتفت اليه، فلما قضى الصلاة جاء فجلس اليه، فما كان يرى احدا الا اعطاه، اذ جاءه العباس فقال يا رسول الله، اعطني فاني فاديت نفسي وفاديت عقيلا، فقال له رسول الله صلى الله عليه وسلم " خذ ". فحثا في ثوبه، ثم ذهب يقله فلم يستطع فقال يا رسول الله، اومر بعضهم يرفعه الى. قال " لا ". قال فارفعه انت على. قال " لا ". فنثر منه، ثم ذهب يقله، فقال يا رسول الله، اومر بعضهم يرفعه على. قال " لا ". قال فارفعه انت على. قال " لا ". فنثر منه، ثم احتمله فالقاه على كاهله ثم انطلق، فما زال رسول الله صلى الله عليه وسلم يتبعه بصره حتى خفي علينا، عجبا من حرصه، فما قام رسول الله صلى الله عليه وسلم وثم منها درهم
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களைப் பள்ளிவாச-ல் கண்டேன். அவர்களுடன் மக்கள் சிலரும் இருந்தனர். (அவர்களுக்கு முன்னால் சென்று) நான் நின்றேன். அப்போது அவர்கள் என்னிடம், “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “உணவு அருந்துவதற்காகவா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், “எழுந்திருங்கள்” என்று சொல்-விட்டு நடந்தார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் முன்னால் நடந்தேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن اسحاق بن عبد الله، سمع انسا، قال وجدت النبي صلى الله عليه وسلم في المسجد معه ناس فقمت، فقال لي " ارسلك ابو طلحة " قلت نعم. فقال " لطعام ". قلت نعم. فقال لمن حوله " قوموا ". فانطلق وانطلقت بين ايديهم
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் மற்றோர் ஆடவனை (தகாத உறவு கொண்ட நிலையில் இருக்க)க் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்று விடலாமா?” என்று கேட்டார். (இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இரு வரும் ‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.) எனவே, பள்ளிவாசலுக்குள் அத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அப்போது நான் அந்த இடத்தில் (நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தேன். அத்தியாயம் :
حدثنا يحيى، قال اخبرنا عبد الرزاق، قال اخبرنا ابن جريج، قال اخبرني ابن شهاب، عن سهل بن سعد، ان رجلا، قال يا رسول الله، ارايت رجلا وجد مع امراته رجلا ايقتله فتلاعنا في المسجد وانا شاهد
இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எனது வீட்டில் ஓர் இடத்தில் தொழுவித்து, அந்த இடத்தை எனது தொழுமிடமாக்க வருமாறு நான் அழைத்ததன் பேரில்) நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். (வீட்டுக்குள் வந்ததும்) “உமது வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் (குறிப்பிட்ட) ஓர் இடத்தைக் காட்டியதும், (அந்த இடத்தில் நின்று) நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர்’ கூறி(த் தொழலா)னார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، قال حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن محمود بن الربيع، عن عتبان بن مالك، ان النبي صلى الله عليه وسلم اتاه في منزله فقال " اين تحب ان اصلي لك من بيتك ". قال فاشرت له الى مكان، فكبر النبي صلى الله عليه وسلم وصففنا خلفه، فصلى ركعتين
மஹ்மூத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி களில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்)போய்விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக இருந்து) தொழுகை நடத்திவருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழ வேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே நான் செய்வேன்” என்று கூறினார்கள். இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (மறு நாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன். வீட்டில் நுழைந்ததும். உட்காராமலேயே, “உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். அப்போது நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்துவைத்திருந்த ‘கஸீரா’ எனும் (கஞ்சி வகை) உணவி(னை உட்கொள்வத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். (நபியவர்களின் வருகையை அறிந்த) அப்பகுதி மக்களில் கணிசமானோர் வீட்டில் வந்து குழுமிவிட்டனர். அப்போது அவர்களில் ஒருவர், ‘மா-க் பின் துகைஷின்’ அல்லது ‘இப்னு துக்ஷுன்’ எங்கே என்று கேட்டார். மற்றொருவர், “அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை)” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் அன்பை நாடி, அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்-விட்டிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறிவிட்டு, “அவர் (மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் (அவர்கள்மீது) அபிமானம் கொண்டிருப்பதையும் காண் கிறோம்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று யார் சொன்னாரோ அவர்மீது அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் பனூ சா-ம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களின் பிரமுகர்களில் ஒருவருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களிடம் மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அன்னார் சொன்ன ஹதீஸை ஹுஸைன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் உறுதிப்படுத்தி னார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அங்கத்) தூய்மை செய்யும்போதும் தலைவாரும்போதும் செருப்பணியும்போதும் தம் செயல்கள் ஒவ்வொன்றிலும் இயன்ற வரை வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதையே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن الاشعث بن سليم، عن ابيه، عن مسروق، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يحب التيمن ما استطاع في شانه كله في طهوره وترجله وتنعله
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் உம்மு சலமா (ரலி) அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனி யாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் உள்ள ஒரு கிறித்தவ ஆலயம் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவரது சமாதியின் மீது வழிபாட்டுத் தலம் ஒன்றைக் கட்டி, அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தான் மறுமை நாளில் அல்லாஹ் விடம் மக்களிலேயே மிகவும் மோசமான வர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا يحيى، عن هشام، قال اخبرني ابي، عن عايشة، ان ام حبيبة، وام سلمة ذكرتا كنيسة راينها بالحبشة فيها تصاوير، فذكرتا للنبي صلى الله عليه وسلم فقال " ان اوليك اذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا، وصوروا فيه تلك الصور، فاوليك شرار الخلق عند الله يوم القيامة
حدثنا سعيد بن عفير، قال حدثني الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، قال اخبرني محمود بن الربيع الانصاري، ان عتبان بن مالك وهو من اصحاب رسول الله صلى الله عليه وسلم ممن شهد بدرا من الانصار انه اتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، قد انكرت بصري، وانا اصلي لقومي، فاذا كانت الامطار سال الوادي الذي بيني وبينهم، لم استطع ان اتي مسجدهم فاصلي بهم، ووددت يا رسول الله انك تاتيني فتصلي في بيتي، فاتخذه مصلى. قال فقال له رسول الله صلى الله عليه وسلم " سافعل ان شاء الله ". قال عتبان فغدا رسول الله صلى الله عليه وسلم وابو بكر حين ارتفع النهار، فاستاذن رسول الله صلى الله عليه وسلم فاذنت له، فلم يجلس حتى دخل البيت ثم قال " اين تحب ان اصلي من بيتك ". قال فاشرت له الى ناحية من البيت، فقام رسول الله صلى الله عليه وسلم فكبر، فقمنا فصفنا، فصلى ركعتين ثم سلم، قال وحبسناه على خزيرة صنعناها له. قال فثاب في البيت رجال من اهل الدار ذوو عدد فاجتمعوا، فقال قايل منهم اين مالك بن الدخيشن او ابن الدخشن فقال بعضهم ذلك منافق لا يحب الله ورسوله. فقال رسول الله صلى الله عليه وسلم " لا تقل ذلك، الا تراه قد قال لا اله الا الله. يريد بذلك وجه الله ". قال الله ورسوله اعلم. قال فانا نرى وجهه ونصيحته الى المنافقين. قال رسول الله صلى الله عليه وسلم " فان الله قد حرم على النار من قال لا اله الا الله. يبتغي بذلك وجه الله ". قال ابن شهاب ثم سالت الحصين بن محمد الانصاري وهو احد بني سالم وهو من سراتهم عن حديث محمود بن الربيع، فصدقه بذلك