ஹதீஸ்கள்
#423
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் மற்றோர் ஆடவனை (தகாத உறவு கொண்ட நிலையில் இருக்க)க் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்று விடலாமா?” என்று கேட்டார். (இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இரு வரும் ‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.) எனவே, பள்ளிவாசலுக்குள் அத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அப்போது நான் அந்த இடத்தில் (நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தேன். அத்தியாயம் :
حدثنا يحيى، قال اخبرنا عبد الرزاق، قال اخبرنا ابن جريج، قال اخبرني ابن شهاب، عن سهل بن سعد، ان رجلا، قال يا رسول الله، ارايت رجلا وجد مع امراته رجلا ايقتله فتلاعنا في المسجد وانا شاهد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #423
- Book Index
- 73
Grades
- -
