Loading...

Loading...
நூல்கள்
௧௮௨ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு.2 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، اخبرنا عبد الله بن سعيد هو ابن ابي هند عن ابيه، عن ابن عباس رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ ". قال عباس العنبري حدثنا صفوان بن عيسى، عن عبد الله بن سعيد بن ابي هند، عن ابيه، سمعت ابن عباس، عن النبي صلى الله عليه وسلم مثله
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போருக்காக அகழ் தோண் டிக்கொண்டிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள், “இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்செம்மைப்படுத்துவாயாக!” என்று (பாடியபடி) சொன்னார்கள்.3 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن معاوية بن قرة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " اللهم لا عيش الا عيش الاخرة، فاصلح الانصار والمهاجرة
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்துகொண்டிருந் தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, “இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்மன்னிப்பாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.4 அத்தியாயம் :
حدثني احمد بن المقدام، حدثنا الفضيل بن سليمان، حدثنا ابو حازم، حدثنا سهل بن سعد الساعدي، كنا مع رسول الله صلى الله عليه وسلم في الخندق وهو يحفر ونحن ننقل التراب ويمر بنا فقال " اللهم لا عيش الا عيش الاخره، فاغفر للانصار والمهاجره ". تابعه سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم مثله
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும்விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.7 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " موضع سوط في الجنة خير من الدنيا وما فيها، ولغدوة في سبيل الله او روحة خير من الدنيا وما فيها
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:) “நீ மாலை நேரத்தை அடைந்து விட்டால் காலைவேளையை எதிர்பார்க் காதே! நீ காலைவேளையை அடைந்து விட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க் காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.9 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا محمد بن عبد الرحمن ابو المنذر الطفاوي، عن سليمان الاعمش، قال حدثني مجاهد، عن عبد الله بن عمر رضى الله عنهما قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال " كن في الدنيا كانك غريب، او عابر سبيل ". وكان ابن عمر يقول اذا امسيت فلا تنتظر الصباح، واذا اصبحت فلا تنتظر المساء، وخذ من صحتك لمرضك، ومن حياتك لموتك
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந் தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம்வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் ‘சூழ்ந்துள்ள’ அல்லது ‘சூழ்ந்துகொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்பு களாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனை களாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.11 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، اخبرنا يحيى، عن سفيان، قال حدثني ابي، عن منذر، عن ربيع بن خثيم، عن عبد الله رضى الله عنه قال خط النبي صلى الله عليه وسلم خطا مربعا، وخط خطا في الوسط خارجا منه، وخط خططا صغارا الى هذا الذي في الوسط، من جانبه الذي في الوسط وقال " هذا الانسان، وهذا اجله محيط به او قد احاط به وهذا الذي هو خارج امله، وهذه الخطط الصغار الاعراض، فان اخطاه هذا نهشه هذا، وان اخطاه هذا نهشه هذا
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு “(சதுரத்தின் நடுவி லுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனது ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம்-ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا همام، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس، قال خط النبي صلى الله عليه وسلم خطوطا فقال " هذا الامل وهذا اجله، فبينما هو كذلك اذ جاءه الخط الاقرب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும்வரை வாழ்நாளைத் தள்ளிப்போட்ட பிறகும் அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبد السلام بن مطهر، حدثنا عمر بن علي، عن معن بن محمد الغفاري، عن سعيد بن ابي سعيد المقبري، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم فقال " اعذر الله الى امري اخر اجله حتى بلغه ستين سنة ". تابعه ابو حازم وابن عجلان عن المقبري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا ابو صفوان عبد الله بن سعيد، حدثنا يونس، عن ابن شهاب، قال اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا يزال قلب الكبير شابا في اثنتين في حب الدنيا، وطول الامل ". قال الليث حدثني يونس وابن وهب عن يونس عن ابن شهاب قال اخبرني سعيد وابو سلمة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا هشام، حدثنا قتادة، عن انس رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " يكبر ابن ادم ويكبر معه اثنان حب المال، وطول العمر ". رواه شعبة عن قتادة
மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த வாளி ஒன்றில் (கிணற்று) நீர் எடுத்து (தமது வாயில் ஊற்றி வளத்திற்காக என்மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15 இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا معاذ بن اسد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، قال اخبرني محمود بن الربيع، وزعم، محمود انه عقل رسول الله صلى الله عليه وسلم وقال وعقل مجة مجها من دلو كانت في دارهم
(தொடர்ந்து) மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: இத்பான் பின் மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டேன்: (ஒருநாள்) அதிகாலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது “அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவர்மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
قال سمعت عتبان بن مالك الانصاري، ثم احد بني سالم قال غدا على رسول الله صلى الله عليه وسلم فقال " لن يوافي عبد يوم القيامة يقول لا اله الا الله. يبتغي به وجه الله، الا حرم الله عليه النار
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமைகாப்பாரானால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا يعقوب بن عبد الرحمن، عن عمرو، عن سعيد المقبري، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يقول الله تعالى ما لعبدي المومن عندي جزاء، اذا قبضت صفيه من اهل الدنيا، ثم احتسبه الا الجنة
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, ஜிஸ்யா (காப்பு)வரி வசூலித்துக்கொண்டுவருமாறு பஹ் ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, “அபூஉபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டுவந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள். அன்சாரிகள் “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்ச வில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்ட தைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.17 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني اسماعيل بن ابراهيم بن عقبة، عن موسى بن عقبة، قال ابن شهاب حدثني عروة بن الزبير، ان المسور بن مخرمة، اخبره ان عمرو بن عوف وهو حليف لبني عامر بن لوى كان شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم اخبره ان رسول الله صلى الله عليه وسلم بعث ابا عبيدة بن الجراح الى البحرين ياتي بجزيتها، وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح اهل البحرين، وامر عليهم العلاء بن الحضرمي، فقدم ابو عبيدة بمال من البحرين، فسمعت الانصار بقدومه فوافته صلاة الصبح مع رسول الله صلى الله عليه وسلم فلما انصرف تعرضوا له فتبسم حين راهم وقال " اظنكم سمعتم بقدوم ابي عبيدة، وانه جاء بشىء ". قالوا اجل يا رسول الله. قال " فابشروا واملوا ما يسركم، فوالله ما الفقر اخشى عليكم، ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا، كما بسطت على من كان قبلكم، فتنافسوها كما تنافسوها وتلهيكم كما الهتهم
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்த வர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவு கோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத் திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகின்றேன்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن عقبة بن عامر، ان رسول الله صلى الله عليه وسلم خرج يوما فصلى على اهل احد صلاته على الميت، ثم انصرف الى المنبر فقال " اني فرطكم وانا شهيد عليكم، واني والله لانظر الى حوضي الان، واني قد اعطيت مفاتيح خزاين الارض او مفاتيح الارض واني والله ما اخاف عليكم ان تشركوا بعدي، ولكني اخاف عليكم ان تنافسوا فيها
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெளிக்கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப்பொருட்கள்(தான் அவை)” என்று பதிலளித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்தப் பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் விளைவிக்கின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறுபுடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால் நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.19 இந்த (உலகின்) செல்வம் இனிமை யானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடு கின்றாரோ அவருக்கு அது நல்லுதவி யாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.20 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اكثر ما اخاف عليكم ما يخرج الله لكم من بركات الارض ". قيل وما بركات الارض قال " زهرة الدنيا ". فقال له رجل هل ياتي الخير بالشر فصمت النبي صلى الله عليه وسلم حتى ظننا انه ينزل عليه، ثم جعل يمسح عن جبينه فقال " اين السايل ". قال انا. قال ابو سعيد لقد حمدناه حين طلع ذلك. قال " لا ياتي الخير الا بالخير، ان هذا المال خضرة حلوة، وان كل ما انبت الربيع يقتل حبطا او يلم، الا اكلة الخضرة، اكلت حتى اذا امتدت خاصرتاها استقبلت الشمس، فاجترت وثلطت وبالت، ثم عادت فاكلت، وان هذا المال حلوة، من اخذه بحقه ووضعه في حقه، فنعم المعونة هو، ومن اخذه بغير حقه، كان الذي ياكل ولا يشبع
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் “தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டாவது தலைமுறையை மட்டும் சொன்னார்களா? அல்லது மூன்றாவது தலைமுறையையும் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.- (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் சாட்சியமளிக்க தாமாக முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கோரமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். (அதிகமாக உண்டு குடித்ததால்) பருமன் (தொந்தி) ஏற்படும் நிலை அவர்களிடையே தோன்றும். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، قال سمعت ابا جمرة، قال حدثني زهدم بن مضرب، قال سمعت عمران بن حصين رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ". قال عمران فما ادري قال النبي صلى الله عليه وسلم بعد قوله مرتين او ثلاثا " ثم يكون بعدهم قوم يشهدون ولا يستشهدون، ويخونون ولا يوتمنون، وينذرون ولا يفون ويظهر فيهم السمن
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தார் வருவர். அவர்களுடைய சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும் அவர்களுடைய சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " خير الناس قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، ثم يجيء من بعدهم قوم تسبق شهادتهم ايمانهم وايمانهم شهادتهم
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தமது வயிற்றில் ஏழுமுறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் தம(து நன்மைகளு)க்குஇவ்வுலக வாழ்க்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திடாத நிலையில் (வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப்பின்) நாங்கள் (வீடுகட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைத் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு இவ்வுலக(ச் செல்வ)த்தைப் பெற்றுள்ளோம்.23 அத்தியாயம் :
حدثني يحيى بن موسى، حدثنا وكيع، حدثنا اسماعيل، عن قيس، قال سمعت خبابا، وقد اكتوى يوميذ سبعا في بطنه وقال لولا ان رسول الله صلى الله عليه وسلم نهانا ان ندعو بالموت لدعوت بالموت، ان اصحاب محمد صلى الله عليه وسلم مضوا ولم تنقصهم الدنيا بشىء، وانا اصبنا من الدنيا ما لا نجد له موضعا الا التراب
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: மறைந்துவிட்ட எம் தோழர்(கள் புரிந்த நன்மை)களை இவ்வுலக வாழ்க்கை எந்த வகையிலும் பாதித்துவிடவில்லை. (ஆனால்,) அவர்களுக்குப் பிறகு நாங்கள் (நிறைய) செல்வத்தைப் பெற்றுள்ளோம். (வீடு கட்டத் தேவைப் படும்) மண்ணைத் தவிர, அதைச் செலவழிக்க வேறு துறை எதையும் நாங்கள் காணவில்லை. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، عن اسماعيل، قال حدثني قيس، قال اتيت خبابا وهو يبني حايطا له فقال ان اصحابنا الذين مضوا لم تنقصهم الدنيا شييا، وانا اصبنا من بعدهم شييا، لا نجد له موضعا الا التراب