ஹதீஸ்கள்
#424
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எனது வீட்டில் ஓர் இடத்தில் தொழுவித்து, அந்த இடத்தை எனது தொழுமிடமாக்க வருமாறு நான் அழைத்ததன் பேரில்) நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். (வீட்டுக்குள் வந்ததும்) “உமது வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் (குறிப்பிட்ட) ஓர் இடத்தைக் காட்டியதும், (அந்த இடத்தில் நின்று) நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர்’ கூறி(த் தொழலா)னார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، قال حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن محمود بن الربيع، عن عتبان بن مالك، ان النبي صلى الله عليه وسلم اتاه في منزله فقال " اين تحب ان اصلي لك من بيتك ". قال فاشرت له الى مكان، فكبر النبي صلى الله عليه وسلم وصففنا خلفه، فصلى ركعتين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #424
- Book Index
- 74
Grades
- -
