ஹதீஸ்கள்
#422
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களைப் பள்ளிவாச-ல் கண்டேன். அவர்களுடன் மக்கள் சிலரும் இருந்தனர். (அவர்களுக்கு முன்னால் சென்று) நான் நின்றேன். அப்போது அவர்கள் என்னிடம், “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “உணவு அருந்துவதற்காகவா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், “எழுந்திருங்கள்” என்று சொல்-விட்டு நடந்தார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் முன்னால் நடந்தேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #422
- Book Index
- 72
Grades
- -