ஹதீஸ்கள்
#6428
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் “தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டாவது தலைமுறையை மட்டும் சொன்னார்களா? அல்லது மூன்றாவது தலைமுறையையும் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.- (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் சாட்சியமளிக்க தாமாக முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கோரமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். (அதிகமாக உண்டு குடித்ததால்) பருமன் (தொந்தி) ஏற்படும் நிலை அவர்களிடையே தோன்றும். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، قال سمعت ابا جمرة، قال حدثني زهدم بن مضرب، قال سمعت عمران بن حصين رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ". قال عمران فما ادري قال النبي صلى الله عليه وسلم بعد قوله مرتين او ثلاثا " ثم يكون بعدهم قوم يشهدون ولا يستشهدون، ويخونون ولا يوتمنون، وينذرون ولا يفون ويظهر فيهم السمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6428
- Book Index
- 17
Grades
- -
