Loading...

Loading...
நூல்கள்
௧௮௨ ஹதீஸ்கள்
அப்பாஸ் (பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?” என்று கேட்டேன்.145 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا ابو عوانة، عن عبد الملك، عن عبد الله بن الحارث بن نوفل، عن العباس رضى الله عنه انه قال للنبي صلى الله عليه وسلم هل نفعت ابا طالب بشىء
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அப்போது நபி அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில்) ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்பான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (அதைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களி டையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன், அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்பர். அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்” என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் ‘அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று’ என்பதாகவே இருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முட்களைப் போன்றிருக்கும். “கருவேலமர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறைமறுப்பு உள்ளிட்ட) தம் (தீய) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார். (இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக்கொள்பவரும் இருப்பார். இறுதியாக இறைவன், தன் அடியார் களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிகூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான். அப்போது அவர்களை வெளியேற்று மாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனங்கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள்மீது ‘மாஉல் ஹயாத்’ எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். அப்போது அல்லாஹ் “(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அவர் “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அதற்குப் பிறகு “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக!” என்பார் அவர். அதற்கு இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்” என்பான். அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல் லாத வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார். இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!” என்று கூறுவார். பின்னர் இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!” என்று கேட்பான். அதற்கு “என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!” என்று இறைவன் சிரிக்கும்வரை பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப்பெறும்வரை ஆசைப்பட்டு (தம் விருப்பங்களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்பான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதர்தான் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.147 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرني سعيد، وعطاء بن يزيد، ان ابا هريرة، اخبرهما عن النبي صلى الله عليه وسلم. وحدثني محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عطاء بن يزيد الليثي، عن ابي هريرة، قال قال اناس يا رسول الله هل نرى ربنا يوم القيامة فقال " هل تضارون في الشمس، ليس دونها سحاب ". قالوا لا يا رسول الله. قال " هل تضارون في القمر ليلة البدر، ليس دونه سحاب ". قالوا لا يا رسول الله. قال " فانكم ترونه يوم القيامة كذلك، يجمع الله الناس فيقول من كان يعبد شييا فليتبعه، فيتبع من كان يعبد الشمس، ويتبع من كان يعبد القمر، ويتبع من كان يعبد الطواغيت، وتبقى هذه الامة فيها منافقوها، فياتيهم الله في غير الصورة التي يعرفون فيقول انا ربكم. فيقولون نعوذ بالله منك، هذا مكاننا حتى ياتينا ربنا، فاذا اتانا ربنا عرفناه فياتيهم الله في الصورة التي يعرفون فيقول انا ربكم. فيقولون انت ربنا، فيتبعونه ويضرب جسر جهنم ". قال رسول الله صلى الله عليه وسلم " فاكون اول من يجيز، ودعاء الرسل يوميذ اللهم سلم سلم، وبه كلاليب مثل شوك السعدان، اما رايتم شوك السعدان ". قالوا بلى يا رسول الله. قال " فانها مثل شوك السعدان، غير انها لا يعلم قدر عظمها الا الله، فتخطف الناس باعمالهم، منهم الموبق، بعمله ومنهم المخردل، ثم ينجو، حتى اذا فرغ الله من القضاء بين عباده، واراد ان يخرج من النار من اراد ان يخرج، ممن كان يشهد ان لا اله الا الله، امر الملايكة ان يخرجوهم، فيعرفونهم بعلامة اثار السجود، وحرم الله على النار ان تاكل من ابن ادم اثر السجود، فيخرجونهم قد امتحشوا، فيصب عليهم ماء يقال له ماء الحياة، فينبتون نبات الحبة في حميل السيل، ويبقى رجل مقبل بوجهه على النار فيقول يا رب قد قشبني ريحها واحرقني ذكاوها، فاصرف وجهي عن النار فلا يزال يدعو الله. فيقول لعلك ان اعطيتك ان تسالني غيره. فيقول لا وعزتك لا اسالك غيره. فيصرف وجهه عن النار، ثم يقول بعد ذلك يا رب قربني الى باب الجنة. فيقول اليس قد زعمت ان لا تسالني غيره، ويلك ابن ادم ما اغدرك. فلا يزال يدعو. فيقول لعلي ان اعطيتك ذلك تسالني غيره. فيقول لا وعزتك لا اسالك غيره. فيعطي الله من عهود ومواثيق ان لا يساله غيره، فيقربه الى باب الجنة، فاذا راى ما فيها سكت ما شاء الله ان يسكت، ثم يقول رب ادخلني الجنة. ثم يقول اوليس قد زعمت ان لا تسالني غيره، ويلك يا ابن ادم ما اغدرك فيقول يا رب لا تجعلني اشقى خلقك. فلا يزال يدعو حتى يضحك، فاذا ضحك منه اذن له بالدخول فيها، فاذا دخل فيها قيل تمن من كذا. فيتمنى، ثم يقال له تمن من كذا. فيتمنى حتى تنقطع به الاماني فيقول له هذا لك ومثله معه ". قال ابو هريرة وذلك الرجل اخر اهل الجنة دخولا
அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட ஹதீஸை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அறிவித்தபோது, அவர்கள்) உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறியபோதுதான், அபூசயீத் (ரலி) அவர்கள் “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இதைப் போன்று இன்னொரு மடங்கு” என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள். அத்தியாயம் :
قال عطاء وابو سعيد الخدري جالس مع ابي هريرة، لا يغير عليه شييا من حديثه حتى انتهى الى قوله " هذا لك ومثله معه ". قال ابو سعيد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " هذا لك وعشرة امثاله ". قال ابو هريرة حفظت " مثله معه
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثني يحيى بن حماد، حدثنا ابو عوانة، عن سليمان، عن شقيق، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم " انا فرطكم، على الحوض
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” எனக் கூறப்படும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
وحدثني عمرو بن علي، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن المغيرة، قال سمعت ابا وايل، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال "انا فرطكم، على الحوض، وليرفعن رجال منكم ثم ليختلجن دوني فاقول يا رب اصحابي. فيقال انك لا تدري ما احدثوا بعدك". تابعه عاصم عن ابي وايل. وقال حصين عن ابي وايل عن حذيفة عن النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்.151 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن عبيد الله، حدثني نافع، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " امامكم حوض كما بين جرباء واذرح
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (108:1ஆவது வசனத்திலுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து நன்மைகளையும் குறிக்கும்” என்று தெரிவித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அவற்றில் ஒன்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூபிஷ்ர் ஜஅஃபர் பின் அபீவஹ்ஷிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், “சிலர் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள ஒரு நதியாகும் என்று கூறுகின்றனரே!” என்று கேட்டேன். அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத் திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று சொன்னார்கள்.152 அத்தியாயம் :
حدثني عمرو بن محمد، حدثنا هشيم، اخبرنا ابو بشر، وعطاء بن السايب، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنه قال الكوثر الخير الكثير الذي اعطاه الله اياه. قال ابو بشر قلت لسعيد ان اناسا يزعمون انه نهر في الجنة. فقال سعيد النهر الذي في الجنة من الخير الذي اعطاه الله اياه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.153 இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا نافع بن عمر، عن ابن ابي مليكة، قال قال عبد الله بن عمرو قال النبي صلى الله عليه وسلم " حوضي مسيرة شهر، ماوه ابيض من اللبن، وريحه اطيب من المسك، وكيزانه كنجوم السماء، من شرب منها فلا يظما ابدا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிலடங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثني ابن وهب، عن يونس، قال ابن شهاب حدثني انس بن مالك رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال (ان قدر حوضي كما بين ايلة وصنعاء من اليمن، وان فيه من الاباريق كعدد نجوم السماء)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘வாசனை’யா (தீப்)? ‘மண்ணா’ (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا همام، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم. وحدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس بن مالك، عن النبي صلى الله عليه وسلم قال " بينما انا اسير في الجنة اذا انا بنهر حافتاه قباب الدر المجوف قلت ما هذا يا جبريل قال هذا الكوثر الذي اعطاك ربك. فاذا طينه او طيبه مسك اذفر ". شك هدبة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப் படுவார்கள். அப்போது நான், “(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அதற்கு இறைவன், “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்” என்பான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا وهيب، حدثنا عبد العزيز، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " ليردن على ناس من اصحابي الحوض، حتى عرفتهم اختلجوا دوني، فاقول اصحابي. فيقول لا تدري ما احدثوا بعدك
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள் வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا محمد بن مطرف، حدثني ابو حازم، عن سهل بن سعد، قال قال النبي صلى الله عليه وسلم " اني فرطكم على الحوض، من مر على شرب، ومن شرب لم يظما ابدا، ليردن على اقوام اعرفهم ويعرفوني، ثم يحال بيني وبينهم
(அறிவிப்பாளர்) அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியுற்றுக் கொண்டிருந்த நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் “இவ்வாறுதான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக அறிவிப்பதை உறுதியாக நான் கேட்டுள்ளேன்: “(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்” என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள். அத்தியாயம் :
قال ابو حازم فسمعني النعمان بن ابي عياش، فقال هكذا سمعت من، سهل فقلت نعم. فقال اشهد على ابي سعيد الخدري لسمعته وهو يزيد فيها " فاقول انهم مني. فيقال انك لا تدري ما احدثوا بعدك. فاقول سحقا سحقا لمن غير بعدي ". وقال ابن عباس سحقا بعدا، يقال سحيق بعيد، واسحقه ابعده
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وقال احمد بن شبيب بن سعيد الحبطي حدثنا ابي، عن يونس، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة، انه كان يحدث ان رسول الله صلى الله عليه وسلم قال " يرد على يوم القيامة رهط من اصحابي فيحليون عن الحوض فاقول يا رب اصحابي. فيقول انك لا علم لك بما احدثوا بعدك، انهم ارتدوا على ادبارهم القهقرى
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத் திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான். இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஷுஐப் பின் அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்” என்றும், அறிவிப்பாளர் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது. இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، قال اخبرني يونس، عن ابن شهاب، عن ابن المسيب، انه كان يحدث عن اصحاب النبي، صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم قال " يرد على الحوض رجال من اصحابي فيحليون عنه فاقول يا رب اصحابي. فيقول انك لا علم لك بما احدثوا بعدك، انهم ارتدوا على ادبارهم القهقرى ". وقال شعيب عن الزهري كان ابو هريرة يحدث عن النبي صلى الله عليه وسلم فيجلون. وقال عقيل فيحليون. وقال الزبيدي عن الزهري عن محمد بن علي عن عبيد الله بن ابي رافع عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தின் அருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி) ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம்) “எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்றேன். அவர் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் “(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன். அவர், “இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல்போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக்கொள்வார்கள் என நான் கருதவில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني ابراهيم بن المنذر، حدثنا محمد بن فليح، حدثنا ابي قال، حدثني هلال، عن عطاء بن يسار، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " بينا انا قايم اذا زمرة، حتى اذا عرفتهم خرج رجل من بيني وبينهم فقال هلم. فقلت اين قال الى النار والله. قلت وما شانهم قال انهم ارتدوا بعدك على ادبارهم القهقرى. ثم اذا زمرة حتى اذا عرفتهم خرج رجل من بيني وبينهم فقال هلم. قلت اين قال الى النار والله. قلت ما شانهم قال انهم ارتدوا بعدك على ادبارهم القهقرى. فلا اراه يخلص منهم الا مثل همل النعم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது மிம்பர் (சொற்பொழிவு மேடை) எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.155 அத்தியாயம் :
حدثني ابراهيم بن المنذر، حدثنا انس بن عياض، عن عبيد الله، عن خبيب، عن حفص بن عاصم، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " ما بين بيتي ومنبري روضة من رياض الجنة، ومنبري على حوضي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல் கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்.156 இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرني ابي، عن شعبة، عن عبد الملك، قال سمعت جندبا، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " انا فرطكم، على الحوض
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து, “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர் களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டி யிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்று தான் அஞ்சுகின்றேன்” என்று சொன் னார்கள்.157 அத்தியாயம் :
حدثنا عمرو بن خالد، حدثنا الليث، عن يزيد، عن ابي الخير، عن عقبة رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على اهل احد صلاته على الميت، ثم انصرف على المنبر فقال " اني فرط لكم، وانا شهيد عليكم، واني والله لانظر الى حوضي الان، واني اعطيت مفاتيح خزاين الارض او مفاتيح الارض واني والله ما اخاف عليكم ان تشركوا بعدي، ولكن اخاف عليكم ان تنافسوا فيها
ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (‘அல்கவ்ஸர்’) எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது “(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’ நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا حرمي بن عمارة، حدثنا شعبة، عن معبد بن خالد، انه سمع حارثة بن وهب، يقول سمعت النبي صلى الله عليه وسلم وذكر الحوض فقال " كما بين المدينة وصنعاء