Loading...

Loading...
நூல்கள்
௧௮௨ ஹதீஸ்கள்
ஹாரிஸா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) கூறியதாவது: “ (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம், “அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று வினவினார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்” என (நபி-ஸல்) அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள். அத்தியாயம் :
وزاد ابن ابي عدي عن شعبة، عن معبد بن خالد، عن حارثة، سمع النبي صلى الله عليه وسلم قوله حوضه ما بين صنعاء والمدينة. فقال له المستورد الم تسمعه قال الاواني. قال لا. قال المستورد ترى فيه الانية مثل الكواكب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்பேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும். இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள். “நீங்கள் உங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் சென்றுகொண்டிருந்தீர்கள்” (23:66) எனும் வசனத்திற்கு, ‘வந்த வழியே திரும்பிச் செல்லல்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، عن نافع بن عمر، قال حدثني ابن ابي مليكة، عن اسماء بنت ابي بكر رضى الله عنهما قالت قال النبي صلى الله عليه وسلم " اني على الحوض حتى انظر من يرد على منكم، وسيوخذ ناس دوني فاقول يا رب مني ومن امتي. فيقال هل شعرت ما عملوا بعدك والله ما برحوا يرجعون على اعقابهم ". فكان ابن ابي مليكة يقول اللهم انا نعوذ بك ان نرجع على اعقابنا او نفتن عن ديننا. {اعقابكم تنكصون} ترجعون على العقب