Loading...

Loading...
நூல்கள்
௨௫௭ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றார் கள். அவர்களுடன் நாங்களும் நின்றோம். அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி, “இறைவா! எனக்கும் முஹம்மது அவர்களுக்கும் (மட்டும்) அருள் புரிவாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே!” என்று பிரார்த்தித்தார். (தொழுது முடித்து) நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம், “விசாலமானதை, அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கிவிட்டாயே!’ என்று சொன்னார் கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني ابو سلمة بن عبد الرحمن، ان ابا هريرة، قال قام رسول الله صلى الله عليه وسلم في صلاة وقمنا معه، فقال اعرابي وهو في الصلاة اللهم ارحمني ومحمدا، ولا ترحم معنا احدا. فلما سلم النبي صلى الله عليه وسلم قال للاعرابي " لقد حجرت واسعا ". يريد رحمة الله
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்புசெலுத்துவதிலும், இரக்கம்காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின் றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا زكرياء، عن عامر، قال سمعته يقول سمعت النعمان بن بشير، يقول قال رسول الله صلى الله عليه وسلم " ترى المومنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد اذا اشتكى عضوا تداعى له ساير جسده بالسهر والحمى
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا ابو عوانة، عن قتادة، عن انس بن مالك، عن النبي صلى الله عليه وسلم قال " ما من مسلم غرس غرسا فاكل منه انسان او دابة الا كان له صدقة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (படைப்பினங்கள்மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني زيد بن وهب، قال سمعت جرير بن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " من لا يرحم لا يرحم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னி டம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக் கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்.35 இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن ابي اويس، قال حدثني مالك، عن يحيى بن سعيد، قال اخبرني ابو بكر بن محمد، عن عمرة، عن عايشة رضى الله عنها عن النبي صلى الله عليه وسلم قال " ما زال يوصيني جبريل بالجار حتى ظننت انه سيورثه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن منهال، حدثنا يزيد بن زريع، حدثنا عمر بن محمد، عن ابيه، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه
அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عاصم بن علي، حدثنا ابن ابي ذيب، عن سعيد، عن ابي شريح، ان النبي صلى الله عليه وسلم قال " والله لا يومن، والله لا يومن، والله لا يومن ". قيل ومن يا رسول الله قال " الذي لا يامن جاره بوايقه ". تابعه شبابة واسد بن موسى. وقال حميد بن الاسود وعثمان بن عمر وابو بكر بن عياش وشعيب بن اسحاق عن ابن ابي ذيب، عن المقبري، عن ابي هريرة،
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால்குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.36 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثنا سعيد هو المقبري عن ابيه، عن ابي هريرة، قال كان النبي صلى الله عليه وسلم يقول " يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ابو الاحوص، عن ابي حصين، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من كان يومن بالله واليوم الاخر فلا يوذ جاره، ومن كان يومن بالله واليوم الاخر فليكرم ضيفه، ومن كان يومن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت
அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக் குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்தோம்பல் மூன்று தினங்களாகும். அதற்குமேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني سعيد المقبري، عن ابي شريح العدوي، قال سمعت اذناى، وابصرت، عيناى حين تكلم النبي صلى الله عليه وسلم فقال " من كان يومن بالله واليوم الاخر فليكرم جاره، ومن كان يومن بالله واليوم الاخر فليكرم ضيفه جايزته ". قال وما جايزته يا رسول الله قال " يوم وليلة والضيافة ثلاثة ايام، فما كان وراء ذلك فهو صدقة عليه، ومن كان يومن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு” என்று பதிலளித்தார்கள்.37 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال اخبرني ابو عمران، قال سمعت طلحة، عن عايشة، قالت قلت يا رسول الله ان لي جارين فالى ايهما اهدي قال " الى اقربهما منك بابا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா நற்கர்மமும் தர்மமே.38 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عياش، حدثنا ابو غسان، قال حدثني محمد بن المنكدر، عن جابر بن عبد الله رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " كل معروف صدقة
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “தம் இரு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று சொன்னார்கள். மக்கள், “ ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். மக்கள், “(இதை இயலாமையாலோ சோம்பóனாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்போது ‘நல்லதை’ அல்லது ‘நற்கர்மத்தை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்” என்றார்கள். “(இதையும்) அவர் செய்யாவிட்டால்?” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்குத் தர்மம் ஆகும்” என்றார்கள்.39 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا سعيد بن ابي بردة بن ابي موسى الاشعري، عن ابيه، عن جده، قال قال النبي صلى الله عليه وسلم " على كل مسلم صدقة ". قالوا فان لم يجد قال " فيعمل بيديه فينفع نفسه ويتصدق ". قالوا فان لم يستطع او لم يفعل قال " فيعين ذا الحاجة الملهوف ". قالوا فان لم يفعل قال " فيامر بالخير ". او قال " بالمعروف ". قال فان لم يفعل قال " فيمسك عن الشر، فانه له صدقة
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு, “பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக்கொள்ளுங்கள்)” என்றார்கள். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) இருமுறை (குறிப்பிட்டார்கள்) என்பதில் சந்தேகமில்லை. (மூன்றாவது முறை குறிப்பிட்டார்களா என்பதில்தான் சந்தேகம் உள்ளது)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال اخبرني عمرو، عن خيثمة، عن عدي بن حاتم، قال ذكر النبي صلى الله عليه وسلم النار، فتعوذ منها واشاح بوجهه، ثم ذكر النار، فتعوذ منها، واشاح بوجهه قال شعبة اما مرتين فلا اشك ثم قال " اتقوا النار ولو بشق تمرة، فان لم تجد فبكلمة طيبة
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள்மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில் லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، عن عروة بن الزبير، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت دخل رهط من اليهود على رسول الله صلى الله عليه وسلم فقالوا السام عليكم. قالت عايشة ففهمتها فقلت وعليكم السام واللعنة. قالت فقال رسول الله صلى الله عليه وسلم " مهلا يا عايشة، ان الله يحب الرفق في الامر كله ". فقلت يا رسول الله ولم تسمع ما قالوا قال رسول الله صلى الله عليه وسلم " قد قلت وعليكم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டுவரப்பட்டு) அது சிறுநீர்மீது ஊற்றப்பட்டது.41 அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس بن مالك، ان اعرابيا، بال في المسجد، فقاموا اليه، فقال رسول الله صلى الله عليه وسلم " لا تزرموه ". ثم دعا بدلو من ماء فصب عليه
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن ابي بردة، بريد بن ابي بردة قال اخبرني جدي ابو بردة، عن ابيه ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " المومن للمومن كالبنيان، يشد بعضه بعضا ". ثم شبك بين اصابعه. وكان النبي صلى الله عليه وسلم جالسا اذ جاء رجل يسال او طالب حاجة اقبل علينا بوجهه فقال " اشفعوا فلتوجروا، وليقض الله على لسان نبيه ما شاء
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن ابي بردة، بريد بن ابي بردة قال اخبرني جدي ابو بردة، عن ابيه ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " المومن للمومن كالبنيان، يشد بعضه بعضا ". ثم شبك بين اصابعه. وكان النبي صلى الله عليه وسلم جالسا اذ جاء رجل يسال او طالب حاجة اقبل علينا بوجهه فقال " اشفعوا فلتوجروا، وليقض الله على لسان نبيه ما شاء
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘யாசகர்’ அல்லது ‘தேவையுடையவர்’ எவரேனும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தால் நபியவர்கள் (தம் தோழர்களை நோக்கி, “இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்; அல்லாஹ் தன் தூதருடைய நாவால் தான் நாடியதை நிறைவேற்றுவானாக” என்று கூறுவார்கள்.44 அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم انه كان اذا اتاه السايل او صاحب الحاجة قال " اشفعوا فلتوجروا، وليقض الله على لسان رسوله ما شاء
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, “அவர்கள் இயற்கையாகவும் அருவருப் பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் கூறினார்கள்.45 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن سليمان، سمعت ابا وايل، سمعت مسروقا، قال قال عبد الله بن عمرو. حدثنا قتيبة، حدثنا جرير، عن الاعمش، عن شقيق بن سلمة، عن مسروق، قال دخلنا على عبد الله بن عمرو حين قدم مع معاوية الى الكوفة فذكر رسول الله صلى الله عليه وسلم فقال لم يكن فاحشا ولا متفحشا، وقال قال رسول الله صلى الله عليه وسلم " ان من اخيركم احسنكم خلقا