ஹதீஸ்கள்
#6576
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” எனக் கூறப்படும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
وحدثني عمرو بن علي، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن المغيرة، قال سمعت ابا وايل، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال "انا فرطكم، على الحوض، وليرفعن رجال منكم ثم ليختلجن دوني فاقول يا رب اصحابي. فيقال انك لا تدري ما احدثوا بعدك". تابعه عاصم عن ابي وايل. وقال حصين عن ابي وايل عن حذيفة عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6576
- Book Index
- 164
Grades
- -
